மழைத்துளிகள் மண்ணை முத்தமிட
விளைபயிர்கள் வேர்விட்டு வெளியே வர
புல்லினங்கள் பாடும் மெல்லிசையை
பசும் தென்றல் தாங்கி வர -பூமிதாயவள்
பச்சைக்கம்பளம் போர்த்தி புன்ன்கைக்கும்
அழகே அழகு...
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
மழைத்துளிகள் மண்ணை முத்தமிட
விளைபயிர்கள் வேர்விட்டு வெளியே வர
புல்லினங்கள் பாடும் மெல்லிசையை
பசும் தென்றல் தாங்கி வர -பூமிதாயவள்
பச்சைக்கம்பளம் போர்த்தி புன்ன்கைக்கும்
அழகே அழகு...
அகிலமிதில் எம் அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமைதாங்கி அன்புதனை அமுதாக்கி
எமை ஆளாக்கிய அன்னையே
உலகத்தில் உவமைசொல்ல உமக்கு ஈடேது
தவிழும் வயதில் தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் இமையாய் இருந்தாய்
துன்பம் தொடாமலிருக்க தூக்கத்தினை மறந்தாய்
ஆயுள்வரை ஆருயிராய் அன்பில் அமுத சுரபியாய்
ஆளும் அன்னை ஒரு பிரபஞ்சமே
அனுதினமும் வாழ்த்தி வணங்குகின்றோம்......
ஆண்டவன் கொடையாம் இயற்கையை வியந்தான்
ஆதிசக்தியை அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையைகள் கூடியே
பாடி விளையாடவும் பறவைகள் பண்பினையும்
அறியாமை கொண்டே அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையை வெளியே கொண்டுவர
அறிவினை ஊட்டியே புரட்சியை நடத்தினார்.
ஏழ்மையை மறந்து ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட சாத்திரம் அளித்தே
புதுசரத்திரம் படைந்தார் புரட்சிக் கவியிலே
மனதில் இடம் பிடித்து மஹா கவியுமானார்