RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி......


தேசத்தின் விடியலில் வீசும்
வாசத்தை சுவாசித்திட
பாசறை நோக்கி - எதிரி
படையினை வீழ்த்தி - தம்
தேகத்தை விதைத்து - எம்
தேசியம் காத்திட்ட - மாவீரர்
மாண்புற போற்றி வணங்குவோம்

எம் இனத்தின் உண்மை சிரிப்புக்காய்
உணர்வினை உழைப்பாக்கி
உதிரத்தை உரமாக்கி - ஓர்
உறவின் கீழ் உருவான - தமிழ்
அன்னையின் சுகந்திர கருவானது - என்றும்
நிலையாக வீறுநடை போட
எம் இன ஒருமை என்றும்
அந்நிய சக்தியால் அழியாமல் இருக்கனும்

விடுதலைக்கான விடியலை வழியினை
எம் விழி தேடிட
நிலை தடுமாறது நெஞ்சினில் திடத்துடன்
நேர்வழி நடந்து நியாயத்தை நிலைநாட்டிவோம்

வலிமை பொருத்திய வல்லரசு நாடுகளே
எம் தேசத்தின் தாகத்தினால்
வாதிட்டு கேட்கின்றோம்
தாயின் மடியில் தலை சாய்க்கும் உரிமை
மகனிற்கு இல்லையாம் ஆனால்!
மர்ம மனிதனுக்கு உண்டாம்
இது தான் நாம் நாட்டு ஆட்சி
எங்கே உம் மனச்சாட்டி?

ஆயுதம் முன்னே
அடிமை விலங்குகளாய்
அவதியுறும் எம் மக்கள்
அடக்குமுறை ஒழிந்து
சுகந்திர காற்றை சுவாசிக்கும் வரை
ஒன்றுபட்டு ஓயாது உழைக்கனும் நாம் எல்லாம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பு

இறப்புக்கும் பிறப்புக்கும்
இடையிலே இடர்படும்
இன்னல்களே இவ்வுலகுக்கு
இறைவன் அனுப்பிய
இனிய தூதாம் நட்பு.

மகிழ்ச்சியும் இகழ்ச்சியும் - எம்
மனதினிலே இருக்குது
மற்றவர் கைகளில் இல்லையென
கலப்படமில்ல நம்பிக்கையூட்டும்
கருவுரு நம்பிக்கையூட்டு நட்பு.

அன்பின் அங்கமாய்
அதில் உயிர் தானுமாய்
அரவணைத்து ஆதரவூட்டியே
அகம் மகிழ்ந்து வாழ்ந்திட
அகிலமதில் அது வழிகாட்டுது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனித மனம்

நம்மிடம் பல குணம் - அதில்
நல்லது கெட்டது என
நாலு வகையும் உண்டு.

சொல்லிட முடியாதது சில
சிந்தைக்கே புரியாதது பல
எண்ணிடமுன்னமே
ஏதேதோ நிகழுதிங்கே....

அறிந்திட கருவியும் இல்லை
அகற்றிட மருந்தும் இல்லை
நிகழ்ந்த பின் வலிக்குது நெஞ்சம்
தஞ்சம் கொடுந்திடின் மீண்டும்
மிஞ்சுது அங்கே வஞ்சம்
கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல்

அதட்டி அடக்கிடின்
அங்கம் ஒடிந்த ஓர்
அபலையாய் அகம் துடிக்குது

புத்தியைக் கொண்டு
புலனாய்வு செய்ததில்
அறிந்து கொண்டேன்
புரிந்துணர்வு கொண்டு
பகிர்ந்து வாழ பழகுதலே
அத்தனைக்கும் அரு மருந்து...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்பு..

புரிந்துணர்வு கொண்டே
புரிந்து கொண்ட உள்ளங்கள்
பிறர் பரிந்த சொல்வதினால்
பிரிந்து செல்வதில்லை என்றும்

அகத்தினை நேசித்து - உண்மை
அன்பினை யாசித்து
அவனியில் வசிப்பவர்
அடுத்தவர் பேச்சுக்கு அஞ்சி
வஞ்சிக்க யோசிப்பதில்லை - அன்பு
நெஞ்சங்களை சோதித்து பார்க்க என்றும்

அடுத்தவர் பேச்சுக்காய்
அழியாத புனித அன்பை - நீவீர்
அடக்கி அடக்கியே தினம்
அடைமானம் வைக்காதீர் என்றும்

அன்றுதொட்டு வழங்கி வரும்
அநியாய எண்ணங்களுக்குள்
அடுத்து வரும் சந்ததியும்
அமிழ்ந்து அழியாதிருக்க
அன்பின் ஆழமதை
அகிலத்தில் பறைசாற்றும் இன்றே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

களவு

தொட்டில் பருவத்திலே
தெரியாமல் தொடங்கிறது களவு
எட்டத்தில் உள்ள எட்டாத பொருக்காய்
எத்தனிக்கும் எண்ணம்
தவிழ்ந்து செல்கையிலே
தட்டுப்படும் பொருள் எல்லாம்
தனக்கென தங்கி எடுப்பதும்
தம்மை அறியாமலே செய்யும் களவு

கண்ணில் பட்ட பொருள் எல்லாம்
பொறுக்கி வருகையிலே
எங்கிருந்து வந்ததென
எதிர்க் கேள்வி கேட்காமல்
அடிக்கி விளையாட அனுமதிக்கையில்
ஆரம்பிக்கிறது களவு

கண்டவுடன் கதறி அழ
கருத்தேதும் கூறாமல்
கடன் சொல்லி பொருள் வாங்கி
கண்ணீர் துடைந்திடும் - நிவீர்
கையெழுத்து போடுகிறீர் களவுக்கு

வீதியிலே யாரோ
தவற விட்ட பொருளை
விடலை அவன் வீட்டிற்கு எடுத்து வர
வியப்புடனே வாங்கி
விலை மதிப்பு பார்த்ததினால் - அன்று
விரட்டி விரட்டி பறிக்கின்றான்
வீதியில் செல்வோர்
விலைபுள்ள பொருளெள்ளம் இன்று

ஆடம்பர வாழ்வை எண்ணி அண்ணாந்து
அடுத்தவர் பொருள் மேல் ஆசை கொண்டு
அநீதிக்குள் மூழ்கி நீவீர்
அநாதையாய் அவஸ்தை படாதீர்

ஆசைகளை அளவாக்கி
தேவைகளை பூர்த்தி செய்து - உம்
தேவைகளால் சேகரியும் அன்பை - எக்
காலத்திலும் களவு நேராது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்வி - திருமதி


தூகலிக்கின்றது அவர்(கள்) உள்ளம் - தம்
குலம் விளக்க குழந்தையாய்
குவளையத்தில் அவதரித்த
குல விளக்கு அவள் என...

வான்பிளந்து செல்வமெல்லாம்
வாசல் வந்த மகிழ்ச்சி - இதனால்
வையத்தில் ஒவ்வொரு பெண்
பிறப்பினோடும் அவள்
நாமம் முன் சேர்கின்றது
சீர்பெருகும் செல்வி எனும் நாமம்...

அழகுசாதனமில்லாமலே
அலங்கரித்த அழகு வதனம்
சொல்லாமலே சோகத்தை கலைத்திடும்
சொல்லின் மென்மை
பொன்நகையோடு போட்டியிட்டு
பூமியில் இடம்பிடித்த
புன்னகை இத்தனையும்
பெண்மை அவள் பொக்கிசமாம்

விலை மதிக்க முடியாத
பெறுமதிகள் எத்தனையோ
அத்தனையும் தன வசமாய்
வசந்தகால புதுமலராய் - இதயத்தை
திருடியவன் உள்ளத்தில்
திடமாய் இடம் பிடித்து
புகுந்த வீட்டு வருமதியாய்
வாழ்வின் முழுமதியாய்
வையத்தில் விளங்கும் - திருமதி
இவளே அன்றைய செல்வி...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் மனம்..


செய்தி கேட்ட கணம் முதல்
சொல்ல முடியாத ஆனந்தத்தில்
துள்ளி்க் குதிக்குது அவள் உள்ளம்

உடன்பிறப்பின் வருகைக்காய்
உதிக்கின்ற கணம் ஒவ்வொன்றும்
காத்திருந்து காத்திருந்து
உருண்டோடிய இரண்டு ஆண்டுகளால்
உறைந்திட்ட அவள் உதிரத்தில் - இருந்து
ஓர் உற்சாற்கம் உற்றொடுத்து
அவள் உடல் எங்கும் பாய்கின்றது.

பாசமதை தினம் தினம்
பாசமாய் வீசும் நந்தவனமதில்
வாசம் செய்த இவள்
தூரம் வந்தினால் - மீண்டும்
நெருக்கிட்ட ஆனந்தத்தில்
நீச்சல் அடிக்குது அவள் மனம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவன் அன்பால்...

அன்பு அது அகத்தில் பெருக
அகம்பாவம் ஒழிந்ததினால்
விட்டுக் கொடுப்புக்கு
கட்டுப்பாடு சிறிதும் இன்றி
தாராளமாய் கிடைக்கிங்கு

வஞ்சமில்ல நெஞ்சமதில்
கஞ்சமில்லா அன்புதனை
பஞ்சமின்றி பொழித்ததினால்
வஞ்சி அவள் வாழ்வில் - என்றும்
தஞ்சம் நீ எனவே
நெஞ்சில் தலை சாய்த்தாள்

பாசத்தால் அரன் அமைத்து
புரிந்துணர்வால் காவல் செய்து
ஈருடல் ஓர் உயிராய் - இங்கு
உருவாக்கிய உயர் இராச்சியத்தால்
வெற்றி வாகை சூடினாள்
வாழ்க்கை என்னும் இலட்சியத்தில்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனம்...

இல்லாத உருவம் ஒன்று
பொல்லாத வேலையெல்லாம்
சொல்லாமல் செய்கிறதே
எல்லோரும் அறிவோமே

சொந்த இடம்மேதுமில்லை - அதற்கு
ஆதி அந்தம் ஏதுமில்லை
தந்து போகும் எண்ணகளை
வந்த இடம் தெரியாமல்

சிந்தை அதில் சேமித்த
முந்தை நினைவெல்லாம்
கத்தையாய் திரண்டு வந்து
பந்தைப் போல் சுழலுகின்ற
விந்தையில் இருந்து விடையறியாத
வித்தையும் அதன் வசமே

நன்மையும் தீமையும் சேர்ந்து
மென்மையாய் நகர்த்தி
என்னிலை வருனியும் மாந்தர்
தன்னிலை அறிந்து இவ்வூலகில்
நன்னிலை வாழ ஒவ்வொருவர்
உள்ளத்தி்ன் உள்ளும்
ஓயாமல் உழைக்குது மனம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கோபம்

அறியமுன் அவதரித்து
அமைதியை குலைத்து
அகிம்சையை சிதைந்து
அகங்காரத்தை நிலை நாட்டி
ஆழ்ந்த அன்பினைக்கூட 
அன்நொடியில் மழுங்கடிக்க செய்திடும்...

நினைத்ததை நெருக்க முடியாத
நிலையின் வெளிப்பாடா? - அல்ல
நினைக்க முக் கிடைத்திட செய்திடும்
நி்ர்ப்பந்தத்தின் செயற்பாடா?

ஆசைகளை அளவாக்கி
அதிகாரத்தை தனதாக்கி
அன்பை நிலையாக்க
அவரவர் உருவாக்கும்
மறுஉருவா கோவம்???

அநியாயம் அது பாவம்
அவரவர் மனதிற்கேற்ப
குணத்தினை தான் ஏற்று
குற்றவாளி என்று
கூண்டில் நிற்கின்றது 
மற்றவர் குதுகலத்திற்காய்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சந்திப்பு....

சிந்திக்க நேரமின்றி
சிறகடிக்குது மனது - உன்
சந்திப்பை எண்ணி...

சந்தேகம் பல கேட்க
சந்தர்ப்பம் பார்த்தே
சாந்தததை வரவழைத்து
சாதிக்கின்ற உதடுகள்...

எண்ணம் போல் வாழ்க்கை
எதிரிலே வருகின்ற
எதிர்பார்ப்புடனே
எடுத்து அடி வைக்கின்றாள்
எதிர்கால வாழ்வை சந்திக்க......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்த்துகின்றேன்.....

வையம் என்னும் பூந்தோப்பில்
வண்ண மலர்களாய் மொட்டவிழ்ந்து
வாழ்க்கை என்னும் பந்தமதில்
சொந்தமான உம் உறவில்
வசந்தம் வீசிடனும்  என்நாளும்...

உள்ளத்து  நல்ல எண்ணமெல்லாம்
பல வண்ணங்களாய் - உம்
இல்லத்தை அலங்கரிக்க
செல்வச்  செழிப்போடு
இனிய இன்பத்தின் இருப்பிடமாய்
இல்வாழ்வு சிறந்திடனும் என்நாளும்...

அன்பும் அறமும்
அல்லும் பகலும்
அழகாய் ஒளி வீசிடும்
ஆனந்த இல் வாழ்வு
அகிலத்தில் மென்மேலும் சிறக்க
ஆண்டவன் அருள் வேண்டி
அன்புடன் வாழ்த்துகின்றேன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பு...



ஊரு பேரு தெரியமால்
உருவேதும் அறியாமல்
உதட்டுவழி வார்த்தைகளில்
ஊற்றெடுத்த உறவு -இன்று
உயர்ந்து நிற்குது -இங்கு
உன்னத நட்பைச் சொல்லி....

உள்ளத்தில் கள்ளமில்லை
நெஞ்சமதில் வஞ்சமில்லை
நேர்மையினில் ஏழ்மையில்லை - இங்கு
நீதியினில் ஊனமின்றி
ஓளிவிட்டு ஓளிர்கிறது
உலகமதில் எங்கள் நட்பு...

இனிய நட்பிதற்க்காய்
இணையவழி அழைப்பெடுத்து
இனிதே தொடர்ந்து வந்து
ஈராறுமாத இறுதியின் பின்
இன்னொர் ஆண்டில் கால்பதித்திட்ட
இவ் நட்பு என்றும் தொடர்ந்திட
இறைவன் துணை நாடுகின்றோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வார்த்தை....




 வாய் பேசிடும் வார்த்தையதில்
வகை வகையாய் ஆழப்பதிந்த
ஆயிரம்  ஆயிரம் அர்த்தங்கள்
அறிந்தும் அறியாமலும்
அன்றாடம் அவரவர் வாழ்வில்
ஆதிக்கத்திற்க்கு அதுவே காரணமாகிறது...

வஞ்சமில்லா நெஞ்சமதில்
மிஞ்சியே இருக்கும் அன்பால்
தங்குதடை ஏதுமின்றி
தடம்புரண்டு வரும் வார்த்தையாதால்
தர்ம வழி காட்டியாய்
தரணியிலே தடம் பதித்தோர் பலர்..

கள்ளமதை உள்ளிருத்தி
வள்ளல் போல் வடிவம் தாங்கி
நல்லதெல்லாம் நஞ்சு ஆக்க
உள்ளமதில் உறுதி பூண்டே
சொல்லாலே உறவாடி
தள்ளாமல் படுகுழியில்
தானாயே விழவைக்கும்-அந்த
வல்லமையும் வார்த்தைக்கே..

எவ்வளவுதான் இருந்தாலும்
இயம்பியதை மீள எடுத்திடவோ
இன்றோடு மறந்திடவோ
அளவேதும் சொல்லிடவோ வார்த்தைக்கு
யாராலும் இயலாவில்லை இன்னும்..

அன்பாய் அணைத்திடவும்
ஆறுதலாய் தாலாட்டிடவும்
அனைத்திற்கும் அடித்தளமாய்
ஆணவத்தின் மறுவுருவாய்
ஆங்காங்கே வார்த்தை எங்கும்
அலைமோதி தவழ்கிறது......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவுகள்....



உறவு என்பது உலகில்
உருவான விதம் என்ன
உருவாகும் நிலை எது
உருமாறும் குணம் தான் யாது???

விதிக்கப்பட்ட விதிவிலக்கா
தொடர்ந்து வரும் தொடர்கதையா
விடைகான முடியாத-ஓர்
வினாபோல் ஆனா விடுகதையா
நிலைமாறும் உலகில்
நிறம் மாறும் ஓர் இனமா???

எத்தனை வரையறையென சொல்ல
எல்லை யெதுமில்லை இங்கே
தொல்லை என் எண்ணி
தொடர்பு அறுத்து விடுவோர் பலர்
வல்லமைதான் வாழ்க்கையென
வழி சொல்லிக் கொடுப்போர் சிலர்...

உறவாக இருந்த போதும்
உதறிவிடும் உறவுகளுக்கிடையே
உடலாக நாமிருக்க-எமது
உயிராக தமியங்கும் உயர்
உன்னத உறவுகளும் ஓர்வகையே...

உலகுக்கு எமைத்தந்து
உதிரத்தை உணவாக்கி
உளஉடல் உழைப்பாலே
எமைத் தாங்கும் எம் தெய்வங்களுக்கு
வகை நிலை சொல்ல-இந்த
வையத்தில் யாருமில்லை...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.......



பரந்த இந்த பூமியின்
பாகத்திலே ஓர் ஒளி
வருடிச் செல்லும் தென்றலிலும்
வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது..

வானத்து மதி வரவால்
விண்மீன்கள் சிரிப்பதுபோல்
வையகத்து உன் வரவால்
வம்சமே மகிழ்கிறது....

முகத்தினிலே புன்முறுவல்
குணத்தினிலே குழ்ந்தையுள்ளம்
எண்ணத்தில் நல்ல வண்ணம்-இது
என்நாளும் நிலைக்கனும்
உன் அகத்தினிலே......

உயர்ந்த குணம் அனைத்தையுமே
உனக்கு உரியதாக்கி
அன்பின் அவதாரமாய்-நீ
அகிலமதில் அவதரித்ததனால்
அனைத்துயிரும் அகம் மகிழ்ந்தனவே...

குழ்ந்தையாய் குவளயத்தில்
வசந்தம் வீசியே வந்துதித்த-உன்
வாழ்வில் என்நாளும்
இன்பமே பொங்கிட-நீ
இவ்வுலகில் உதித்திட்ட
இன்நன்நாளில் நானும்
நல்வாழ்த்துக் கூறுகிறேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை..

நாணயம் கொடுத்து
வாங்குவதில்லை நம்பிக்கை
முயற்சிக்கு துணையாய்
முன்னேற்ற பாதையில்
பயணத்தை தொடர
பயத்தினை தூரத்தி
உள்ளத்தில் இருந்து
உத்வேகத்துடனே உறுதியை
வழங்குமே நம்பிக்கை

இரவின் பின்பே
விடியல் என்பதும்
கிழக்கே சூரியன்
உதிக்கும் என்பதும்
பிறக்கும் உயிர்க்கு
ஓர் நாள் மரணம் என்பதும்
இயற்கையின் நீதியாய்
இறைவன் வகுந்த நம்பிக்கை

தன் தனையன் மீது வைத்த
தந்தை தாய் அன்பிலும்
கணவன் - மனைவி
காதலுக்கிடையிலும்
பாசத்தை கொடுத்தே
படருதே நம்பிக்கை

உள்ளத்தில் பிறந்து
உன்னை வளர்க்கிறது
உதிரத்தில் வளர்ந்து
உறவை பெருக்குது
இரு கைகள் இழந்திட்ட போதிலும்
இதயத்தில் நம்பிக்கை வைத்தால்
இன்புற வாழலாம்
இவ் வையத்தில் இணைந்தே....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உரிமை நிலைத்திடும்...



உதிரத்தில் எழுந்திட்ட
உணர்விணை உழைப்பாக்கி
உடலினை உரமாக்கி
உரிமைக்காய் போராடும்
உள்ளங்களோடு உறவான
உயிர்க்ளைப் பிரித்திட
இனவெறி கொண்டோர்
நிகழ்ந்திட்ட கொடூரத்தால்
கொதிக்குது நெஞ்சம்
தினம் தினம்............

முள்ளி வாய்க்காலோடு
முடிந்திட்டதாய் போர்
முரசு தட்டுவோரே சற்று
மூழ்கி யோசியுங்கள்!!

ஆசை ஆவல்கள்
அடையப் படமலே
துடிக்கத் துடிக்கத்
நீதிக்கு மாறாய்
நெரிக்கப்பட்ட உயிர்கள் அவை....

அவலம் நிறைந்த
அழுகுரல் ஒலியிலும்
அனலாய் பொழிந்திட்ட
குண்டு மழைச்சத்தத்தாலும்
அவசரப்பட்டு அகிலம் வந்து
அவலத்தைப் பார்த்த
குழந்தைகளின் குருதியிலும்....

தறி கெட்டுவந்து
தன்னிலைமை மறந்த
நெறி கெட்ட கூட்டத்தால்
கதறக் கதறக் கற்பழிக்கப்பட்ட
தங்கையுடன் பிறந்தவர்கள்
தாரத்தைத் துறந்தவர்கள்-சோக
தாகம் தீரவில்லை இன்னும்...

மூளைவளர்ச்சி குன்றிய பிள்ளை
முடங்கிக்கிடக்கும் தந்தை-என
உருவத்தால் உருக்குழைந்து
உயிர்வாழும் உறவுகள் நிலையால்
உறக்கமின்றி தவிக்கும் விழிகள்...

ஆடிப்பாடி வேலைசெய்து
அகம் மகிழ்ந்திருந்தவரை
அடைக்கப்பட்ட கம்பிகளின் பின்
அன்புறவுகளின் வரவுக்காயும்
அரைவயிற்றுக் கஞ்சிக்காயும்
அனல் கொதிக்கும் வெயிலில்
வெந்த காயமும் இன்னும் ஆரவில்லை...

உண்மைகள் வெளிவர
உணர்வுகள் பொங்கிட
உரிமையை வென்றிட
உழைததவர் உயிர் தியாகம்
உலகினில் நிலைத்திடும் என்றும்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதுதா(உ)ன் பாசமா???


பாசம் இது வெறும்
வேசம் என உனக்கு
படம் பிடித்துக் காட்டிட்டு
உறவாக உருவெடுத்து
உன்னிடத்தில் இடம் பிடித்த
உள்ளம் ஓன்று.....

பழகிவந்த பாதையிலே
பதிந்து வந்த சுவடுகள்
புழுதிபட்டே அழிந்திடுமென
அந்தநொடிவரை அறியாமலே
அன்பை வளர்த்துவிட்டாள்...

உற்சாகம் பொங்கிடவே
உறுதிதனை நிலைநாட்ட
அழைப்பெடுத்த அந்நொடியில்
உதடுகளை ஊமையாக்கி-என்
உண்மையன்பை ஊனமாக்கி
ஊதசினாப் படுத்திவிட்டான்.

அன்பினிலே அண்ணானாய்
துவண்டபோது தோழனாய்
கணனியுலகில் கைத்துணையாய்
காலமெல்லாம் கைகோப்பான்
என்பதெல்லாம் வெறும்
கனவாகிப் போனதுவே
கண்ணிமைக்கும் நேரத்திலே..

அன்பெனும் ஊற்றாக
உனை என்னி வாழ்ந்தவள்
உலர்ந்த காற்றில் மிதந்து வந்த
உவர்நீர் சிறுதுளியென்ற
உண்மை அதனை உன்
உறவால் உணர்ந்துகொண்டாள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வசந்தம் வீசிடவே........

வசந்தகால பருவமிதில்
மொட்டவிழ்ந்த மலர்கள் இவை
வாழ்க்கை என்னும் பந்தத்தில்
வாசம் வீசி இணைந்தவாம்

பரந்த இந்த பூமியினிலே
பாசம் என்னும் நீருற்றி
அன்புடனே அறம் வளர்த்து
அறுகுபோல் வேர் ஊன்றி
ஆழ மரமாய் நீவிர் வாழ...

நற் சங்கதி சொல்லியே
சந்ததம் பாடிட
நறுமணம் பொங்கவே - இவ்
இருமணம் இணைந்திட்ட
இனிய இன்நாளாய்
இனிவரும் நாட்களும் மலர
இறைவன் துணை வேண்டி
இனிதே வாழ்த்துகின்றோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மகளே...

வண்ணமலர் ஓவியமோ
வரைந்து வைத்த காவியமோ
எண்ணத்தை கொள்ளை கொள்ளும்
எழில் அனைத்தும் உன்னிடமே

சின்ன வண்ண மலராய்
புதுவசந்தம் வீசிட
புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்தவளே

வசந்தங்கள் எல்லாம்
தென்றலுடன் கலந்து - உன்
வாசலே நாடி வர
தேன் சுவை சொட்டியவே - உன்
வாழ்வு செழிக்கனுமே

வளம் பல பெற்று
வான்புகழ் பரப்பி
வையத்தில் நீ திகழ்ந்திட
வம்சம்மே சூழ்ந்துநின்று
வாழ்த்துதம்மா உன்னை..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க்கைப் பயணம்....

மனதினுள் திடத்துடன்
மதியினை திரட்டியே
விதிதனை வென்றிட
வாதிட்ட போதிலும்
காலத்தின் கதி இது
உனக்கென பதி
அவன் பாரினில்
படைதிட்ட போதிலே
விதிட்ட விதியது
பாசத்தில் புகுந்து
பாதிவழியிலே நிறுத்தி
புகட்டுது புத்தியை...

வழியேதும் தெரியாமல்
விழிமுடி சிந்தித்தே
பழியேதும் நெருக்காமல்
பகையெதும் தொடராமல்
இருப்பதற்காய் வாழ்கை - பயணத்தை
விதி வரைந்த பாதை
வழிதனிலே தொடர்கின்றாள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தியாகம்..

நிதானத்துடனே நெஞ்சம்
நேர்வழி செல்கையில்.
பிறர் நிம்மதிக்காக
தன் மதியை மாற்றி
தானக்கு தானே
துரோகியாகி
உள்ளம் வலிக்க
உணர்வுகள் பகைக்க
உதட்டினால் சிரித்து
ஊருக்காய் வாழ்வதா தியாகம்

உண்மைக்காய் வாதாடு
உரிமைக்காய் போராடு
உயர்வுக்கு வழி காட்டு
முயற்சிக்கு கை கொடு
வீழ்ச்சிக்கு விடை கொடுத்தே
விடியலை நோக்கி - உன்
வேகத்தை நகர்த்து
வெற்றியின் பின்னே
உருவடிக்கப்படும் உன்
உண்மைத் தியாகம்

கற்பனையில் கோட்டை கட்டி
கனவுலகில் அதில் வாழ்ந்து
தோள் கொடுக்க முடியாது
தோல்விதனை தனதாக்கி
கண்ணீரில் கதை வடிக்கும்
காவிய கரு அல்ல தியாகம்

உருவமே அல்லாத
உயிரிலும் மேலாக
உலகத்தை மதித்திடும்
உன்னத பண்பாம் தியாகம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் தோல்வி....

எண்ணத்தில் என்னை
கருவாய் கொண்டதினால்
உருவான அவனிடத்தில்
புரியாத புதிர் அதனை
புரிந்து கொள்ள சென்றவள்
எண் கணக்கை மட்டுமல்ல - அவன்
எண்ணங்களையும் புரிந்ததினால்
உருவான உன்னத உறவினால்
உள்ளங்கள் இரண்டும்
உல்லாச பயணத்தினை
ஊர் அறிய தொடர்ந்தனவே...

உறவுகள் பகைத்ததினால்
ஊரை விட்டு புறப்பட்டு
புதுவாழ்வில் இணைய
இணைந்த இதயங்கள்
இணங்கியே எண்ணின...

கனவுகள் பல கொண்டே
காதலிக்காய் காத்திருக்கையிலே
கைபேசி மூலம் கதை பேசி
கடல்தாண்டி செல்ல
மறுந்த மறுகணமே
 மனதை மட்டுமல்ல
மானத்தையும் இழந்த
அவமானத்தினால் -அவன்
மாத்திரைகள் கையேந்தி
மரணத்தை தனதாக்கின்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தொழிலாளிக்ளுக்காக...........

உலகத்தில் உதிர்ந்திட்ட
உயிர்கள் உயிர்வாழவே -  தன்
உதிரத்தை வியர்வையாக்கி
உருண்டோடும் வேகத்துடன்
கடும் போட்டியிட்டே
கணனி உலகிதுலிம்
கடமைதனை கருத்துடனே
கஷ்டங்களை பின்தள்ளி
முன்னேற்ற பாதைதனில்
முழு மூச்சுடனே நடப்பவரே
முதுகெலும்பாம் நீவிர்
நம் நாட்டின்..

உழைப்பாளி ஆனாதினால் - உன்
உயர்வுக்காய் மட்டுமன்றி
உள்ளம் மகிழ்ந்து ஊர் வாழ
ஊண் உறக்கம் தனை மறந்து
உடலுலப்பை நல்கியதால்
உயரதையா உன் பெருமை
உலகமதில் தினம் தினம்

பிறப்பு முதல் இறப்பு வரை
பொக்கிசமாம் உயிர் அதனை
போற்றி பேணி வளர்ப்பதற்கு
தொழில்கள் அனைத்தும்
தேவையென உணர்ந்ததினால்
தொழிலாளர் அனைவரையும்
பெருமையுடன் போற்றியே துதிக்கின்றோம்
அகிலமதில் இன்று....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆத்மா சாந்திக்காய்..

கருவினில் உன்னை
கனவுகளுடனே சுமந்து
கட்டிளம் பருவம்வரை
கண்ணை இமைபோல
உனை காத்தவள் இங்கே
கண்மணி இழந்து துடிக்கிறாள்

கடும் போரின் போதும்
கண்பார்வை துறந்தும்
கஷ்டங்கள் பல கடந்தும்
கடல் தாண்டி  அன்று - உனை
காலனிடம் மீட்டனரே

துன்பங்கள் மறந்து
துறைபோக கற்று
துளிர்விட்ட உன்வாழ்வு
பல்கலையில் துலங்க முன்னே
தூதன் அவன் உன்னை
துணைக்கு அழைப்பதற்காகவா?
தூது விட்டன் தூசிபோல்
சிறு நோய்தனையே..

மருத்துவம் பெற்று
மாட்சிமை பெற்று
மறுநாள் வருவாய் என
எதிர்பார்த்து இருந்த
இதயங்களில் பேரிடியாய்
இடிந்தது உன் மரண செய்தி
இன்னும் எண்ணுகிறோம் - இது
இரவு நேர கெட்ட
கனவு என்றே எண்ணி
கண் விழித்துப் பார்க்கையிலே
காணவில்லை உன்னை இங்கு

உன் நிழற்படத்து முன்னே
பெருகிடும் கண்ணீருக்குள்
நீந்துகின்ற உன் நினைவுகளுடன்
நிம்மதி வேண்டியே பிரார்த்திக்கிறோம்
உம் ஆத்மா சாந்திக்காய்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவனையே....

அறியாத ஆயுள் இதில்
அனுபவிக்க எண்ணியே
ஆரம்பர வாழ்வுதனை
அணை போட்டு விடாதே
அருவி போல் பொங்கிவரும்
அவன் அன்பு அதற்கு...

உள்ளமதில் உனை
உணராமலே உதித்திட்ட
உண்மை அன்பு அதனை
உறவுகளுக்காயும் - உன்
சுயநலத்திற்காயும்
உதிர்ந்து விடாதே

ஊருக்காய் உதயமாக்கி
உன் வாழ்வுதனில்
உலர்ந்த காற்றை சுவாசிக்கும்
உமைப் பொண்ணா நீயும்?

