ஒளிகள் பலவிதம் - அவை
ஒளிக்கும் விதம் கூட தனித்தனி விதம்
இயற்ககையாய் ஒளிபவை பல - உலகின்
இயக்கத்திற்காய் ஒளிபவையும் பல
காலையின் விடியல் கதிரவன் ஒளியால் - பலர்
கனவுகளின் விடியல் அவரவர் -முகத்தினில்
உதித்திடும் சிறு புன்னகை ஒளியில்....
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
ஒளிகள் பலவிதம் - அவை
ஒளிக்கும் விதம் கூட தனித்தனி விதம்
இயற்ககையாய் ஒளிபவை பல - உலகின்
இயக்கத்திற்காய் ஒளிபவையும் பல
காலையின் விடியல் கதிரவன் ஒளியால் - பலர்
கனவுகளின் விடியல் அவரவர் -முகத்தினில்
உதித்திடும் சிறு புன்னகை ஒளியில்....
கரைபுரண்டு ஓடியே கடல் நீரும் வற்றலாம்
காலைச் சூரியன் ஓர்நாள் திசைமாறி உதித்தாலும்
எம்மை உள்ளத்தால் சுமந்திட்ட உம் உயிரன்பினை -இனி
எங்கே நாம் தேடிட? எதை சொல்லி அறிட?
எமக்கு ஏன் இந்த வேதனை? -இதனால் யாருக்கு
என்ன சாதனை? உம் அன்பிற்கிணை
எதுமில்லை எங்கேயும் எப்போதும்..
அவதியுரும் ஒரு சிறு கிளையில்
அமர்ந்திருந்த அச் சிறுகிளியின்
அயாராதா தேடல் எதுவாக இருக்கும்?
கிளையின் உதிர்கின்ற இலையில்
அம்ர்ந்திட்ட பொழுதும் பயமேதுமில்லை - ஏனெனில்
கிளையை மட்டும் நம்பி அமரவில்லை அது தன்
இறகை நம்பியே அமர்ந்தேன் என்பதை
இயல்பாக உணர்த்துகிறது இவ்வுலகுக்கு.
வானுக்கு நீ அழகா ? அல்ல
வானத்தில் நீ அழகா?
வளர்பிறையில் முழுமதியாய்
வளர்ந்து நீ வருகையிலே
வையகத்து உயிர்களேல்லாம்
மெய்மறந்து இரசிக்குதம்மா.......
கண்முடி முழிக்கும் கணப்பொழுதில்
காலனவன் உம் உயிர் பிரித்தாதினால்
கதிகலங்கி நிக்கின்றோம் உம் ஆஸ்திதனை
நதியில் கரைத்துவிட்டு
நாதியின்றி தவிர்க்கின்றோம்.....