இன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்
இமைவழி வழியும் கண்ணீருக்கு
இன்னும் ஒய்வில்லையே
இதுதான் என் நிலையா?
கொடுமைகள் எதுவுமில்லை
கொடுக்கல் வாங்கள் பிசகுமில்லை
தனிமையென நானுமில்லை _ ஆனாலும்
தவிக்குதே மனசு....
விதியதன் விளையாட்டு
மனித மட்டத்தில் மட்டுமல்ல
நாட்டின் சட்டத்திலும் சூழ்ந்து
சதி செய்யுது இங்கே....
நிமிடங்களை எண்ணி எண்ணி
நீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்
நினைவுகள் களைவதற்குள் களைந்ததால்
கண்ணீரோடு கரைகின்றது என் மனம்.
1 comments:
நல்ல கவிதை... சோகம் இழையோடும் வரிகளில் என் மனமும் கரைகிறது...
Post a Comment