நெஞ்சமதில் நேர்மை கொண்டு
நீதி வழி பயணிக்கும் நீ
விதி விரிக்கும்
சதிவலையிலே சிக்காது - உன்
மதிதனை மீட்டி பார்த்தே
பதியாய் அவனையே பற்றி விடு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாசவலையிலே....

பாடித் பறந்திட்ட
சோலைக்கிளி இங்கே
பாசமென்னும் வலையிலே
வாசமாக மாட்டிற்றே....

ஊரு பேரு தெரியாமல்
உண்மை பொய் அறியாமல்
உள்ளத்தில் உருவான நாமத்தை
உறவாக உதயமாக்க
உறுதி கொண்டே முயற்சித்தான்....

எண்ணத்தில் உருவான
பல வண்ணங்களும்
சின்னமாய் கண்டாள்
அவனிடத்தே....

உதட்டு வழி
உண்மையை தினம் ஒலிக்க
உண்மை அன்பு அதற்காய்
உள்ளத்தை உவந்தளித்தாள்.....

உவப்பான செய்தியொன்று - அவள்
காதில் ஊர்த்ததினால்
ஊர் உறக்கும் நேரத்திலும்
உறக்கமின்றி தவிக்கின்றாள்
அறியாமல் தவறேதும்
புரிந்திருந்தாலும் அவன்
அணுகாமல் தடுப்பதற்காய்
இடர் எதும் அவனருகே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புத்தாண்டே..........

சித்திரையின் செல்வ நதியே
பத்திரமாய் உன்னை சுமப்பேன்
நித்திரையில் என்னை
தட்டியெழுப்பும் புத்தாண்டே
வருக என் வாசல் தேடி....

வயல் வெளிகளில்சனல் சிரிக்க
வையகமதில் சாந்தம் மலர
வெந்து நெந்த வருடம் போய்
விடியும் வருடம் வந்தாச்சு...

மலர்ந்திட்ட புத்தாண்டில்
பூமி எங்கும்
புன்னகையே எதிரொலிக்க
புது வசந்தம்  வீசிவர
வஞ்சனைகள் வாடிவிட
வையகத்தில் வளம் பெருக
வாழும் உயிர்கள்
நலம் நாளும் சிறக்க
தராணி எங்கும் தடம் பதித்தே
அணுதினமும் புகழ் பரப்ப
தமிழ்ப் புத்தாண்டே -உன்னை
வருக வருகவெனவே
வரவேற்று வாழ்த்துகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருமணவாழ்த்து மடல்........

இறைவன் வகுத்த
பந்தம் அதில்-இன்று
இணையும் இரண்டு
இதய சொந்தங்களின்
இனிய உறவு என்னாளும்
இளமைக்கால தென்றலுடன்
இன்ப ராகம் இசைத்திடவும்....

சின்ன சின்ன
புள்ளி வைத்தே போட்ட
எண்ணக் கோலமெல்லாம்
நல் வண்ணங்களாக
நாளும் வாழ்வை
அலங்கரித்திடவும்...

வசந்தம் வீசும் உம் உறவு
ஆழ்போல் தழைத்து
வானுயரப் புகழ்பரப்பி
அறுகு போல்வேரூன்றி
வாழையடி வாழையாக-உம்
வம்சம் தழைத்திடவும்....

வாழ்வெனும் ஆனந்த ஊஞ்சலில்
அமர்ந்திடும் உள்ளங்களை
அனைத்துலக ஜீவராசிகளும்
அகம் அது மகிழ்ந்து
 ஆசிகள் கூறிடவே
வளம் பல பெற்று
வளமுடன்வாழ-இறை
வரம் வேண்டி நானும்
மணநாள் காணும் இன்னாளில்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோன்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவுகளின் உதயத்திற்காய்....

பொங்கிவரும் அன்போடு
போட்டியிட்டே பாசம்
எனைநாடி வந்தபோதும்
நகர்கின்ற நாட்களோடு
போட்டியிட முடியாது
ஏக்கம் மட்டுமே
எதிர்பார்புடன் கூடி
மீண்டும் எஞ்சியே நிற்கின்றது
என்னிடத்தில்...

எத்தனை காலத்து
கனவுடன் கூடியே
உம் வரவுக்காய்
எண்ணிக்கையற்ற
எண்ணங்கள் எல்லாம்
எல்லையாய் சுற்றி நிற்கின்றது
என்னிடத்தில்.....

தொட்டிலில் போட அன்று
கிட்டாத சொந்தம்
எட்டத்து நாட்டில்-இன்று
வந்து எட்டி அணைத்ததனால்
அடைந்திட்ட ஆனந்தத்தை
அளவிட வார்த்தையில்லை
என்னிடத்தில்...

உம்மிடத்தில் பகிரப்படாத
பாசத்தின் பக்கங்களும்
பழகிப் பதிந்திட்ட
பசுமையான நினைவுகளும்
உறவுகளின் உதயத்திற்காய்
காத்திருக்கும் என்றும்
என்னிடத்தில்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எம் உறவு

நன்மையோ தீமையோ
நான் அறியேன் ஆனாலும்
நடந்து வந்த பாதையிலே
நிகழ்ந்திட்ட நிகழ்வுகளால் - உன்
நிம்மதி இழந்திட்டதனை
நிமிட இடைவெளியில்
ஒலித்திட்ட உன் குரலில்
உணர்ந்து கொண்டேன்

உண்மை நிலைபுரியாது
உள்ளத்து உணர்வறியாது
உருவான இவ் உறவுக்காய்
உதிர்த்திட்ட நிமிடங்களும்
உரைதிட்ட வார்த்தைகளும்
மீட்டிட முடியாதவையே
அடித்திட்ட அலையிலே
தவித்திட்ட மீனுக்காய்
தண்ணீர் வார்த்த நீ - இன்று
கண்ணீர் வடித்ததால்
உவர் நீர் மீண்டும் கிடைத்ததால்
உவகை அடைந்தது - அது
உலர்ந்து போகும் என்பதை
என்னாத எம் உறவு போல்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புன்னகை...

காலைஞ் சூரியன் தன்
கதிர்களை பரப்பி
உதிர்த்திடும் புன்னகை
உலகுக்கு வெளிச்சம்...

கடலலை கூட
சலசல எனவே
பூங்காற்றுடன் கலந்து
புன்னகை சிந்துதே...

பூவினம் தம்
மொட்டினை அவிழ்த்தும்..
புல்லினம் தன்
சிறகினை விரிந்தும்-தினம்
சிந்துதே புன்னகை...

ஊர்வன தம்
உறவினை பகிர்ந்தும்
விலங்கினம் தம்
ஒலிகளின் அசைவிலும்
உதிக்குது புன்னகை...

புன்னகையில் கூட
புதுபுது அர்த்தம்
அன்பின் தன்மைக்கேற்ப
அதன்வகை மாறுமாம்...

புதிய உலகிலும்
புரியா மொழியிலும்
புரட்சியைக் கொடுத்தே
புதுத்தடம் பதிந்திடும் புன்னகை...

தினம் துன்பங்கள் தொலைந்தே
எங்கும் புன்னகை பூப்பதால்
இன்னும் இப்பூமி சுத்துது - அதன்
இன்பத்தின் இசைவிலே.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மங்களம் பொங்கவே....

புன்னகை சிந்தியே
பூமிக்கு வந்திட்ட
புத்தம் புது மலரே...

உன் எண்ணங்கள் எல்லாம்
பல வண்ணங்களாக
வாழ்வை அலங்கரிக்க...

உலகுக்கு ஓளிகொடுத்தே-தினம்
ஓயாமல் உழைத்திடும்
வானத்துச் சூரியன் போல்
வையத்தில் உன் வாழ்வு
என்னாளும் ஓளிவீச....

மலரும் பொழுதுகளோடு
தவழ்ந்து வரும் தென்றலிலும்
உன் மகிழ்வே கலந்தொலிக்க...

