RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

வாழ்க்கையும் வானவில்லும்......

 


வாழ்க்கை எனும் பயணம் முடிந்த 

பின்னும் பாதைகள் முடிவதில்லை

வானவில் கோலத்திலும் வர்ணஜாலங்கள் மறையலாம்

வர்ணங்கள் முடிவதில்லை

எண்ணங்களைச் சேர்த்து மனிதன் போட்டது

வாழ்க்கை எனும் கோலம்

ஒளிரும்  வர்ணங்கள் சேர்த்து வானில்  

 இயற்கை போட்டது வர்ணஜாலமாய் வான்வில்

மனிதன் மனதில் போடும் எண்ணங்களும்

இயற்க்கை சேர்க்கும் வானவில் வண்ணங்களும்

மனதின் அந்நேர மகிழ்ச்சிக்கு விருந்து

நிரந்தரமற்ற தன்மையை உணர்த்த

நிகரான வடிவம் வழ்க்கையும் வானவில்லும்...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாமரை மேலே நீர்த்துளி போல்....



உன் உள்ளத்து அன்பின் அழத்தில்

உதித்த வெளிச்சத்தில் மலர்ந்த  தாமரை-  என் நேசம்

காற்றுவாக்கிலோ அல்ல காலத்தின் போக்கிலோ

கடன்வாங்கியோ அல்ல கடமைக்காகவோ 

மலர்ந்தநேசம் இதுவல்ல , 

கனவினில் மட்டுமல்ல நினைவினில் கூட

நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளை

சுமக்கும் என் நெஞ்மதில் அரியணை போட்டு

அற அமரவிட்டாலும் தாமரை மேலே 

நீர்த்துளி போலவாது அமர்ந்திருப்பாயா?.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இருள் நீக்கும் இமைகள்...........




  • சின்னஞ் சிறார்கள் எம்மை

    வண்ண வைரங்களா வாழ்வில்

    மின்ன வைப்பதற்காய்

    என்நாளும் உண்மையாய் உழைக்கும்

    உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்கள்


    உள்ளத்தில் கள்ளமின்றி

    நெஞ்சத்தில் வஞ்சமின்றி

    பஞ்சமின்றி கல்விதனை

    அள்ளி அள்ளி வழங்கியே

    நல்லறிவை நமக்குட்டி

    நாளைய சமூகத்துக்காய் இன்றே

    உழைப்பவர்கள் ஆசிரியர்கள்...


    கடமை கண்ணியம்

    காட்டுப்பாட்டுடனே

    கண்ணான கல்விதனை - இனிய

    கணியாக எமக்களிக்கும் ஆசிரியர்கள்

    இன்றல்ல  என்றென்றும்

    இருள் நீக்கி ஒளிவீசும் 

    அறிவுக்கண்ணை அகிலத்துக்கே

    திறக்கச் செய்யும்  ஒளிரும் தெய்வங்கள்

    • Digg
    • Del.icio.us
    • StumbleUpon
    • Reddit
    • RSS

    காலம் செதுக்கிய முகவரி....

     


    கருவாக நான் உருவான நாள்முதலாய்

    காத்திருந்தார் மகவாக எனைத் தாங்க,

    அகிலத்தில் அவதரித்த அந்நொடியிலிருந்து

    அணைத்தெடுத்து அமுதூட்டி அரவணைத்தார்,

    பார்போற்ற  இப் பாரினிலே இவன்(ள்) வாழ

    பகலிரவு பாரமால் அரும்பாடுபட்ட தெய்வங்கள்

    கடவுள் எனக்களித்த அரும் பொக்கிசங்கள் 

    காலம் எனக்காக செதுக்கிய முகவரியும் இதுவே...




    • Digg
    • Del.icio.us
    • StumbleUpon
    • Reddit
    • RSS

    கவலைகள்.....


    வானுக்கும் கடலுக்கும் மட்டும் மல்ல

    வாழ்விலும் பல இயல்புக்கு எல்லை

    சொல்ல எவராலும் முடியவில்லை இன்னும்


    கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல

    காரணம் கருதியும் கருதாமலும் சில

    காலத்தின் பிடியில் தப்பிக்க முடியாமலும்

    கடமையின் விளிம்பினைப் பிடித்துக் கொண்டுமென

    கணக்கிட முடியாமல் தொடர்கிறது கவலைகள்


    உருவமில்லா ஒன்றுக்காக உள்ளத்தை வருத்தாது

    உண்மையை உணர்ந்து உறுதியுடன் உயரப்பற

    கவலைகள் கூட கடன் கேட்கும்

    மனவுருதிக்கு மிஞ்சிய மருந்தில்லை கவலைகளுக்கு....



    • Digg
    • Del.icio.us
    • StumbleUpon
    • Reddit
    • RSS