RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அவன் வாழ்வில்....

பிஞ்சு வயதிலே
பஞ்சு மனத்தோடு
கொஞ்சிடும் தாய்ப் பாசத்தை
வஞ்சகமாகவே பாதியில்
ஏன் பரித்தாய்....

நெஞ்சில் தலை சாய்த்து-அன்பு
தஞ்சமே தானாகி
பஞ்சமே அறியமால் பார்த்திட்ட
தந்தையின் உயிரையும்
தட்டியே ஏன் பரித்தாய்...

கோடி சொந்தம் கூடியே இருந்தாலும்
கொட்டியே கொடுத்தாலும் பாசத்தை
ஓடியே போய்விடுமா?
உள்ளத்து வேதனை.....

உதிரத்தில் உருவான
உரிமைதனை நீ பறிக்க
உடன் பிறப்பய் வந்த-அவன்
உறவுகளை தான் பிரிந்தான்
வாழ்வின் உயர்வுக்காய்...

வாழ்க்கை என்பதே
ஆகுதீ ஆனாதால்
தினம் வெந்து வெந்து
நெந்த உள்ளம்
சோதனைகள் பல தாண்டி
அணையா அகல் விளக்காய்
வாழ்வை ஆக்குதற்காய்
அயராது உழைக்கின்றான்
பேனா முனை தாங்கி
பொழுது பகல் பாரமால்...

வெளியுலகை பார்ப்பதற்காய்
தாய் கருவறையில்
அமர்ந்திட்டான் அன்று
வெளியுலகம் திரும்பி
தாய் நாட்டை பார்த்ததனால்
காவல்துரையறையில்
அமர்ந்திட்டான் இன்று...

விதி வரைந்த பாதையிலும்
சதி விரித்த வலையிலிலும்
பாதிப்புக்கள் பல தாண்டி
சாதிக்க முனைபவனை-இனியும்
சோதிக்காது விட்டுவிடு
வாதிக்க வரவில்லை-மனம்
வருந்தியே கேட்கின்றேன்
ஜோதியாய் ஒளிக்கட்டும்-விடியும்
தேதிகள் ஒவ்வொன்றும்
அவன் வாழ்வில்.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் இன்று....

உறவாக வந்ததால்
உருவான காதல்
வினையாக மாறி
விளையாடுது அவள் வாழ்வில்...

கர்வமே கொண்ட அவள்
கண்ணில் பட்ட அவன்
உருவத்தை பார்த்து
உள்ளத்தை கொடுத்தாள்

அன்பை பொழிந்து
அல்லும் பகலும் மகிழ்ந்து
இன்பம் சுமக்க வைத்த அவன் - இன்று
இன்னல் விளைவித்தே
விலை கோரி நிற்கின்றான் - அவன்
வீசிட்ட வலையிலே
வீழ்ந்த அவள் வாழ்விற்கு....

லட்சங்கள் கொடுத்து விட்டால்
இலட்சணமாய் கை பிடிப்பேன்
இல்லையெனில்
வெட்டியே விட்டுவேன்
வேறொருவன் கை பிடித்து
சென்று விடு..

உதிரத்தில் உருவான
உறவென்பதால்-அவன்
உள்ளத்து ஊணத்தை உணராமலே
உள்ளத்தை கொடுத்தவள் - அவன்
உரைதிட்ட வார்த்தையினால்
உணர்வுகள் சிதைந்து
உதிரமே விழி நீராக
உதடுகள் ஊமையாகி
உளநிலை அற்றவளாய்
உலா வருகிறாள் ஊர் மத்தியிலே?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புது வாழ்வு....

சுற்றும் முற்றும் பார்த்தேன்
சொந்த பந்தம் சேர்ந்து
சாதி மதம் அறிந்து
சாதகமும் பார்த்து
சேர்ந்து வைத்த உறவு இது

உரிமைதனை வாங்கி
உறவுகளை கொடுத்து
உணர்வுகளை பரிமாறி
உள்ளங்களை சுமந்து
இல்லறத்தில் இணைந்தது..

உள்ளத்தில் உள்ளவற்றை
எல்லைகளை வரையறுத்து
ஏங்கங்களை தனதாக்கி
ஏற்ற இறக்கம் பல கொண்டே
எப்படியோ பரிமாறியது

நாளாக நாளாக
நலத்திலே அன்பு பெருகு
நல்லதும் கெட்டதும்
நாணமின்றி நடமாடுதிங்கே

அன்பு பெருக
அந்தஸ்து ஒழிய
ஆசைகள் ஒடுங்கியே
அழகிய நந்தவனமாய்
பூத்துக் குலுங்கியது - அவர்
புது வாழ்வு.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை துரோகி.......

அழகான வாழ்க்கைக்கென
அரும்பி வரும் ஆசைகளை
அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள்
அயலவர் உறவினர் உதவியுடன்
உற்றதுணை இதுவெனவே
உறுதியளித்திட்ட பின்னரே
உள்ளம் கொடுத்தால்
அவனுக்காய்........

அன்பாய் கதை பேசி
ஆசைகள் பல பகிர்ந்து
ஆறுதல்கள் பல கூறி
ஐந்து நிமிட இடைவெளியில்
ஆறு தடவை அழைப்பெடுத்து
அழகாயே வளர்ந்து வந்த
அவர்கள் தம் உறவு

நீண்ட நேரம் கதை பேசி
நெடுங்காலமதை திட்டமிட்டு
புரிந்துணர்வு கொண்டே
புது திட்டம் தீட்டி -பூமியிலே
புகழ் பரப்பி வாழ்ந்திடவே..

கனவுகள் பல சுமந்து
கற்பனைகள் பல உடனே
தன்னவனை காண சென்றவளை
தவிக்க விட்டதன்
காரணம் தான் என்ன?
புரியாமல் புலம்புவது - அவள்
உருவம் மட்டுமல்ல
புடைசூழ்ந்த சொந்தமுமே

நாக்கு புரள்கிறது
அவன் வேசம் விலகியதால்
நாகரீக உடையணிந்து
நடப்பாய் திரிந்தாலும்
நடைப் பிணமே இனி
நாள் எல்லாம் அவன்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்பின் ஆழம்......

அடுத்து அடுத்து ஆண்டுகள்
பல கடந்த போதிலும்
அரும்பி வரும் சந்ததியும்
அறியுதில்லை இந்த
அன்பின் ஆழமதை....

ஆறறிவு கொண்டே
அற்புதங்கள் பல நிகழ்த்த
அகிலமதில் அவதாரித்த
ஆண்டவனின் குழந்தைகள் நாம்...

தாய்க்கு வருகிறது
தன் குழந்தை என்பதால் அன்பு
தந்தைக்கு தொடருது
தன் உதிரம் என்பதால் உறவு...

ஒரு வயிறறில் பிறந்ததனால்
உருவான சொந்தம்
உடன் பிறப்பு...

உரிமையை தனதாக்கி
உறவினை எதிர்பார்த்து
உருவான பந்தத்தில்
இனைந்திட்ட இரு இதயங்கள்
கணவன் மனைவி...

ஏற்றங் கண்டிடவே
எதிர்பார்பு பலகொண்டே
எல்லைகள் பல தாண்டி
ஏமாந்த உறவென்றை
ஏற்றிட்டேன் நன்பனாய்...

வதந்திகளைக் கண்டிங்கே
வாக்கு வாதம் கொண்டே நான்
வர்ணஜலம் கொண்ட
வாழ்க்கை பாதையிதை
வர்ணிக்க முணையவில்லை...

வாசல்படி தடக்கியதற்காய்
வாழும் இல்லமதை
வேண்டாமென விட்டுவிட்டு
வேறு மனை செல்வதுவா?

படிக்கல்லை பார்ந்தே நாம்
பக்குவமாய் கடந்து வந்தால்
கவலை மறந்தே நாம்
காலமெல்லம் வாழ்ந்திடலாம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்த்துக்கள்....

வளமான வருங்கால வாழ்க்கைக்காய்
தினம் தினம் அவரவர் போடும்
வண்ணக் கோலங்கள் தான்
எத்தனை எத்தனை?

கண்களில் களம் அமைத்து
கண்னாளே பல கதை பேசி
காதலிலே கலந்தவராம்

உதட்ரோர புன்னகையால்
ஊமை தாமாகி
உள்ளம் கொடுத்தவராம்

பதினெட்டு வயதினிலே
பள்ளி பருவத்திலே உருவான
பருவ காதலராம்

உயர் கல்வி படித்து
உத்தியோகம் தேடிச் சென்று
ஊதியத்தை மட்டுமன்றி
உற்ற துணையும் தேடி வந்தவராம்

பல நாள் பயணங்களில்
பக்க துணையாய் இருந்ததினால்
வாழ்க்கைத் துணையானவராம்

தவறி வந்து அழைப்பதினை
தடை செய்யாமையினால்
தன்னவரானவராம்

இடையராது முயற்சியினால்
இடையூறு மத்தியிலும்
இணைய வழி வந்து
இதயத்தில் இடம் பிடித்தவராம்

மனதினிலே இருத்திவிட்டு
மொழியினை மெளனமாக்கி
மெய் மறந்து வாழ்பவராம்

உணர்விலே பிறந்து
உயிரினிலே கலந்து
உள்ளங்கள் பரிமாறியும்
உரைக்க முடியாமல் இருப்பவராம்

முகமே தெரியாமல்
முகவரி அறியாமல்
புள்ளிகள் பல வைத்து
புதிராய் வாழ்பவராம்

என்னென்னோ விதங்களில்
பாசம் என்னும் வலைவீச்சி
இதயங்கள் இடமாறி
காதலில் கலந்தவரே - உங்கள்
எண்ணகள் தழைத்தோங்கி
எதிர்பார்ப்பு நிறைவேற
வளமான வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் மலர்....

 மரத்தடியில் ஒன்று கூடி
மணப்பரப்பில் வீடுகட்டி
மகிழ்ந்த பருவம் கழிகையிலே
மனதினிலே துளிர்விடுதே
மறுபட்ட எண்ணம் பல

வண்ணப் பருவங்களில் வரும்
எண்ணங் குவியல்களில்
சின்னக் கனவுகளில்-அங்கே
அழகாய் காதல் மலர்கிறதே

அரும்பு வயதினிலே
அரியப் பருவத்திலே
எறுப்புகள் போல்
துள்லித் திரிகையிலே
எதிர் பாரமலே அங்கே
அன்பெனும் பெயரினிலே
காதல் மலர்கிறதே

பள்ளி வயதினிலே
பருவ மாற்றத்தால்
பார்வைகள் இடம்மாற
எதிர் பாலர் மேல் கொண்ட
பாசத்தின் வடிவினிலே
காதல் மலர்கிறதே

இருபது வயதினிலே
இளமையின் பிடியினிலே
இரு உள்ளங்கள் அங்கே
இதயங்கள் பாரிமாறியதால்
இடையூறு பல தாண்டி இனிய
காதல் மலர்கிறதே

ஆடிய ஆட்டம் ஓய்ந்து
ஆசைகள் பலவும் தீர்ந்து
அனுபவங்கள் பல பெற்று
ஆதாரவு பெற்ற இடத்தே
அன்பினை நாடியதால்
ஆறுபது வயதிலும் அருமையாய்
காதல் மலர்கிறதே

அன்பு என்னும் அருவியிலே
அடித்து வந்த அணுவளவு ஆலம்விதை
ஆகாயம் வரை வளர்ந்து
விழுதுகள் பல பரப்புவது போல்
அகிலமதில் எங்கும் காதல்
அணைத்து உயிரிலும்
படர்ந்து மணம் பரப்புகிறதே

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாலிப வடுக்கள்.....

வாழ்க்கை என்னும் பயணத்தில்
வாலிப நெஞ்சங்களின்
வடு நிறைந்த வழிகளை
வடிக்க முடிந்திடுமா?
வார்த்தைகளை கொண்டிங்கு

பள்ளி பருவத்தில்
அள்ளி வரும் கனவுகளை
தள்ளியே வைத்து விட்டு
துள்ளி ஓடுகிறான்
சல்லி பணத்திற்காய்

இல்ல நிலையறிந்து
இல்லாமை போக்கிடவே
உள்ளத்தை பணம்
உள்ளவர்க்கே உரிமையாக்கிடுவர்

தேடியே வேலை தினம்
வாடியே போனதினால்
நாடி வந்த உறவெல்லாம்
ஓடியே போயினவே

பாசத்தோடு பாடியாடி
வாசம் வீசும் வசந்தங்களை
தோசம் கொண்டே - எம்
தேசம் வந்தவர்கள்
நாசம் செய்து போயினரே

அன்பினை அரவணைக்கும்
அகிலம் இதாம் - ஆனால்
அன்பு கொண்ட நெஞ்சங்களில் - தினம்
ஆகுதி வளர்கின்றதே

இளமை காலமதை
இனிமையாக்கிடவே
வழமைக்கு மாறாக
வடம் பிடித்தே
வாழ்வை வளம் படுத்திடுவோம்
வாரீரே வலிப நெஞ்சங்களே.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா

அம்மா என்றிடும்
அரும் வார்த்தை
அகிலத்தில் ஒளிக்குது
அலையாக அதில்
அடங்கிடும் அர்த்தங்கள் ஏராளம்
அறிந்தவர் புரிந்வர் ஏராளம்
அவர் அணைத்திடும்
அன்பில் அழும் குழந்தை
அடங்குதே அழுகையை
அக மகிழ்ந்து
உருளுகின்ற உலகினிலே
பருவ வயதினிலே
உருவங்கள் மாறியே
உறவுகள் நிலைக்குதிங்கே - ஆனால்
அத்தனையும் அன்னை
அன்பிற்கு அடுத்தபடியே
வாழ்வில் என் நாளுமே....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS