RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

குழந்தை வாழும் சூழலிலே..




குழந்தை என்னும் ஸ்தானத்தோடு
குடியிருக்கின்றன நடமாடும்தெய்வங்கள்
நாம் வாழும் சூழலிலே...

கள்ளம் கபடம் அறியாத
கனிவான புன்னகையிலே,
காதல் கலந்த பாசத்தை
கணநேரத்தில் விதைக்கின்றன.

மழலை மொழி கேட்கும் போது
மனக் கவலைகள் மறைகின்றன

குழந்தைகளை நேசிப்போம்,
குணநலன்களை வளர்ப்போம்
நாளைய சூழல் நல்லதாய் மலரும்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா ஒரு பிரபஞ்சம்.......

 



அகிலமிதில்  எம் அவதாரம் அதற்காய்

அந்திபகல் கண்விழித்து ஐயிரண்டு திங்களாய்

அகத்தினிலே எமைதாங்கி அன்புதனை அமுதாக்கி 

 எமை ஆளாக்கிய அன்னையே


உலகத்தில் உவமைசொல்ல உமக்கு ஈடேது

 தவிழும் வயதில் தாய் மடி தந்தாய் 

இளமைப் பருவத்தில் இமையாய் இருந்தாய்

துன்பம் தொடாமலிருக்க தூக்கத்தினை மறந்தாய்


ஆயுள்வரை ஆருயிராய் அன்பில் அமுத சுரபியாய்

ஆளும் அன்னை ஒரு பிரபஞ்சமே

அனுதினமும் வாழ்த்தி வணங்குகின்றோம்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காலத்தை வென்ற கருஞ்சுடரோனே....




ஆண்டவன் கொடையாம் இயற்கையை வியந்தான்

ஆதிசக்தியை அருள் வேண்டியே புகழ்ந்தான்

ஓடி விடையாடும் குழந்தையைகள் கூடியே 

பாடி விளையாடவும் பறவைகள் பண்பினையும்

அறியாமை கொண்டே அடங்கிய சமூகத்தில்

அடங்கிய பெண்மையை வெளியே கொண்டுவர

அறிவினை ஊட்டியே புரட்சியை நடத்தினார்.

ஏழ்மையை மறந்து ஏற்றத் தாழ்வின்றி

எம்மினம் வாழ்ந்திட சாத்திரம் அளித்தே 

புதுசரத்திரம் படைந்தார் புரட்சிக் கவியிலே 

 காலத்தை வென்ற கருஞ்சுடரோனாய் மக்கள் 

மனதில் இடம் பிடித்து மஹா கவியுமானார்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலவின் ரகசியம்....

 


மறைக்கப் பட்ட அழகின் பொக்கிஷங்கள்

மனிதனால் எப்போதும் தேடப்படுகின்றன -இதற்கு

நிலாவுமட்டும் என்ன விதிவிலக்கா? -ஆனாலும்

முடியவில்லை முழுமதி அவளின் முழுமையை அறிய

இரவினில் பெளர்ணமி வெளிச்சமும்

இனிமைக்கு அவள் நிழழும் தனிச்சுகம்

வானவெளியில் அவள்  ஓர் வெள்ளித்தட்டு

வாய்திறக்க மறுக்கும் குழந்தைகளுக்கே மந்திரத்தட்டு

பூமியிலிருந்து பார்த்து இரசித்த காலமொன்று

போதும் அதுவென்று வானுக்கே வந்தாலும்

வானத்தில் உன் அழகும்  -நீ

வழங்க மறுக்கும் இரகசியங்களும் 

நீண்டுகொண்டே செல்கின்றன  -நீ 

வாழும் வான் பரப்புப்போல...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க்கையும் வானவில்லும்......

 


வாழ்க்கை எனும் பயணம் முடிந்த 

பின்னும் பாதைகள் முடிவதில்லை

வானவில் கோலத்திலும் வர்ணஜாலங்கள் மறையலாம்

வர்ணங்கள் முடிவதில்லை

எண்ணங்களைச் சேர்த்து மனிதன் போட்டது

வாழ்க்கை எனும் கோலம்

ஒளிரும்  வர்ணங்கள் சேர்த்து வானில்  

 இயற்கை போட்டது வர்ணஜாலமாய் வான்வில்

மனிதன் மனதில் போடும் எண்ணங்களும்

இயற்க்கை சேர்க்கும் வானவில் வண்ணங்களும்

மனதின் அந்நேர மகிழ்ச்சிக்கு விருந்து

நிரந்தரமற்ற தன்மையை உணர்த்த

நிகரான வடிவம் வழ்க்கையும் வானவில்லும்...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS