வார்த்தை....
11:23 |
வாய் பேசிடும் வார்த்தையதில்
வகை வகையாய் ஆழப்பதிந்த
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
அறிந்தும் அறியாமலும்
அன்றாடம் அவரவர் வாழ்வில்
ஆதிக்கத்திற்க்கு அதுவே காரணமாகிறது...
வஞ்சமில்லா நெஞ்சமதில்
மிஞ்சியே இருக்கும் அன்பால்
தங்குதடை ஏதுமின்றி
தடம்புரண்டு வரும் வார்த்தையாதால்
தர்ம வழி காட்டியாய்
தரணியிலே தடம் பதித்தோர் பலர்..
கள்ளமதை உள்ளிருத்தி
வள்ளல் போல் வடிவம் தாங்கி
நல்லதெல்லாம் நஞ்சு ஆக்க
உள்ளமதில் உறுதி பூண்டே
சொல்லாலே உறவாடி
தள்ளாமல் படுகுழியில்
தானாயே விழவைக்கும்-அந்த
வல்லமையும் வார்த்தைக்கே..
எவ்வளவுதான் இருந்தாலும்
இயம்பியதை மீள எடுத்திடவோ
இன்றோடு மறந்திடவோ
அளவேதும் சொல்லிடவோ வார்த்தைக்கு
யாராலும் இயலாவில்லை இன்னும்..
அன்பாய் அணைத்திடவும்
ஆறுதலாய் தாலாட்டிடவும்
அனைத்திற்கும் அடித்தளமாய்
ஆணவத்தின் மறுவுருவாய்
ஆங்காங்கே வார்த்தை எங்கும்
அலைமோதி தவழ்கிறது......
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment