RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

என் மனம்...



இன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்
இமைவழி வழியும் கண்ணீருக்கு
இன்னும் ஒய்வில்லையே
இதுதான் என் நிலையா?

கொடுமைகள்  எதுவுமில்லை
கொடுக்கல் வாங்கள் பிசகுமில்லை
தனிமையென நானுமில்லை _ ஆனாலும்
தவிக்குதே மனசு....

விதியதன் விளையாட்டு
மனித மட்டத்தில் மட்டுமல்ல
நாட்டின் சட்டத்திலும் சூழ்ந்து
சதி செய்யுது இங்கே....

நிமிடங்களை எண்ணி எண்ணி
நீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்
நினைவுகள் களைவதற்குள் களைந்ததால்
கண்ணீரோடு கரைகின்றது என் மனம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

சிசு said...

நல்ல கவிதை... சோகம் இழையோடும் வரிகளில் என் மனமும் கரைகிறது...

Post a Comment