மங்களம் பொங்கவே
மங்கை தனை கரம்பிடிக்கும்
மணவாழ்வும் கிட்டிடவே
பெற்றவர் ஆசியுடன்-எம்
பெருமான் துணைநாடி
பிறந்த இந் நாளில்
நானும் வாழ்த்துகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன்னாத வார்த்தை...

ஆண்டவன் படைப்பிலே
அதி உன்னத பரிசு
உள்ளத்து உணர்வினை
உயிர் ஒவியமாய்
உதட்டினால் வடித்திட
உதவிடும் பொக்கிசம்...

அகத்திலே ஊற்றேடுக்கும்
அன்பான வார்த்தையால்
அனைத்தையும் இயக்கியே
அகிலத்தை அழலாம்...

அகந்தைக்கு அகப்பட்டு
அள்ளி வீசிடும்
அநியாய வார்த்தைகளால்
அழிந்திடும் சம்ராச்சியம்...

எல்லைகள் வகுத்து
தொல்லைகள் இன்றி
சொல்லைப் பறிமாறின்
இல்லை அதற்க்கு நிகர் எதுவும்...

என்ன விலை கொடுத்தும்
விட்டுட்ட வார்த்தையை
மீட்டு இட முடியுமா
வலிபட்ட நெஞ்சத்திலிருந்து...

அரும்பெரும் சொத்தாய்
அகிலத்தில் பெற்ற
அற்புத பரிசை
அளவாய் பகிர்ந்து
அழகாய் வாழ்வோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன் சின்னப்பாதங்கள்...

இன்பமயமான இனிய-எம்
இல்லமெனும் நந்தவனமதில்
இளம் தென்றலாய்
வந்துதித்த செல்வமகள் நீ...

புது வாசம் வீசியே
வந்த உன்வரவால்
உள்ளம் மகிழ்ந்தே-உறவில்
உயர் பதவிகள் பெருகுதம்மா...

சந்ததி பல பாடி
சரித்திரம் படைத்தே
சந்தோச ஊஞ்சலில்-நம்
சந்ததி தளைத்திட -உன்
சின்னப் பாதங்களை
வாழ்க்கை எனும்
வண்ணங் கோலமதில்
வளம் பெறப் பதித்திட-இறை
வரம் வேண்டி வாழ்த்துகிறேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பெனும் அரங்கத்தில்....

நட்பெனும் மேடையில்
நடக்குது நாடகம்-இங்கு
நவ நாகரிகத்துடன்
நவரசங்களும் கலந்தே....

இணைவதற்கு என்றே
இடைவிடாது அழைப்பெடுத்து
இதயத்தில் இடம் பிடித்த
இனிய உறவாம் ஓர் நட்பு...

சொந்ததில் வந்திட்ட
பந்தத்தில் பாதி பகிர்ந்தே
அன்பெனும் அர்த்தத்தை சேர்த்து
அரன் அமைத்திட்ட
அழகான நட்பு ஓன்று...

முகமது பராமல்
முகவரி அறியமால்
நல் நம்பிக்கை முன்வைத்தே
நகர்ந்திடும் நட்புக்கள்...

பார்த்திட்ட போதே
பழகிடத் துடித்து
கள்ளத்தை மறந்து
உள்ளத்தை பகிர்ந்திட்ட
உன்னத நட்புக்கள் பல...

நன்மையோ தீமையோ
நமக்கென என்னாது
நடிப்பினை மறந்து
நட்புக்காய் தனைமாற்றி
நாளும் உழைத்திடும்
நட்பெனும் அரங்கத்தில்
நானும் ஓர் அங்கமே....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் வலி...

காலத்தின் சதியா இல்லை
காதலர் தம் விதியா
கனவுகள் பல சுமந்தே
கண்டங்கள் பல
தாண்டி வந்தவர்கள்
கடந்த காலம் அதை எண்ணி
கண்ணீரில் கரைகின்றனர் இங்கு

வருங்கால வாழ்க்கை அதை
வளம்படுத்தவென
மேற்குலக நாட்டுக்கு வந்தவர்
வதிவிட உரிமைக்காய்
வழியில் வந்தோரை
வாழ்க்கை துணையாக்கின்றார்

அன்பு வைத்த உள்ளங்களை
யாரும் அறியாமலே
குடியுரிமை பறிபோகாமல் இருப்பதற்காய்
தள்ளியே வைத்தவர்கள் - தினம்
சொல்லி அழுகிறார்
கண்ணாடி முன்னிலையில் மட்டும்
தம் நிலைதனை

கடல் தாண்டி வந்ததினால்
காதல்தனை தாண்ட முடியாமல்
மன முழுக்க ஒருத்தியையும்
மனைவியென இன்னொருத்தி
கைப் பிடித்தே
காலத்தின் பாதையிலே
காயங்கள் பல சுமந்தே செல்கின்றார்...

உறவுகளை தனை நினைத்தே
உண்மைதனை மறைந்தே
உதட்டினை ஊமையாக்கியவர்
உதிர கண்ணீர் வடிக்கிறார் - தம்
இதயத்தில் இருந்து

கல்லறை செல்லும்வரை
இல்லையெனினும்
கரைந்த சாம்பலிலாவது - இந்த
இணைந்த இதயங்கள்
கலங்கும் எணும் எதிர்பார்ப்பில்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெண்ணின் பெருமை....

எதற்கு இன்னும் போராட்டம்
எங்கே இல்லை உன் நாட்டாம்
அனைத்திலுமே அதிகாரம்
அந்தஸ்திலும் முதல் ஸ்தானம் - அதற்கு
அரசு கூட அங்கீகாரம்
வழங்கி ரொம்ப நாளாச்சு

குழந்தை என்னும் ஸ்தானத்திலே
குடியிருந்தே தெய்வந்தோடு
மங்கைராய் இருந்த நீர்
வேங்கை என வெகுண்டெழுந்தே
வேரறுத்தீர் வேதனை அத்தனையும்

நல்லறத்தை வளர்ப்பதற்காய்
இல்லறத்தில் இணைந்தே
நார்த்தனார் நடப்பறிந்தே
நட்புடனே பகிர்ந்தீரே
மருமகளாய் உமை மறந்து
மகளெனவே அழைத்திடவே
மனைவியே என நாமேற்று
மனையையே ஆட்சி செய்தீரே

இல்லத்தில் மட்டுமல்ல - அனைவர்
உள்ளத்திலும் யாரும்
அறியாமலே இடம் பிடிந்து
அன்பாலே அங்கீகாரம் - அதை
உனதாக்கி - உயர்வுக்காய்
உண்மையாய் உழைப்பதினால்
உலகத்திலே உனக்கோர்
தனியுரிமை அளித்தே
கொண்டாடி மகிழ்வதே
உலக மகளிர் தினமிதனை...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் சுவடுகள்.....

அகிலமதில் அவள்பெருமை
அறியார் யார் உளரோ
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிவரையும் அவள்
அன்பினிலே எங்கும்...

பத்து திங்கள் பெரும்
பாடுபட்டே பக்குவமாய்
பாரினிலே பாதம் பதிக்க
வைத்த பாசத் தாயுமவளே...

துள்ளிலே திரியும்
பள்ளி பருவத்தே அன்பாய்
அள்ளியே அறிவை
சொல்லியே கொடுத்திடும்
ஆசனாய் அவளே...

நாடியே சென்றவளுடன்
ஜோடி சேர்ந்தே வாழ்வதற்காய்
தேடியே வேலை தினம்
வாடியே போகும்
வாலிபர் நிலைக்கும் காரணம்
வஞ்சி அவளே...

வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்ச்சி செய்து கணவன்
உழைத்த ஊதியத்தை
கச்சிதமாய் செலவு செய்தே
கடமைகளை நிறைவு
ஏற்றுபவளும் அவளே...

தள்ளதா வயதினிலும்
கைத்தடி கூடவே வந்து
கைவைத்தியம் பார்த்தே
தலைமுறை தளைத்திட
தளராமல் உழைப்பவளும் அவளே...

அன்பின் அரவணைப்பில்
அன்னையுமாய்
உறவைப் பகிர்தலிலே
உடன் பிறப்பாய்
பள்ளியிலே தோழியாய்
பருவவயதினிலே காதலியாய்
நோய்யுற்ற வேளையிலே தாதியுமாய்
மனம் கல்ங்கி நிற்கையிலே மந்திரியாய்
களத்தினிலே வீராங்கனையுமாய்
ஆழ்கடல் முதல் ஆகாயம் வரை
அணைத்திலும் அவள் சுவடுகள்
அகிலமெங்கும் பதிகின்றது...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இணைந்த நட்பு....

சின்ன சின்ன சொற்கள் சேர்த்து
எண்ணுக் கணக்கேயில்லாமல்
எத்தனையோ நாளிகைகள்
செலவு பண்ணி
வண்ணமயமாக வடித்திட்ட-நம்
நட்பெனும் சின்னமதை
சில நொடியில்சிதைத்திடத்தான்
முடிந்திடுமா?

உள்ளத்தில் உரைந்திட்ட
உண்மையன்பை மறைத்திட்டு
உதட்டுவழி உரைத்திட்ட
உறுதியற்ற வார்த்தைகளால்
உடைந்திடுமா நம் அன்பு?

கடந்து வந்த பாதையிலே
பழகி வந்த பல பாசங்களை
பரிகொடுத்து பறிதவிர்ககும்
உன் உள்ளத்தில் இன்னோர்
 துன்பத்தின் பதிவைப்
 பகட்டாய் கூட பார்ப்பதற்க்கு
பலமில்லை என்னிடத்தில்

எதிர்பார்பு எதுவுமின்றி
எம்மிடையே மலர்ந்த நட்பில்
ஏக்கங்களோ மனத்தாக்கங்களோ
இனியும் இல்லாமல்-இவ்
பிறப்பில்  மட்டுமல்ல
இனி மலரும் ஜென்மங்கள்
அத்தனையிலும் இணைந்திருப்போமே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவன் வாழ்வில்....

பிஞ்சு வயதிலே
பஞ்சு மனத்தோடு
கொஞ்சிடும் தாய்ப் பாசத்தை
வஞ்சகமாகவே பாதியில்
ஏன் பரித்தாய்....

நெஞ்சில் தலை சாய்த்து-அன்பு
தஞ்சமே தானாகி
பஞ்சமே அறியமால் பார்த்திட்ட
தந்தையின் உயிரையும்
தட்டியே ஏன் பரித்தாய்...

கோடி சொந்தம் கூடியே இருந்தாலும்
கொட்டியே கொடுத்தாலும் பாசத்தை
ஓடியே போய்விடுமா?
உள்ளத்து வேதனை.....

உதிரத்தில் உருவான
உரிமைதனை நீ பறிக்க
உடன் பிறப்பய் வந்த-அவன்
உறவுகளை தான் பிரிந்தான்
வாழ்வின் உயர்வுக்காய்...

வாழ்க்கை என்பதே
ஆகுதீ ஆனாதால்
தினம் வெந்து வெந்து
நெந்த உள்ளம்
சோதனைகள் பல தாண்டி
அணையா அகல் விளக்காய்
வாழ்வை ஆக்குதற்காய்
அயராது உழைக்கின்றான்
பேனா முனை தாங்கி
பொழுது பகல் பாரமால்...

வெளியுலகை பார்ப்பதற்காய்
தாய் கருவறையில்
அமர்ந்திட்டான் அன்று
வெளியுலகம் திரும்பி
தாய் நாட்டை பார்த்ததனால்
காவல்துரையறையில்
அமர்ந்திட்டான் இன்று...

விதி வரைந்த பாதையிலும்
சதி விரித்த வலையிலிலும்
பாதிப்புக்கள் பல தாண்டி
சாதிக்க முனைபவனை-இனியும்
சோதிக்காது விட்டுவிடு
வாதிக்க வரவில்லை-மனம்
வருந்தியே கேட்கின்றேன்
ஜோதியாய் ஒளிக்கட்டும்-விடியும்
தேதிகள் ஒவ்வொன்றும்
அவன் வாழ்வில்.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் இன்று....

உறவாக வந்ததால்
உருவான காதல்
வினையாக மாறி
விளையாடுது அவள் வாழ்வில்...

கர்வமே கொண்ட அவள்
கண்ணில் பட்ட அவன்
உருவத்தை பார்த்து
உள்ளத்தை கொடுத்தாள்

அன்பை பொழிந்து
அல்லும் பகலும் மகிழ்ந்து
இன்பம் சுமக்க வைத்த அவன் - இன்று
இன்னல் விளைவித்தே
விலை கோரி நிற்கின்றான் - அவன்
வீசிட்ட வலையிலே
வீழ்ந்த அவள் வாழ்விற்கு....

லட்சங்கள் கொடுத்து விட்டால்
இலட்சணமாய் கை பிடிப்பேன்
இல்லையெனில்
வெட்டியே விட்டுவேன்
வேறொருவன் கை பிடித்து
சென்று விடு..

உதிரத்தில் உருவான
உறவென்பதால்-அவன்
உள்ளத்து ஊணத்தை உணராமலே
உள்ளத்தை கொடுத்தவள் - அவன்
உரைதிட்ட வார்த்தையினால்
உணர்வுகள் சிதைந்து
உதிரமே விழி நீராக
உதடுகள் ஊமையாகி
உளநிலை அற்றவளாய்
உலா வருகிறாள் ஊர் மத்தியிலே?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புது வாழ்வு....

சுற்றும் முற்றும் பார்த்தேன்
சொந்த பந்தம் சேர்ந்து
சாதி மதம் அறிந்து
சாதகமும் பார்த்து
சேர்ந்து வைத்த உறவு இது

உரிமைதனை வாங்கி
உறவுகளை கொடுத்து
உணர்வுகளை பரிமாறி
உள்ளங்களை சுமந்து
இல்லறத்தில் இணைந்தது..

உள்ளத்தில் உள்ளவற்றை
எல்லைகளை வரையறுத்து
ஏங்கங்களை தனதாக்கி
ஏற்ற இறக்கம் பல கொண்டே
எப்படியோ பரிமாறியது

நாளாக நாளாக
நலத்திலே அன்பு பெருகு
நல்லதும் கெட்டதும்
நாணமின்றி நடமாடுதிங்கே

அன்பு பெருக
அந்தஸ்து ஒழிய
ஆசைகள் ஒடுங்கியே
அழகிய நந்தவனமாய்
பூத்துக் குலுங்கியது - அவர்
புது வாழ்வு.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நம்பிக்கை துரோகி.......

அழகான வாழ்க்கைக்கென
அரும்பி வரும் ஆசைகளை
அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள்
அயலவர் உறவினர் உதவியுடன்
உற்றதுணை இதுவெனவே
உறுதியளித்திட்ட பின்னரே
உள்ளம் கொடுத்தால்
அவனுக்காய்........

அன்பாய் கதை பேசி
ஆசைகள் பல பகிர்ந்து
ஆறுதல்கள் பல கூறி
ஐந்து நிமிட இடைவெளியில்
ஆறு தடவை அழைப்பெடுத்து
அழகாயே வளர்ந்து வந்த
அவர்கள் தம் உறவு

நீண்ட நேரம் கதை பேசி
நெடுங்காலமதை திட்டமிட்டு
புரிந்துணர்வு கொண்டே
புது திட்டம் தீட்டி -பூமியிலே
புகழ் பரப்பி வாழ்ந்திடவே..

கனவுகள் பல சுமந்து
கற்பனைகள் பல உடனே
தன்னவனை காண சென்றவளை
தவிக்க விட்டதன்
காரணம் தான் என்ன?
புரியாமல் புலம்புவது - அவள்
உருவம் மட்டுமல்ல
புடைசூழ்ந்த சொந்தமுமே

நாக்கு புரள்கிறது
அவன் வேசம் விலகியதால்
நாகரீக உடையணிந்து
நடப்பாய் திரிந்தாலும்
நடைப் பிணமே இனி
நாள் எல்லாம் அவன்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்பின் ஆழம்......

