RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

மறக்க முடியாத வசந்தம்........



கல்லூரி காலமதில்

கடைசி மணி அடித்ததுமே

கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு

கடைசித்தெரு வரை

காவலுக்கு வந்து செல்வார்

இடைவழியில் இளைஞர்யாரும்

இம்சை எதும் செய்து விட்டால்

இன்னொரு நாள் காத்திருந்து

இருட்டடி கொடுத்திடுவார்

சந்தர்ப்பம் பார்த்தே

சமூகப் பணி இணைந்து

இன் முகத்துடனே

இனிதே பணி செய்தமையால்-அனைவர்

இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்

உறவினர் கூடவே

உயிர் தோழிகளும் மட்டுமல்ல

உடன் பிறப்புகளும் இணைந்தே

பெருமிதத்துடனே காட்டிவிட்டார்

 பெற்றோரும்  நாம் காதலுக்கு

பச்சைக்கொடி இதுவே 

மறக்க முடியாத வசந்தம் என் வாழ்வில்.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முடியாவில்லை........


 பாசத்தை பகிர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி -உம்

உள்ளத்தில் எமை தாங்கிட்ட நீங்கள்

பாதியிலே எமை தவிர்க்க விட்டுவிட்டு எங்கு சென்றீர் -உம்

பாதச்சுவடுகளில் வழிதேடி நிற்க்கின்றோம்

துளிகூட முடியாவில்லை உம் 

நினைவுகளிலிருந்து எழுந்திருக்க....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எது பிழை?....



விடையே இல்லாமால்

வெளியிடப்பட்ட வினாத்தாளா?-அல்ல

இடையில் ஓர் விடையை அளிக்கமுயற்ச்சிப்பதா?

வினாவே தவறென்பதா? அல்ல

எனக்கென்ன வென கடந்து செல்வதா?அல்ல

விடையே இதுதான் என்று

தவறை சரியாக்குவதா?

எது பிழை? யார் பிழை?ஏன் பிழை? 

எங்கே பிழை? என கேள்விகள் தொடரலாம்

பிழை என்பது  சரிசெய்யப்படுமா? 

சரிசெய்யப்படின் அங்கேயும் மீண்டும்

தொடருது எது பிழை?.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இரசனையாகும்.....

 



இன்பமும் துன்பமும்

இரண்டாரக் கலந்தவை

விடியல்கள் மட்டுமே தொடருமானல்

விழிகளில் துக்கத்துக்கு இடமேது

இயற்ககையின் சூழற்சியோடு

இணைந்தே நாமும் நடப்போம்

இன்றல்ல விடிலும் என்றோ ஒருநாள்

இவையணைத்தும் இனிய இரசனையாகும்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உள்ளம் கொள்ளை போகுதே...



எண்ணற்ற கனவுகளை தினம் தினம்

எண்ணமற் சுமக்கும் நாம் மனம்கூட

எங்கேயோ ஓர் இடத்தில் வண்ணமாயமானா

எண்ணங்களுக்குள் சிக்கிக் கொள்கிறது,

கண்ணில் படும் சில வண்ணங்கள்  

கண்களுக்கு மட்டும் விருந்தல்ல சிலசமயம்

உணர்வுகளுக்குள் குடிபுகுந்து -நாம் 

உள்ளத்தையே கொள்ளை கொள்ளும்

உன்னத அற்றல் இயற்க்கையண்னையை தவிர

உலகில் வேறெதற்குண்டம்மா....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS