என்னை நானே மறந்தாலும் - உன்
நினைவுகளுடனே நிலைத்திருக்கிறது நெஞ்சம்
எங்கே முடிவெனத் தெரியமால் - என்
கால்கள் கூட நகர்கின்றன வாழ்க்கைப் பாதையில்
கண்ணில் பதிந்திட்ட உன் உருவை பாதுகாக்க -என்
கண்கள் கூட கண்ணீர் விட மறுக்கின்றன
உலகத்தில் உன் உருவம் இல்லமால் மறையலாம் -ஆனால்
என்றும் எம் இதயத்தின் இயக்கமாய்
எம்முள் வாழும் உயிர் நீ....



