RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

எம் இதயத்தின் இயக்கமாய் என்றும் நீ...

 


என்னை நானே மறந்தாலும் - உன்

நினைவுகளுடனே நிலைத்திருக்கிறது  நெஞ்சம்

எங்கே முடிவெனத் தெரியமால் - என்

கால்கள் கூட நகர்கின்றன வாழ்க்கைப் பாதையில்

கண்ணில் பதிந்திட்ட உன் உருவை பாதுகாக்க  -என்

கண்கள் கூட கண்ணீர் விட மறுக்கின்றன

உலகத்தில் உன் உருவம்  இல்லமால் மறையலாம் -ஆனால்

என்றும் எம் இதயத்தின் இயக்கமாய்  

எம்முள்  வாழும் உயிர் நீ....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மே -18..................




 எம் இனத்தின் இதயங்களிலிருந்தும்

 அங்கங்களைப் பிளந்தும் ஓடிய குருதியால்

நந்திக்கடலும் நாம் நிலமும்  செம்நதிக்கடலாய்

காட்சியளித்த கொடூர நாள் இது

சண்டைகள் ஓய்ந்து கண்டங்கள் தாண்டி - பல

ஆண்டுகள் கடந்து ஆட்சிகள் மறலாம் -ஆனால்

முண்டங்களாக எம் இனத்தின்

அங்கங்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த

ஆவல காட்சியை எம்மவர் நெஞ்சங்களால்

மறக்க முடியுமா? அல்ல மறக்கதான்  நினைக்குமா?

நாம் கடந்து வந்த  நினைவுகள்  கொடூரமானவை

நாமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கலாம் -ஆனால்

விதைக்கப்பட்ட ஒவ்வாரு உடலும்

விறு கொண்டு எழும்  விருட்சங்களுக்கான அடித்தளம்....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எம் தேசத்துக்கான உழைப்பு இது.......

 



உழைக்கும் காரங்களை 

ஊக்குவிக்கும் மாதம் இது

குருதியை வியர்வையாக்கி தாம்

உறுதியால் ஊதியம் பெறுவார்

உலகத்திலுள்ள அணைவரும்- ஆனால்

குதியால் ஒரு தேசமே

நணைக்கப்பட்ட மாதமும் இதுவே

வாய்க்கால் என்றால்  நினைவுக்கு வருவது

நீர் வழிந்தோட அமைப்பதென்று - ஆனால்

முள்ளிவாய்க்கால் என்றால் நினைவுக்கு வருவதோ

செம்மையாய் ஓடிய எம் இனத்தின் குருதி

குருதியால் உரமூட்டி வளமாக்கப்பட்ட எம் 

தேசத்துக்கான உழைப்பு தேடல் என்றும் ஓயாது.....




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உழைப்பின் உன்னதம்.....





 மரத்திடமிருந்தோ மனித -  நீ 

மனத்துணிவினைப் பெற்றாய்-அணைத்து

இலைகளும் உதிர்ந்திட்ட போதும் அதையே

உரமாக்கி மீண்டும் தளிர்த்திடும் மரம்போல  -உன்

உயர்ச்சியில் தெரியுது

உழைப்பின் உன்னதம்.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வெறுக்கதக்க நினைவுகள் .....

 


வெறுக்கதக்க நினைவுகள் வெறுமனவே 

மனித மனத்துக்கு மட்டுமனதல்ல

வெறிச்சோடி நிற்க்கும் மரம் கூட - ஒரு 

பருவத்தில் சுமைகளை குறைத்திட - தன் 

இலைகளினூடே கவலைகளையும் சேர்த்தே

உதிர்த்து விட்டு நிற்க்கும் காட்சி இது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



நித்திரையில் எம்மை தட்டி எழுப்பி

சித்திரையின் பிறப்பைச் சொல்லும்

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி..

கோவில்களில் விழாக்கோலம்

இல்லங்களில் கொண்டாட்டம்

உள்ளங்களில் எல்லாம் குதுகலம்..

வழக்கம் போல்தன் இன்றைய விடியலும் - ஆனாலும்

புதுவருடம் புத்தாடை கைவிசேசம் என

மாதங்களின் செல்ல மகள் இவள் எல்லோர்

வாழ்வும் உன் வரவால் வண்ணமாயமாகும் என்பது

ஒவருவார் எண்ணங்களிலும் உதிக்கும் நம்பிக்கை - ஆகையால்

புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நினைவுகளுடன் இன்றும் நாம்...

 


நாட்கள் நகர்ந்தோடி பல 

ஆண்டுகள் கடக்கலாம்

கிரமாங்கள் கூட பெரு

நகரங்களுக் ஈடாகலாம் - பலர் 

கனவுகள் நியமாகி வாழ்வினை இரசிக்கலாம்- சிலர்

கனவினை  மறந்து நிஜத்தினில்    நிலைக்காலம்

எத்தனையோ மத்தியிலும் நித்தமும் - எம்

சிந்தனையில் சிறிதெனும் சிதறமால் இருப்பது

அன்பான உன் முகமும் அழகாய் அனுபவித்த நினைவுகளுடனும்

அகிலமதில் நீ ஆவதாரித்த இன் நாளில்  உம் 

நினைவுகளுடன் இன்றும் நாம்...

நிஜத்தில் பயனிக்கின்றோம்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணில் படும் சில வண்ணங்கள்.....

 



வியர்த்துக் களைத்து

விறுவிறு என வீடுநோக்கி ஓடுகையில்

வீதியோரம் கண்டகாட்சி

விழிகளுக்கு ஓர்  இனிய விருந்து

கண்ணில் படும் சில வண்ணங்கள்  - நாம்

எண்ணங்களை கூட வண்ணமாயமக்குகிறது.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒளிகள்.....






