மாலைப் பொழுதில் மல்லிகை மலருது
மலரும் வாசனையில் மனம் மகிழுது
மகிழ்ச்சியின் தொடர்ச்சியில் இரவு நிளுது
நீண்ட பொழுதுகள் மீண்டும் புலருது
புலர்ந்த விடியலில் புதுயுகம் தெரியுது
தெரியும் பாதையில் பயணம் தொடருது
தொடரும் தேடலில் நாளைய விடியல்...
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
மாலைப் பொழுதில் மல்லிகை மலருது
மலரும் வாசனையில் மனம் மகிழுது
மகிழ்ச்சியின் தொடர்ச்சியில் இரவு நிளுது
நீண்ட பொழுதுகள் மீண்டும் புலருது
புலர்ந்த விடியலில் புதுயுகம் தெரியுது
தெரியும் பாதையில் பயணம் தொடருது
தொடரும் தேடலில் நாளைய விடியல்...
அத்தனையும் அழமாய்
துளைக்கிறது நெஞ்சை
கடமையில் தவறவில்லை
காலங்கள் வினே கடத்தவுமில்லை
முயற்ச்சிக்க பின் நின்றதுமில்லை
முடிவுவரை சோர்ந்ததுமில்லை
எப்படி எப்படி எல்லாம் இருக்கனுமோ
அப்படி பார்த்து பார்த்து நடந்தும்
இப்படி ஆயிற்றே கடைசியில் - இனி
என்ன செய்ய....
பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..
அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது..
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்த என்னவனை
காலனவன் சதிசெய்து பிரித்தாலும் -என்வாழ்வில்
கதிரவன் உதயம் அவன் நினைவுகளின்றி நிகழ்ந்ததில்லை.....
கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்
இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்
சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்
உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே காட்டிவிட்டார்
பெற்றோரும் நாம் காதலுக்கு
பச்சைக்கொடி இதுவே
மறக்க முடியாத வசந்தம் என் வாழ்வில்.....
உள்ளத்தில் எமை தாங்கிட்ட நீங்கள்
பாதியிலே எமை தவிர்க்க விட்டுவிட்டு எங்கு சென்றீர் -உம்
பாதச்சுவடுகளில் வழிதேடி நிற்க்கின்றோம்
துளிகூட முடியாவில்லை உம்
நினைவுகளிலிருந்து எழுந்திருக்க....