நன்றிகள்.....
09:46 |
நல்லதொரு வாழ்க்கைதனை
நமக்கமைத்துத் தருவதற்காய்
கண்ணிரண்டும் அயராது- தாம்
மண்ணின் உழைப்பாலே
கல்விதனைப் பரிசளித்து
கடல் கடந்து அனுப்பி வைத்து
கைப்பிடித்தும் வைத்துவிட்டார்- இணைந்தே
காலமெல்லாம் வாழ்வதற்காய்....
உதிரத்தில் பங்கெடுத்து
உடன்பிறப்பாய் உதித்தவரும்
உறுதியுடன் அவர்கள்தமை கைப்பிடித்தே
உற்றதுணைனா உறவுகளுடனும்
உண்மையன்பைப் பகிர்ந்தளித்து
உறவான அண்ணான் அண்னி- அனைவரதும்
உடல் உள உழைப்பாலே
உள்ளங்கள் இரண்டும்-இங்கே
உறவுப் பாலத்தில்
ஊர் போற்ற இணைந்தனவே...
இந்நன்நாளை சிறப்பிக்க
நாடுகள் பலதிருந்தும் நல் வருகைதந்து
நம்மை வாழ்த்திச் சென்றவர்க்கும்
நல்வாழ்த்துக்களை மனம்திறந்தும்- வாழ்த்து
மடல் வரைந்தும் வாழ்த்தி வழங்கியோர்க்கும்
நன்றிகளை நவில்கின்றோம்.....
Read User's Comments(0)
எண்ணிப்பார்க்கின்றாள்
06:46 |
எண்ணிப் பார்க்கின்றேன் -ஓ
இன்னும் இரண்டுநாள் இருக்கிறது
எத்தனை ஏற்ப்பாடுகள்
இதற்ககுள் செய்ய வேண்டும்...
உண்மையைச் சொல்வதனால்
ஊர்போல் ஒன்றுமில்லை
உறவுகளும் வந்து தங்குவதில்லை
உடல் உள உழைப்புமில்லை...
பணத்தைக் கொடுத்துவிட்டு
பந்தலில் ஊட்கார்ந்தால்
படம்பிடித்து முடித்தவுடன்
பந்தியும் முடிந்துவிடும்
அலங்காரம் ஆடம்பரம்
அதற்கு அடுத்த போலே
பாண்பாடு பழக்க வழக்கம்
இந்நாட்டு வழக்கம் இதுதான்
என்நாட்டில் வாசித்தாலும்
தரம் எனும் பதவிக்காய்
தாலிதனை ஏற்க்கும் போது
தன்நாட்டுப் பாண்பாட்டில் தளராமால்
தலைகுனிந்தே ஏற்கின்றாள்.
என் மனம்...
07:11 |
இன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்
இமைவழி வழியும் கண்ணீருக்கு
இன்னும் ஒய்வில்லையே
இதுதான் என் நிலையா?
கொடுமைகள் எதுவுமில்லை
கொடுக்கல் வாங்கள் பிசகுமில்லை
தனிமையென நானுமில்லை _ ஆனாலும்
தவிக்குதே மனசு....
விதியதன் விளையாட்டு
மனித மட்டத்தில் மட்டுமல்ல
நாட்டின் சட்டத்திலும் சூழ்ந்து
சதி செய்யுது இங்கே....
நிமிடங்களை எண்ணி எண்ணி
நீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்
நினைவுகள் களைவதற்குள் களைந்ததால்
கண்ணீரோடு கரைகின்றது என் மனம்.
Subscribe to:
Posts (Atom)





