பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..
அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது..
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்த என்னவனை
காலனவன் சதிசெய்து பிரித்தாலும் -என்வாழ்வில்
கதிரவன் உதயம் அவன் நினைவுகளின்றி நிகழ்ந்ததில்லை.....


0 comments:
Post a Comment