கருவாக நான் உருவான நாள்முதலாய்
காத்திருந்தார் மகவாக எனைத் தாங்க,
அகிலத்தில் அவதரித்த அந்நொடியிலிருந்து
அணைத்தெடுத்து அமுதூட்டி அரவணைத்தார்,
பார்போற்ற இப் பாரினிலே இவன்(ள்) வாழ
பகலிரவு பாரமால் அரும்பாடுபட்ட தெய்வங்கள்
கடவுள் எனக்களித்த அரும் பொக்கிசங்கள்
காலம் எனக்காக செதுக்கிய முகவரியும் இதுவே...





