விடியலை வரவேற்க......
நிலையாச்சு...
வாழ்வின் விதியா? காலத்தின் சதியா?
வாழ்க்கையின் நியாதியா? எம் நிலைதான் என்ன?
நிக்கதியாய் நிக்கின்றோம் நினைவிழந்து தவிககின்றோம்
வேதனைய எம் வாழ்வின் அடுத்த நிலையாச்சு...
வார்த்தைகள் எங்கே.....
வார்த்தைகள் எங்கே
வலு இழக்கின்றன
வறுமையின் பிடியிலா? அல்ல
வாய்மையின் தவறிலா?
வார்த்தைகள் எங்கே
வலுப் பெறுகின்றன?
வைராக்கியத்தின் முடிவிலா? அல்ல
வாதிடும் திறத்திலா?
மொத்ததில் வாழ்க்கை அவரவர்
வார்த்தையில் தங்கியுள்ளது.....
குடியுரிமை வேண்டுமானால் கொடுக்கலாம் சொர்க்கம் ...
பந்தமிது பல்லாண்டு நிலைக்கவென
சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து நிற்க
ஆன்றோர்கள் ஓடு ஆண்டவனும் ஆசிகள் கூற
இணைத்து வைத்த இரு கைகளில் ஒன்றை இன்று
இடையில் இறைவன் பற்றிக் கொண்டதேனோ
நெஞ்சத்தில் வாழும் அன்பை -எந்த
வஞ்சத்தாலும் ஏன் பிரபஞ்சத்தாலும் பிரிக்கேலாது
குடியுரிமை வேண்டுமானால் கொடுக்கலாம் சொர்க்கம் - ஆனால்
அவன் ஆத்மா குடியிருப்பதோ நாம் இதயம்....
ஒரு வேளை இப்படி இருக்குமோ !...
ஒரு வேளை இப்படி இருக்குமோ !
நினைப்பதெல்லாம் யாருக்கும் கிடைப்பதில்லை
ஒருவேளை அப்படியே கிடைத்து விட்டாலும் அதுவும்
நிலைப்பதில்லையோ? இதுதான்
இவ்வுலகில் இயற்க்கையின் நியாதியோ..
ஓஓ அப்படித்தான் இருக்கும் போல.....





