வானுக்கும் கடலுக்கும் மட்டும் மல்ல
வாழ்விலும் பல இயல்புக்கு எல்லை
சொல்ல எவராலும் முடியவில்லை இன்னும்
கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் பல
காரணம் கருதியும் கருதாமலும் சில
காலத்தின் பிடியில் தப்பிக்க முடியாமலும்
கடமையின் விளிம்பினைப் பிடித்துக் கொண்டுமென
கணக்கிட முடியாமல் தொடர்கிறது கவலைகள்
உருவமில்லா ஒன்றுக்காக உள்ளத்தை வருத்தாது
உண்மையை உணர்ந்து உறுதியுடன் உயரப்பற
கவலைகள் கூட கடன் கேட்கும்
மனவுருதிக்கு மிஞ்சிய மருந்தில்லை கவலைகளுக்கு....


0 comments:
Post a Comment