 ஒளிகள் பலவிதம் - அவை

ஒளிக்கும் விதம் கூட தனித்தனி விதம்

இயற்ககையாய் ஒளிபவை பல - உலகின்

இயக்கத்திற்காய் ஒளிபவையும் பல

காலையின் விடியல் கதிரவன் ஒளியால் - பலர்

கனவுகளின் விடியல் அவரவர்  -முகத்தினில்

உதித்திடும் சிறு புன்னகை ஒளியில்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எங்கேயும் எப்போதும்......

 கரைபுரண்டு ஓடியே கடல் நீரும் வற்றலாம்

காலைச் சூரியன் ஓர்நாள் திசைமாறி உதித்தாலும்

எம்மை உள்ளத்தால் சுமந்திட்ட உம் உயிரன்பினை -இனி

எங்கே நாம் தேடிட? எதை சொல்லி அறிட?

எமக்கு ஏன் இந்த  வேதனை? -இதனால் யாருக்கு 

என்ன சாதனை? உம் அன்பிற்கிணை  

எதுமில்லை எங்கேயும் எப்போதும்..








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிறு பறவை சொல்வதென்ன....






அசைந் ஆடும் காற்றிலே

அவதியுரும் ஒரு சிறு  கிளையில்

அமர்ந்திருந்த அச் சிறுகிளியின்

அயாராதா தேடல் எதுவாக இருக்கும்?

கிளையின் உதிர்கின்ற இலையில்

அம்ர்ந்திட்ட பொழுதும் பயமேதுமில்லை - ஏனெனில்

கிளையை மட்டும் நம்பி அமரவில்லை  அது தன்

இறகை நம்பியே அமர்ந்தேன் என்பதை

இயல்பாக உணர்த்துகிறது இவ்வுலகுக்கு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகு நிலா...

 




வானுக்கு நீ அழகா ? அல்ல

வானத்தில் நீ அழகா?

வளர்பிறையில் முழுமதியாய்

வளர்ந்து நீ வருகையிலே

வையகத்து உயிர்களேல்லாம்

மெய்மறந்து இரசிக்குதம்மா.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

 கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்

காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்

கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை

நதியில் கரைத்துவிட்டு

நாதியின்றி தவிர்க்கின்றோம்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலனவன் அரவணைத்ததேனோ.......

 எல்லையற்ற இவ்வுலகில்

அல்லலுற்று தொல்லையுறும் எத்தனையோ

உயிர்களுக்கு மத்தியிலே -அன்பால்

அரணமைத்து ஆட்சி செய்த உங்கள் வாழ்வை

காலனவன் அரவணைத்ததேனோ.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வண்ணமாய் வடிக்க முன்னே.....

 சொல்லில் அடக்கிடுமா? அல்ல

சோகத்தை மறைத்திடுமா?

என்னென்ன கனவு கண்டோம் -நாம் 

எண்ணங்களை வண்ணமாய் வடிக்க முன்னே- நீங்கள்

கண்முடி தூங்கச்  சென்றதேனோ....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாதியிலே....

 சிகரங்கள் பல நாம் காண -தன்

சிந்தனையை செயலாக்கி

உதிரத்தை உரமாக்கி உழைத்திட்ட உறவு -இன்று

உமையாகி உறக்குவதேன்?

மிதிவழி தெரியாது பாதியிலே தவிர்க்கின்றோம்




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடை.....


விடை கான முடியதா பல கேள்விகள்
இடைவிடாது இன்னும் தொடரத்தான் செய்கின்றது -காரணம்
விழிகள் விடியல் கானும் வரை சாத்தியமில்லை -நாம் 
விடை காண்பதும் நாம் தேடல்கள் ஓய்வதும்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நல்லொளி....




 வைகறை எழுந்து வாசல் தெளித்து - தம் 

உள்ளத்து எண்ணங்களை -கை

கிண்ணத்து மாவல் வண்ணமக்கும்

அணைத்துயிரும் ஆதவனே - உன்னுடத்தில்

ஏதோன்றை எதிர்பார்த்தே நிக்கின்றது!...

தை பிறந்த வழி பிறக்கும் என்பது ஒருகால நம்பிக்கை

நம்பிககை கொண்டு  உன் கைபிடித்தவர்[கள்]

வாழ்க்கையிலாவது உன் ஒளிக்காரங்கள்

நல்வழி [ஒளி] காட்டுவதெப்போது?........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உறவு......









உறவென்பது வெறும் சொல்லல்லா
உதிரத்தில் கலந்து உள்ளத்தை அளும்
உயிரின் ஒருபாதி  - அதில்
ஊடல் என்பதும் விரிசல் என்பதும் - பெரும்
உயிர்கொல்லி நோய்யாகும்
உடலில் நோயின்றி வாழ்வதும்
உறவில் பிரிவின்றி இருப்பதும்
உலகத்தில் இன்னும் கிடைக்கா - அதி
உன்னத விருந்தாகும் - இதை
உனர்ந்தவர் யாரும் இன்னும்
உதிக்கவுமில்லை உதிப்பதுமில்லை
உலகைப் படைப்பவன் நியாதி இதுவேனில்
உறவுகள் நிலையும் இதுவே!..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கனவுகள் காயவில்லை இன்னும்.........










கடல் நீரில் மீன் விடும் கண்ணீர்
பிரித்தரிந்தார் யாருமில்லை -அதுபோல
எண்ணக் கனவுகளை வண்ணமாக்க
காலத்தோடு போட்டியிட்டு வாழ்வோர்
கனவுகள் என்றும் காய்வதில்லை........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS