ஒரு வேளை இப்படி இருக்குமோ !
நினைப்பதெல்லாம் யாருக்கும் கிடைப்பதில்லை
ஒருவேளை அப்படியே கிடைத்து விட்டாலும் அதுவும்
நிலைப்பதில்லையோ? இதுதான்
இவ்வுலகில் இயற்க்கையின் நியாதியோ..
ஓஓ அப்படித்தான் இருக்கும் போல.....
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
நினைப்பதெல்லாம் யாருக்கும் கிடைப்பதில்லை
ஒருவேளை அப்படியே கிடைத்து விட்டாலும் அதுவும்
நிலைப்பதில்லையோ? இதுதான்
இவ்வுலகில் இயற்க்கையின் நியாதியோ..
ஓஓ அப்படித்தான் இருக்கும் போல.....
நினைவுகளுடனே நிலைத்திருக்கிறது நெஞ்சம்
எங்கே முடிவெனத் தெரியமால் - என்
கால்கள் கூட நகர்கின்றன வாழ்க்கைப் பாதையில்
கண்ணில் பதிந்திட்ட உன் உருவை பாதுகாக்க -என்
கண்கள் கூட கண்ணீர் விட மறுக்கின்றன
உலகத்தில் உன் உருவம் இல்லமால் மறையலாம் -ஆனால்
என்றும் எம் இதயத்தின் இயக்கமாய்
எம்முள் வாழும் உயிர் நீ....
அங்கங்களைப் பிளந்தும் ஓடிய குருதியால்
நந்திக்கடலும் நாம் நிலமும் செம்நதிக்கடலாய்
காட்சியளித்த கொடூர நாள் இது
சண்டைகள் ஓய்ந்து கண்டங்கள் தாண்டி - பல
ஆண்டுகள் கடந்து ஆட்சிகள் மறலாம் -ஆனால்
முண்டங்களாக எம் இனத்தின்
அங்கங்கள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்த
ஆவல காட்சியை எம்மவர் நெஞ்சங்களால்
மறக்க முடியுமா? அல்ல மறக்கதான் நினைக்குமா?
நாம் கடந்து வந்த நினைவுகள் கொடூரமானவை
நாமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கலாம் -ஆனால்
விதைக்கப்பட்ட ஒவ்வாரு உடலும்
விறு கொண்டு எழும் விருட்சங்களுக்கான அடித்தளம்....
ஊக்குவிக்கும் மாதம் இது
குருதியை வியர்வையாக்கி தாம்
உறுதியால் ஊதியம் பெறுவார்
உலகத்திலுள்ள அணைவரும்- ஆனால்
குதியால் ஒரு தேசமே
நணைக்கப்பட்ட மாதமும் இதுவே
வாய்க்கால் என்றால் நினைவுக்கு வருவது
நீர் வழிந்தோட அமைப்பதென்று - ஆனால்
முள்ளிவாய்க்கால் என்றால் நினைவுக்கு வருவதோ
செம்மையாய் ஓடிய எம் இனத்தின் குருதி
குருதியால் உரமூட்டி வளமாக்கப்பட்ட எம்
தேசத்துக்கான உழைப்பு தேடல் என்றும் ஓயாது.....
மனத்துணிவினைப் பெற்றாய்-அணைத்து
இலைகளும் உதிர்ந்திட்ட போதும் அதையே
உரமாக்கி மீண்டும் தளிர்த்திடும் மரம்போல -உன்
உயர்ச்சியில் தெரியுது
உழைப்பின் உன்னதம்.....