வார்த்தைகள் எங்கே
வலு இழக்கின்றன
வறுமையின் பிடியிலா? அல்ல
வாய்மையின் தவறிலா?
வார்த்தைகள் எங்கே
வலுப் பெறுகின்றன?
வைராக்கியத்தின் முடிவிலா? அல்ல
வாதிடும் திறத்திலா?
மொத்ததில் வாழ்க்கை அவரவர்
வார்த்தையில் தங்கியுள்ளது.....
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
வலு இழக்கின்றன
வறுமையின் பிடியிலா? அல்ல
வாய்மையின் தவறிலா?
வார்த்தைகள் எங்கே
வலுப் பெறுகின்றன?
வைராக்கியத்தின் முடிவிலா? அல்ல
வாதிடும் திறத்திலா?
மொத்ததில் வாழ்க்கை அவரவர்
வார்த்தையில் தங்கியுள்ளது.....
சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து நிற்க
ஆன்றோர்கள் ஓடு ஆண்டவனும் ஆசிகள் கூற
இணைத்து வைத்த இரு கைகளில் ஒன்றை இன்று
இடையில் இறைவன் பற்றிக் கொண்டதேனோ
நெஞ்சத்தில் வாழும் அன்பை -எந்த
வஞ்சத்தாலும் ஏன் பிரபஞ்சத்தாலும் பிரிக்கேலாது
குடியுரிமை வேண்டுமானால் கொடுக்கலாம் சொர்க்கம் - ஆனால்
அவன் ஆத்மா குடியிருப்பதோ நாம் இதயம்....
நினைப்பதெல்லாம் யாருக்கும் கிடைப்பதில்லை
ஒருவேளை அப்படியே கிடைத்து விட்டாலும் அதுவும்
நிலைப்பதில்லையோ? இதுதான்
இவ்வுலகில் இயற்க்கையின் நியாதியோ..
ஓஓ அப்படித்தான் இருக்கும் போல.....
நினைவுகளுடனே நிலைத்திருக்கிறது நெஞ்சம்
எங்கே முடிவெனத் தெரியமால் - என்
கால்கள் கூட நகர்கின்றன வாழ்க்கைப் பாதையில்
கண்ணில் பதிந்திட்ட உன் உருவை பாதுகாக்க -என்
கண்கள் கூட கண்ணீர் விட மறுக்கின்றன
உலகத்தில் உன் உருவம் இல்லமால் மறையலாம் -ஆனால்
என்றும் எம் இதயத்தின் இயக்கமாய்
எம்முள் வாழும் உயிர் நீ....
அங்கங்களைப் பிளந்தும் ஓடிய குருதியால்
நந்திக்கடலும் நாம் நிலமும் செம்நதிக்கடலாய்
காட்சியளித்த கொடூர நாள் இது
சண்டைகள் ஓய்ந்து கண்டங்கள் தாண்டி - பல
ஆண்டுகள் கடந்து ஆட்சிகள் மறலாம் -ஆனால்
முண்டங்களாக எம் இனத்தின்
அங்கங்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த
ஆவல காட்சியை எம்மவர் நெஞ்சங்களால்
மறக்க முடியுமா? அல்ல மறக்கதான் நினைக்குமா?
நாம் கடந்து வந்த நினைவுகள் கொடூரமானவை
நாமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கலாம் -ஆனால்
விதைக்கப்பட்ட ஒவ்வாரு உடலும்
விறு கொண்டு எழும் விருட்சங்களுக்கான அடித்தளம்....