RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

பிடித்த கவிதைகள்








பெத்தவங்களுக்காக....

 உச்சரித்தேன் முதல் முதலில்
ஓர் வார்த்தை - தன்
உதிரத்தில் என்
உருவத்தை உருவடித்து
கருவமைத்து இவ்வுலகம்
காண வழி சமைத்த
என் கண் கண்ட தெய்வத்தை
அம்மா என்று - தாம்
உள்ளம் மலர - இவ்
உலகினிலேயே உதித்த இவள்
வையத்திலே வளமுடனே
வாழ்வாங்கு வாழ்திடவே
வாழ்க்கை என்னும்
பயணத்தின் படிகளிலே
படிக் கற்கள் பல தாண்டி
சிகரத்தை அடைந்திடவே - தன்
சிந்தனையை செயலாக்கி
உதிரதத்தை உரமாக்கி
ஊட்டிற்றார் தந்தையுமே - தம்
பெற்ற பிள்ளை
பாரினிலே பரந்து
புகழ் பரப்புவதற்கு
பசி உறக்கம் பாராது
பகல் இரவாய் உழைத்திட்டார் - இவர் (கள்)
பட்ட துன்பம் அத்தனைக்கும்
பாலம் அமைத்து - இவள்
பரந்து புகழ் பரப்பிடுவாள்
பாரினிலே...



வாழ்ககையின் விலை...


 திருமணம் என்பது 
இருமனங்கள் இணையும் 
பந்தம் என்றார்கள் - இல்லை 
அதில் உண்மை...
இஸ்டப்பட்ட இதயங்களை 
இணைய விடாது தடுப்பது 
கண்களில் கலந்து 
கருத்தெருமித்து 
காதலால் சேர்ந்தவர்களை
பொன் பொருள் வேண்டி 
பேராசை கொண்டு 
விலை மதிப்பிட்டு
சந்தையில் விந்திடும் 
சங்கடம் இது...........



 உண்மை உறவுகள்
உலகத்தில் எத்தனை
உள்ளம் அறியாமல்
உருகுதே நெஞ்சம்

கருவினிலே எனை தாங்கி
உதிரத்தை எனதாக்கியவள்
உறவாடி மகிழ முன்னே
உலகத்தை நீந்து விட்டாள்

மடி தந்து பசியாற்றி
பாசத்தை பகிர்ந்திட்ட
வாழ்வின் வழிகாட்டி - பாதி
வாழியினிலே ஏனோ தவிக்க விட்டு
தாயிடம் தானும் சென்றதினால்...

பள்ளித் தோழமையால்
பசுமைதனை உணர்கையில்
பருவகாலம் முடிந்தமையால்
பல திசையில் பறந்து சென்றோர்
பாசத்திலும் வறுமை..

தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உற






எண்ணங்களெல்லாம் - ஏன்
எம்முள்ளே உருவாகின
எம்மை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
அவை தினம் தினம்...

ஏக்கங்களுக்குள்ளே
தாக்கு பிடிக்காது
சிக்கித் தவிக்கும்
மனம் இதற்காய்
எல்லையை உருவாக்க
எண்ணங்களை முந்தியே
விரைதிட்ட போதிலும்
அங்கேயும் முடியவில்லை

ஒருவித ஊக்கம்
உள்ளுக்குள் உத்வேகம்
சிற்சில மாற்றம்
சில நேரம் தயக்கம்
சொற்ப நேரத்தில்
செயலுடன் இணைந்தே
சிந்தையும் பயணிக்குது

முயற்சியால் புரட்சியில்
எழுச்சி பெற்றிட்ட
எண்ணங்களால் என்றுமே
புன்னகை முகத்தினிலே
பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்

எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்



உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக 
இன்று நானிங்கு..

உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக 
இன்று நானிங்கு..



 இதமான பூங்காற்றுடன்
இனிய ராகத்தையே
தினம் தினம் மீட்டியவள் - இன்று
ஸ்வரங்களை தொலைந்து
சுருதியில் சேர்ப்பதால்
இசை தான் பிறக்குமா?
சுகம் அது கிடைக்குமா?

ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே

வாழ்க்கை என்னும் பாடலில்
வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணையும் இதயங்களிலிருந்தே
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் இசையின் திசையிலே
இனிமையும் மறந்தது....




 பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..

அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது.

வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே

தேவை எது என அறியாமல்
தேவையற்று புலம்புகிறேன் - காரணம்
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்தவன்.
கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்..... 


 அகிலம் இதில் எம்
அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து
ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமை தாங்கி
அன்புதனை அமுதாக்கி - எமை
ஆளாக்கிய அன்னையே

உலகத்தில் இல்லையம்மா
உவமை சொல்ல
உமக்கு ஈடேதும்
தவிழும் வயதில்
தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் 
இமையாய் இருந்தாய்
துன்பம் எமை 
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை நீ மறந்தாய்

ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னையே
அனுதினமும் வாழ்த்தி
வணங்குகின்றோம்......



தொலைத்தூரத்தில் இருந்து
தொடர்ந்து வருவதில்லை
நெஞ்சுக்குள் இருந்தே
நம்பிக்கை மீதினில்
நஞ்சினை கக்கியே
நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.

பொழிந்திடும் அன்பினை
இழந்திடும் போதினிலும்
பொங்கிடும் ஆசைகள்
கரைபுரை ஓடிடும் போதிலும்
தஞ்சமே இன்றி மனம்
தவித்திடும் எண்ணத்தில் - தான்
நினைத்ததை நிறைவேற்ற
போராடும் வேளையில்
பிறர் முன் துரோகி...

நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி..

புன்னகையோடு புகழ்ச்சியை
கெடுத்தே தினம்
இழப்புக்களோடு இகழ்ச்சியை
வளர்த்தே அதில்
தன்னை வளர்க்குது துரோகம்.



தேவைகளை பூர்த்தி செய்ய
தேடலில் இறங்கியவர்
ஆசைகள் அதிகரிக்க
ஆர்வமும் பெருகியதால்
அவற்றினை நிறைவு செய்ய
வேலைகளை தேர்தெடுத்து
சேவைகளை தாம் பகிர்ந்தனர்

சோம்பல்தனை தகர்தெறிந்து
சீரும் சிறப்புடனே நாட்டினிலே
செல்வ வளம் செழிப்பதற்காய்
சிரமமது பாராது உழைக்கிறார்
உடல், உள உழைப்பதனை
உவர்ந்துநீர் வழங்குவதால்
உற்பத்தி பெருகிடவே
உதயமாகும் பொழுதெல்லாம்
உளமகிழ்ந்து வாழ்ந்தனவே
உயிர்களெல்லாம் இவ்வுலகில்.

உயிர்களெல்லாம் உள மகிழ
உதிரத்தை உரமாக்கி
உழைத்திடும் உழைப்பாளி நெஞ்சங்களை 
உவ மகிழ்ந்து வாழ்த்துவோம்



வசந்தகால பறவைகளாய்
பாசம் என்னும் சிறகடித்து
வான் உயர பறக்கையிலே
பாதை வழியெல்லாம்
பக்கதுணை தான் இருந்த
அவன் பண்பு அவளிடத்தே
அகிலமதில் ஆண்களுக்கெல்லாம்
அணிமுத்து அவனெனவே
அடையாளம் காட்டியதால்
ஆயுள்வரை உறவாக்கி
அகமகிழ்ந்து வாழ்ந்திடவே
இதயத்தில் இடமொதிக்கி
இரவுபகல் அவன் நினைப்பில்
இணைவதற்காய் இல்வாழ்வில்
காத்திருப்பதை அவனறிய
காரணமே இல்லை..

பாவை அவள் பார்வைபட்டு
பந்தமதில் இணையமலே
பாசத்தினால் மாளிகை கட்டி
நீங்காத அவள் நினைவை
நெஞ்சமதில் குடியிருந்தி
பாட்டாம்பூச்சிகளாய் 
பறந்து வரும் இவர்களை
பல வண்ண மலரெல்லாம்
தேன் சுரந்துநின்று
தென்றலுடன் வாழ்த்து சொல்ல
வரும் கால துணை இவனேனவே
எண்ணிய வஞ்சி அவளும் -அவன்
நினைவுகளைநெஞ்சில் புதைத்தே
பாசம் கொண்ட உள்ளங்கள்
வாசம் வீசியே வையத்தில
வளம் வர வாழ்த்துக் சொல்லி
தன் வ்ழிப்பயணத்தை
துணையேது மின்றியே தொடர்கின்றாள்..



அவதரித்த அரை நொடியில்
அன்னை அருகே அருகாமலே
அரவணைக்க யாருமின்றி
அறியாமலே அழுகின்றேன்
அகிலமதில் எனை வி்ட்டு
தந்தை தன் வழி பற்றியே
தாய் இவளும் - தன் 
பயணத்தினை தொடர்ந்ததினால்

பசியறிந்து பால் ஊட்ட
பக்கதுணை யாருமின்றி
பாட்டிவழி சொந்தமின்றி
பதறியே துடிக்கின்றேன்

சொந்தபந்தம் ஏதுமின்றி
சொல்லியழ வழியுமின்றி
துன்பத்தில் எனை புதைந்து - விட
துளிநீர் கூட மிஞ்சாது
பஞ்சத்தில் வாடும் எனக்கு
பட்டமும் வழங்கி
கெளரவிக்கிறது சமூகம்
அநாதை என்றே என்னை..

நட்பு....


 சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?


பக்கத்து வீட்டாருடன்
பலகாரம் பரிமாரி
பல காலம் பழகியதால்
உருவானது தான் நட்பா?



பள்ளி பருவமதில்
படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?



பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?



காலம்மாறி போகையிலும்
பஸ் பயணத்தின் போதிலும்
பகல் திருவிழாவிலும்
பக்கத்தில் இருந்தனால்
ஆனாதுதான் நட்பா?



கடிதத்தில் ஆரம்பித்து
கைபேசியில் கலந்து பேசி
கணனியிலே கண் பார்த்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
கதை பேசி மகிழ்ந்ததனால்
மலர்ந்ததுதான் நட்பா?



காரணங்கள் பல கூறி
கலந்த பல உள்ளங்கள்
நட்பு என்னும் காவியத்தில்
இணையுது இங்கே - அதற்கு
வரையறை இல்லாது
வகுக்குதுவே இலக்கணங்கள்
சாதி மதம் பார்க்காமல்
சந்தர்ப்பம் பார்க்காமல்
தேவையென்று அறிந்ததுமே
தேடியே வந்துதவி
துன்பம் ஒன்று வருகையிலே
தோழோடு தோள் கொடுத்து
உறுதியுடன் இறுதிவரை போராடி
உறுதிமொழி பல கொடுத்து
உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..





கன்னியவள் வாழ்வினிலே....

 கன்னியவள் வாழ்க்கையிலே

கானல் நீராய் போனதுவோ
கற்பனைகள் பல கொண்டு
கட்டிச் சென்ற காதல் கோட்டை.
பள்ளி பருவமது துள்ளியே
சென்றுவிடும் என்பதினால்
தள்ளியே வைத்திருந்தால்
தன் காதல் சிந்தனையை.



கல்லூரி காலமதில்
காளையர்கள் கற்கும் வித்தைகளில்
காதலும் ஒன்று என்றதினால் - அது
கற்பதற்கு மட்டுமா? அல்ல
கடந்து செல்ல உதுவுமா?
கலகத்திலே அதை
கடந்தே வந்துவிட்டாள்
கடந்துவந்த பாதைகளில்
கண்ட பல காட்சிகளில்
நின்று அவள் ரசித்ததினால் - தன்
நிகழ்கால வாழ்வினிலே
நிபதந்தைகள் பல கொண்ட
நிச்சயத்தினை தான் எடுத்தால்
கை நிறைய பணம் வேண்டாம்
கள்ளத்தனம் வேண்டாம்
சிந்தனையைச் செயலாக்கி
செலவுகளை சிறிதாக்கி
தன்னிலை தான் அறிந்து
தர்மவழி செல்பவனே
தன் வாழ்க்கைத் துணைவன் என
அவள் தரணியெல்லாம் தேடுகின்றாள்



வெள்ளத்தில் தத்தளித்து
வள்ளத்தில் வந்த இவள்
உள்ள தாகத்திற்காய்
பள்ளத்தில் தேடுகின்றாள்
தெள்ளத் தெளித்த தண்ணீர்
ஆனால் அங்கே
தேங்கியே நின்றின்றது
தப்புத் தண்ணீர் 





பாசத் தவிப்பு...

 ஐயிரண்டு திங்களாய் - உன்

அகத்தினிலே  தாங்கி
அகிலம் காண வழி சமைத்த 
அன்னையே......

அன்பு காட்டி
அரவணைக்கும் வேளையிலே - தனை
தனியாய் விட்டதினால்
தினம் அழைக்கின்றான் உன்னையே....

ஆறுதல் பல கூறி
அர்த்தங்கள் பல சொல்லி
ஆயிரம் உறவுகள்
அரவணைக்க - அவன்
அருகில் இருந்தாலும்
அந்தனைக்கும் மத்தியிலே
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பாலோடு பகிர்ந்தது - நீ
பாசத்தை மட்டுமல்ல - நற்
பண்புகளை (யும்) ஊட்டியதால் - அவன்
பாரினிலே பெற்ற புகழ் அத்தனையும் - உன்
பாதம் சேர்ப்பதற்காய்
தினம் அழைக்கின்றான் உன்னையே...

பால பருவத்திலே
பாதி வழியினிலே
பரி தவிக்க விட்டு - நீ
பரலோகம் சென்று
பல வருடம் ஆனாலும் - தான்
பயணிக்கும் வழிகளிலே
பக்க துணை நீயிருப்பாய் என நம்பி
பாசத்துடனே தினம் அழைக்கின்றான் உன்னை.....





 காதலினால்....

வருடம் ஒன்று கடந்து
வயது ஒன்று கூடியதால் - நானும்
பருவ வயததைடந்து
பார்ப்பதெல்லாம் ரசிக்கின்றேன்...


பாவையவள் பின் செல்ல
பார்க்கும் கண்களெல்லாம்
பரிகசித்ததினால் என்னை
பருவ வயதினிலே
பலரும் செய்யும் தவறிதென
புரிந்து கொண்டு - நானும்
புறப்பட்டேன் உழைப்பதற்கு....


பகல் இரவு பாராமல்
பிறர் பெருமை பேசாமல்
பொறுமையுடன் உழைத்தமையால்
பெருமையுடன் வளர்கின்றேன்
பறந்து போன சொந்தமெல்லாம்
பந்தம் சொல்லி வந்ததிங்கு - ஆனால்
உற்ற துணை தான் இருந்து
உறுதி மொழி பல தந்து
ஊர் வாயை மூடுதற்காய் - என்
உணர்வுகளுக்கு உரமூட்டி
உடலுக்கு உயிர் கொடுத்து
உலகத்திலோர் உத்தமனாய்
உயர்ந்திட காரணமாய் இருந்த - என்னவளை
உரிமையுடன் அழைக்கின்றேன் - என்
உள்ளத்தில் உள்ள இடம்
உனக்கே உரியதென்று...




நம் நட்பு...

நாலு பேர் மத்தியிலே
நலம் கேட்கும் சேதியிலே
நம்மவருக்கு இடையிலேயே
நடக்குது நல் உரையாடல்...

நாட்கள் பல கடக்கையிலே
நற் கருத்துக்கள் பயின்றமையால்
நம்பிக்கையின் அத்திவாரத்திலே - நல்
நட்பு உருவாகுதிங்கே...
நட்பு என்னும் அத்திவாரம்
நாலுமாடி ஆகுகையில்
நாசுக்காய் கதை பேசும்
நம் சமூகம் மத்தியிலே
நாளடைவில் பல கேள்வி
நாளுக்கு நாள் எழுகிறது.
நாம் என்ன செய்ய?

நாட்டில் நடக்குது - பல
நாசகாரியங்கள் - இது
நம்மவர் தவறுமல்ல
நட்பின் பிழையுமில்லை
நாளைய தலைமுறை
நல்வழி நடத்திட
நம் முன்னோர் நகர்த்திடும்
நல்லிசை வீனையின் நரம்பிது - அதை
நல்லிசை சேர்ந்து
நாளும் மீட்டி
நம்பிக்கை ஊட்டி - நம்
நட்பினை வளர்ப்போம்...




குருதி தோய்ந்த எம் இனம்....

பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.


சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...



அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?



பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..



கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...





நம் காதல் கதை....

சொல்லிடவா நீ எனை
சேர்ந்த நம் காதல் கதைதனை...


கல்லூரி காலமதில்
கடைசி மணி அடித்ததுமே
கடைத்தெரு வாயில் நின்று-என்வீட்டு
கடைசித்தெரு வரை
காவலுக்கு வந்து செல்வார்



இடைவழியில் இளைஞர்யாரும்
இம்சை எதும் செய்து விட்டால்
இன்னொரு நாள் காத்திருந்து
இருட்டடி கொடுத்திடுவார்



சந்தர்ப்பம் பார்த்தே
சமூகப் பணி இணைந்து
இன் முகத்துடனே
இனிதே பணி செய்தமையால்-அனைவர்
இதயத்திலும் இடம் பிடித்து விட்டார்



உறவினர் கூடவே
உயிர் தோழிகளும் மட்டுமல்ல
உடன் பிறப்புகளும் இணைந்தே
பெருமிதத்துடனே பெற்றோரும்
காட்டிவிட்டார் நம் காதலுக்கு
பச்சைக்கொடி.....




பள்ளிப் பருவக்காதல்...

 ஊருகள் பல தாண்டி
உரிய புள்ளி பெற்றதினால்
உயர்தரம் படிக்க வந்தவர்கள்
உணர்வுகள் பல பகிர்ந்தே
உறவு கொண்டாடி மகிழ்கையிலே
உள்ளங்கள் இரண்டெங்கே
உரிமையை தமதாக்கி
புது பந்தத்தில் தமது
பயணத்தை தொடர்கின்றது.

பயணிக்கும் பாதையில்
பள்ள-மேடு பல இருப்பதினால்
பள்ளி படிப்புடனே
பக்குவத்தையும் சேர்ந்தே
துல்லியமாகவே 
தூரத்தை இலக்கு வைத்தே
துணித்தே தொடர்தமையால்
தூசாய் போயிற்று துன்பமெல்லாம்..

தேவைகளை தேர்ந்தெடுத்து
தேர்வுகளில் கால் பதிந்து
புரிந்துணர்வை புறத்தே கொண்டு
புறப்பட முன் சிந்தித்து
சிந்தனையை திறனாக்கி
தினமும் வளர்ந்தமையால்
வையத்தில் வழமுடனே
வாழ்கின்றனர் என்றென்றும்..!




பிரியா நட்பு...

 சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!

சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!

உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!



கன்னி இவள் சாபம்....






 வண்ண வண்ண புள்ளி வைத்து





வரைந்து சென்ற





வாழ்கை கோலமதை...!





எண்ணாமலே அவன் விட்ட





வார்த்தை என்னும் அம்பு - அவள்





கன்னத்தில் மட்டுமல்ல





இதயத்திலும் உதிரத்தை





ஊற்றெடுக்க வைக்கிறது...!