அடுத்து அடுத்து ஆண்டுகள்
பல கடந்த போதிலும்
அரும்பி வரும் சந்ததியும்
அறியுதில்லை இந்த
அன்பின் ஆழமதை....

ஆறறிவு கொண்டே
அற்புதங்கள் பல நிகழ்த்த
அகிலமதில் அவதாரித்த
ஆண்டவனின் குழந்தைகள் நாம்...

தாய்க்கு வருகிறது
தன் குழந்தை என்பதால் அன்பு
தந்தைக்கு தொடருது
தன் உதிரம் என்பதால் உறவு...

ஒரு வயிறறில் பிறந்ததனால்
உருவான சொந்தம்
உடன் பிறப்பு...

உரிமையை தனதாக்கி
உறவினை எதிர்பார்த்து
உருவான பந்தத்தில்
இனைந்திட்ட இரு இதயங்கள்
கணவன் மனைவி...

ஏற்றங் கண்டிடவே
எதிர்பார்பு பலகொண்டே
எல்லைகள் பல தாண்டி
ஏமாந்த உறவென்றை
ஏற்றிட்டேன் நன்பனாய்...

வதந்திகளைக் கண்டிங்கே
வாக்கு வாதம் கொண்டே நான்
வர்ணஜலம் கொண்ட
வாழ்க்கை பாதையிதை
வர்ணிக்க முணையவில்லை...

வாசல்படி தடக்கியதற்காய்
வாழும் இல்லமதை
வேண்டாமென விட்டுவிட்டு
வேறு மனை செல்வதுவா?

படிக்கல்லை பார்ந்தே நாம்
பக்குவமாய் கடந்து வந்தால்
கவலை மறந்தே நாம்
காலமெல்லம் வாழ்ந்திடலாம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்த்துக்கள்....

வளமான வருங்கால வாழ்க்கைக்காய்
தினம் தினம் அவரவர் போடும்
வண்ணக் கோலங்கள் தான்
எத்தனை எத்தனை?

கண்களில் களம் அமைத்து
கண்னாளே பல கதை பேசி
காதலிலே கலந்தவராம்

உதட்ரோர புன்னகையால்
ஊமை தாமாகி
உள்ளம் கொடுத்தவராம்

பதினெட்டு வயதினிலே
பள்ளி பருவத்திலே உருவான
பருவ காதலராம்

உயர் கல்வி படித்து
உத்தியோகம் தேடிச் சென்று
ஊதியத்தை மட்டுமன்றி
உற்ற துணையும் தேடி வந்தவராம்

பல நாள் பயணங்களில்
பக்க துணையாய் இருந்ததினால்
வாழ்க்கைத் துணையானவராம்

தவறி வந்து அழைப்பதினை
தடை செய்யாமையினால்
தன்னவரானவராம்

இடையராது முயற்சியினால்
இடையூறு மத்தியிலும்
இணைய வழி வந்து
இதயத்தில் இடம் பிடித்தவராம்

மனதினிலே இருத்திவிட்டு
மொழியினை மெளனமாக்கி
மெய் மறந்து வாழ்பவராம்

உணர்விலே பிறந்து
உயிரினிலே கலந்து
உள்ளங்கள் பரிமாறியும்
உரைக்க முடியாமல் இருப்பவராம்

முகமே தெரியாமல்
முகவரி அறியாமல்
புள்ளிகள் பல வைத்து
புதிராய் வாழ்பவராம்

என்னென்னோ விதங்களில்
பாசம் என்னும் வலைவீச்சி
இதயங்கள் இடமாறி
காதலில் கலந்தவரே - உங்கள்
எண்ணகள் தழைத்தோங்கி
எதிர்பார்ப்பு நிறைவேற
வளமான வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் மலர்....

 மரத்தடியில் ஒன்று கூடி
மணப்பரப்பில் வீடுகட்டி
மகிழ்ந்த பருவம் கழிகையிலே
மனதினிலே துளிர்விடுதே
மறுபட்ட எண்ணம் பல

வண்ணப் பருவங்களில் வரும்
எண்ணங் குவியல்களில்
சின்னக் கனவுகளில்-அங்கே
அழகாய் காதல் மலர்கிறதே

அரும்பு வயதினிலே
அரியப் பருவத்திலே
எறுப்புகள் போல்
துள்லித் திரிகையிலே
எதிர் பாரமலே அங்கே
அன்பெனும் பெயரினிலே
காதல் மலர்கிறதே

பள்ளி வயதினிலே
பருவ மாற்றத்தால்
பார்வைகள் இடம்மாற
எதிர் பாலர் மேல் கொண்ட
பாசத்தின் வடிவினிலே
காதல் மலர்கிறதே

இருபது வயதினிலே
இளமையின் பிடியினிலே
இரு உள்ளங்கள் அங்கே
இதயங்கள் பாரிமாறியதால்
இடையூறு பல தாண்டி இனிய
காதல் மலர்கிறதே

ஆடிய ஆட்டம் ஓய்ந்து
ஆசைகள் பலவும் தீர்ந்து
அனுபவங்கள் பல பெற்று
ஆதாரவு பெற்ற இடத்தே
அன்பினை நாடியதால்
ஆறுபது வயதிலும் அருமையாய்
காதல் மலர்கிறதே

அன்பு என்னும் அருவியிலே
அடித்து வந்த அணுவளவு ஆலம்விதை
ஆகாயம் வரை வளர்ந்து
விழுதுகள் பல பரப்புவது போல்
அகிலமதில் எங்கும் காதல்
அணைத்து உயிரிலும்
படர்ந்து மணம் பரப்புகிறதே

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாலிப வடுக்கள்.....

வாழ்க்கை என்னும் பயணத்தில்
வாலிப நெஞ்சங்களின்
வடு நிறைந்த வழிகளை
வடிக்க முடிந்திடுமா?
வார்த்தைகளை கொண்டிங்கு

பள்ளி பருவத்தில்
அள்ளி வரும் கனவுகளை
தள்ளியே வைத்து விட்டு
துள்ளி ஓடுகிறான்
சல்லி பணத்திற்காய்

இல்ல நிலையறிந்து
இல்லாமை போக்கிடவே
உள்ளத்தை பணம்
உள்ளவர்க்கே உரிமையாக்கிடுவர்

தேடியே வேலை தினம்
வாடியே போனதினால்
நாடி வந்த உறவெல்லாம்
ஓடியே போயினவே

பாசத்தோடு பாடியாடி
வாசம் வீசும் வசந்தங்களை
தோசம் கொண்டே - எம்
தேசம் வந்தவர்கள்
நாசம் செய்து போயினரே

அன்பினை அரவணைக்கும்
அகிலம் இதாம் - ஆனால்
அன்பு கொண்ட நெஞ்சங்களில் - தினம்
ஆகுதி வளர்கின்றதே

இளமை காலமதை
இனிமையாக்கிடவே
வழமைக்கு மாறாக
வடம் பிடித்தே
வாழ்வை வளம் படுத்திடுவோம்
வாரீரே வலிப நெஞ்சங்களே.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா

அம்மா என்றிடும்
அரும் வார்த்தை
அகிலத்தில் ஒளிக்குது
அலையாக அதில்
அடங்கிடும் அர்த்தங்கள் ஏராளம்
அறிந்தவர் புரிந்வர் ஏராளம்
அவர் அணைத்திடும்
அன்பில் அழும் குழந்தை
அடங்குதே அழுகையை
அக மகிழ்ந்து
உருளுகின்ற உலகினிலே
பருவ வயதினிலே
உருவங்கள் மாறியே
உறவுகள் நிலைக்குதிங்கே - ஆனால்
அத்தனையும் அன்னை
அன்பிற்கு அடுத்தபடியே
வாழ்வில் என் நாளுமே....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS