அம்மா ஒரு பிரபஞ்சம்.......
அகிலமிதில் எம் அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமைதாங்கி அன்புதனை அமுதாக்கி
எமை ஆளாக்கிய அன்னையே
உலகத்தில் உவமைசொல்ல உமக்கு ஈடேது
தவிழும் வயதில் தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் இமையாய் இருந்தாய்
துன்பம் தொடாமலிருக்க தூக்கத்தினை மறந்தாய்
ஆயுள்வரை ஆருயிராய் அன்பில் அமுத சுரபியாய்
ஆளும் அன்னை ஒரு பிரபஞ்சமே
அனுதினமும் வாழ்த்தி வணங்குகின்றோம்......
காலத்தை வென்ற கருஞ்சுடரோனே....
ஆண்டவன் கொடையாம் இயற்கையை வியந்தான்
ஆதிசக்தியை அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையைகள் கூடியே
பாடி விளையாடவும் பறவைகள் பண்பினையும்
அறியாமை கொண்டே அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையை வெளியே கொண்டுவர
அறிவினை ஊட்டியே புரட்சியை நடத்தினார்.
ஏழ்மையை மறந்து ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட சாத்திரம் அளித்தே
புதுசரத்திரம் படைந்தார் புரட்சிக் கவியிலே
மனதில் இடம் பிடித்து மஹா கவியுமானார்
நிலவின் ரகசியம்....
வாழ்க்கையும் வானவில்லும்......
வாழ்க்கை எனும் பயணம் முடிந்த
பின்னும் பாதைகள் முடிவதில்லை
வானவில் கோலத்திலும் வர்ணஜாலங்கள் மறையலாம்
வர்ணங்கள் முடிவதில்லை
எண்ணங்களைச் சேர்த்து மனிதன் போட்டது
வாழ்க்கை எனும் கோலம்
ஒளிரும் வர்ணங்கள் சேர்த்து வானில்
இயற்கை போட்டது வர்ணஜாலமாய் வான்வில்
மனிதன் மனதில் போடும் எண்ணங்களும்
இயற்க்கை சேர்க்கும் வானவில் வண்ணங்களும்
மனதின் அந்நேர மகிழ்ச்சிக்கு விருந்து
நிரந்தரமற்ற தன்மையை உணர்த்த
நிகரான வடிவம் வழ்க்கையும் வானவில்லும்...




.jpg)
