நித்திரையில் எம்மை தட்டி எழுப்பி
சித்திரையின் பிறப்பைச் சொல்லும்
புத்தாண்டே வருக எம் வாசல் தேடி..
கோவில்களில் விழாக்கோலம்
இல்லங்களில் கொண்டாட்டம்
உள்ளங்களில் எல்லாம் குதுகலம்..
வழக்கம் போல்தன் இன்றைய விடியலும் - ஆனாலும்
புதுவருடம் புத்தாடை கைவிசேசம் என
மாதங்களின் செல்ல மகள் இவள் எல்லோர்
வாழ்வும் உன் வரவால் வண்ணமாயமாகும் என்பது
ஒவருவார் எண்ணங்களிலும் உதிக்கும் நம்பிக்கை - ஆகையால்
புத்தாண்டே வருக எம் வாசல் தேடி.....



