அறியாத ஓர் சுகம்
அளவில்லா ஆனந்தம்
அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்
அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...
எவரிடத்தும் கண்டதில்லை
இம் மொழியை இதுவரையில்
வார்த்தைகளே இல்லமல்
வகை வகையாய் கதைபேசும் - உன்
விழிமொழியை நானின்றி யாரறிவார்...
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
அறியாத ஓர் சுகம்
அளவில்லா ஆனந்தம்
அன்பாலே புடைசூழ - உணர்கின்றேன்
அகிலமிதில் தினம் தினம் புதுவசந்தம்...
எவரிடத்தும் கண்டதில்லை
இம் மொழியை இதுவரையில்
வார்த்தைகளே இல்லமல்
வகை வகையாய் கதைபேசும் - உன்
விழிமொழியை நானின்றி யாரறிவார்...
இமயத்தை தொடுவேன் என்பது எதிர்பார்ப்பு- என்
இருகைகள் போதும் இருப்பதைக் கொண்டு
இமயத்தின் உச்சியை அடைவேன் என்பது நம்பிக்கை
எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை - அதை
எதிர்கொள்ளும் விதத்தில் இருக்கிறது வெற்றி
நமக்குள்ளே பிறந்து நாம் கைபிடித்து
நம்மையே வழிநடத்துவது நம்பிக்கை.....
தவிக்கின்றோம் உன் வெப்பத்தால்
அறிவியல் என்னதான் அலைவீசி வளர்ந்தாலும் -உன்
அனல் வீசும் வெப்ப அலைக்கு
அவை எல்லாம் ஒரு தூசு
பொழுது சாயும் நேரம் கூட -உன்
கோபத்தின் வேகம் குறையாதாது ஏனோ?
அலையில் அகப்பட்ட துரும்பு போல -உன்
அனல் அலையால் துடிக்கின்றோம் இங்கு.....
வசந்தகாலம்....
பருவங்களில் அழகானது
பள்ளிக்காலம்.....
பருவகாலம் ஆண்டுக்கு ஒருமுறை
மீண்டும் மீண்டும் மலர்கிறது -ஆனால்
பள்ளிக்காலம் அழகிய நினைவுகளுக்குள்
மீண்டும் மீண்டும் நம்மை அழைத்துச் செல்கிறது....