விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை
மண்டபமே மகிழ்ச்சியிலே
மந்திரங்கள் ஒலிக்கையிலே
மணமகனின் அருகினிலே
மங்கை இவள் தவிப்பதனை
மாற்றிட தான் மார்க்கம் உண்டோ
கனவுகளின் கைகளிலே மனதை கொடுத்துவிட்டு
காலத்தின் பாதையிலே தொடர்கின்றாள்-வாழ்வினையே
கண்ணாமூச்சி ஆட்டமாய்....





