உம்கையில்....
09:23 |
சொல்லத் தயக்கமா அல்ல- அவள்
செயலால் கலக்கமா
உள்ளத்தில் தாக்கமா எது -அவள்
ஊதட்டை தடுக்குது....
எண்ணத்தை மறைக்கலாம் - முகத்துக்கு
வண்ணமும் பூசலாம் வாழ்க்கைச்
சின்னத்தின் உதயத்தை
என்னத்தில் மறைப்பது..
பிழை ஒன்றும் இல்லை - இங்கே
கிளையதன் வளர்ச்சியை
விலை கொடுத்து வாங்குவதல்ல
நிலைதடுமாறாது உரம்வாய்ந்த
வேராய் இருப்பின் நீவீர்
விழுது ஏதும் தேவையில்லை...
வாழ்க்கையின் பாதையில்
நம்பிக்கையுடன் நம்பிக்கால்வைத்து
இடுக்கையை உதைப்பது
உம் கையிலுள்ளது என்றும்...
தன்நம்பிக்கையுடன்
அயாராது உழைத்து - மனம்
தளராது வாழின் - உமக்கே
வாழ்க்கையின் வசந்தம்
தரனியில் என்நாளும்.....
Read User's Comments(1)
முயற்ச்சிக்கின்றேன்
11:14 |
தெரியதா மொழி
அறியதா மனிதர்-ஆனாலும்
மரியாதை அதிகம் ஆதலால்
புரியதா பலதையும்
புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...
பட்டங்கள் பலபெற்று
பதவிகள் பல வகித்தாலும்
சட்டங்கள் எமங்கு
சார்பாக இருந்தாலும்-வாழ்க்கை
கட்டங்கள் பலதாண்டி
கடமையை சரியாக செய்ய
தெரியதா மொழியைத்
தெரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...
சுற்றுகின்ற பூமியிலே
சுமை நிறைந்ததல்ல வாழ்க்கை
சற்று நின்று சிந்தித்து செயற்பாட்டால்-அதன்
பசுமைதனை நாமும்
கற்றுக் கொள்ளலாம் என்பதனால்
நானும் முயற்ச்சிக்கின்றேன்.
காதல் இராச்சியத்தில்...
03:02 |
விழிகளில் விழுந்து
மூச்சினில் கலந்து
மனதினில் தவழ்ந்து
இதயத்தில் இடம் பிடித்து
காதலால் ஆட்சி செய்யும்
உன் இராச்சியத்தில் -என்றும்
நான் இளவரசியே...
காதல் எனும் தேர்வெழுதி
கடமைதனை ஏற்ப்பதற்காய்
தடம் பதித்திட்ட தேசம் வாழ்
காதலரே கேளீர்...
கண் காணும் சில காட்சிகளோ
பிறர் சூழ்ச்சிகளோ -இன்றி
நல் மனச்சாட்சியோடு ஓன்றி
இல் ஆட்சியை நடத்தின் -உம்
காதல் இராச்சியத்தில்
தரணியும் இணையும்.
அன்னையும் தந்தையும்......
06:42 |
அகிலத்தை அறிவித்த
அன்பின் முகவரிகள்
ஆண்டவனின் அருள்வடிவம்
அனைவருக்கும் அரும் பொக்கிசம்
அன்னையும் தந்தையுமே...
அன்னை மடியினிலே
அகிலத்தில் அவதாரித்தேன்
அன்புத் தந்தை தோளினிலே
அதை வலம் வந்தேன்...
பகலிரவாய்ப் பாடுபட்டு
பாசத்தால் எமைச் சுமந்து
பார் போற்ற நாம் வாழ
பட்ட துன்பம் அத்தனைக்கும்-அது
பரிசாய் மனம் மகிழும்
அன்புத் தெய்வங்களே
அன்னையும் தந்தையும்
காதல்
13:47 |

அன்பின் அருவுருவம்
ஆண்டவனின் அன்பளிப்பு
இதயங்களின் இடமாற்றம்
ஈருயிர்களின் ஒன்றினைவு காதல்...
உள்ளத்தைக் கவர்ந்தவர்க்காய்
ஊர்கூடி தடுத்திட்ட போதிலும்
எதிர்ப்புக்கள் பல தாண்டி
ஏற்றிட்ட இதயங்கள் அன்பால்
ஐக்கியமானது காதல்...
ஒளிமாயமான வாழ்விற்காய்
ஓயாது உழைத்து-ஓர்
ஒளடதப் பொருளாய்
அகிலத்தில் அணைத்துயிர்க்கும்
அக மகிழ்ச்சியைக் கொடுத்திடும் காதல்.
காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவரும்
காதல் தேசம் இதில் காலமெல்லாம்
கலந்து மகிழ காதலுடன் நானும்
காதலரை வாழ்த்துகிறேன்.
Subscribe to:
Posts (Atom)