கருப்பொருளே இல்லாமல்
காரணங்கள் பல கூறி
கதை பேசி மகிழ்ந்ததெல்லாம்...!
கணப்பொழுதில் மறந்திடென
மண முடிக்க  சென்ற
மங்கை தனை பார்த்து
மனம் இறுகி பேசுகிறான்...!



அயலும் உறவும் இணைத்ததினால்
அறிந்தவர் புரிந்தவர் கூடி
பேசி முடிந்திட்ட (சம்) பந்தம் இது...!
சொற்பத்திலே சொந்தமின்றி
போகுமென்று சேர்ந்து வாழ
வந்தவள் மட்டுமல்ல
சொந்தங்களும் எண்ணவில்லை...!



எண்ணங்களெல்லாம்
ஏக்கங்களாயிற்று - அவனுடனான
எதிர்கால கனவு
ஏமாற்றமாயிற்று..
நம்பிக்கையிங்கு நாதியற்று கிடங்கிறது...!



மூன்று இதயங்கள்.... 

வஞ்சி அவள் நெஞ்சமதில்
கஞ்சதனமெதுமின்றி
பஞ்சமில்லா அன்பினிலே
விஞ்சியிருந்த அவன் - மண
மஞ்சமதில் மங்கைதனை
மாற்றன் மனையாளாக
மண வாழ்து தூவுகின்றான்
மனதில் வஞ்சமின்றி
விதி வரைந்த பாதையில்
சந்திந்த விழிகள் இரண்டு - இன்று
சதியின் வலையில் வீழ்ந்ததனால்
விடும் கண்ணீரை யார் அறிவார்..,!

முகத்தை அலங்கரித்து
முழு மதிபோல் இருந்த அவள் - அவர்கள்
முடிவை நிராகரிக்க தெரியாமல்
முணுக்கும் இதயமதை
மண்டபத்தின் மூலையிலே
அமர்ந்திருக்கும் அவன் தவிர
அருகில் இருப்பார் கூட
அறிய முடியில்லை..!

சனக் கூட்டம் மத்தியிலே
சந்தோஷ ஊஞ்சலிலே
சாதித்த பெருமையிலே - இவன் கூட
சங்கமித்த இதயங்களின்
சங்கடத்தை அறிந்து விட
சந்தர்ப்பம் ஏதுவுமில்லை..!

விழி வழியே வந்த காதல்
பாதி வழியினிலே போகுமென்றோ
பாசம் தந்து கொல்லுமென்றோ
பழகும் போது புரிந்ததில்லை
மண்டபமே மகிழ்ச்சியிலே
மந்திரங்கள் ஒலிக்கையிலே
மணமகனின் அருகினிலே
மங்கை இவள் தவிப்பதனை
மாற்றிட தான் மார்க்கம் உண்டோ...!





நெஞ்சம் பொறுக்குதில்லை....

நிலைமாறும் உலகில்
விலை போகும் மாதர்
நிலைதனை நினைக்க
நெஞ்சம் பொறுக்குதில்லை

பூத்துக் குலுக்கி
புதுமணம் வீசிற்ற
பூவைதனை பிடுங்கி
புழுதியினில் போட்டதினால் - வாசம்
புழுதிக்கே சொந்தமாயிற்ற
நிலையிதுவோ

வறுமையின் கொடுமையிலே
வயிற்று பசி போக்க
வசதி படைத்தோரிடம்
வயிற்றை நிரப்பிட்ட
நிலையிதுவோ

கோடி பொருளுக்காய்
நாடியே வந்தவன்
கூடியே வாழ்ந்திற்று
கூட்டிக் கொடுத்திட்ட
நிலையிதுவா..

பருவ வயதினிலே
பால் நிலை உணர்விலே
பாதை மாறி போனதினால் - இன்று
பரிதவிக்கும் நிலையிதுவோ..

குறி பார்த்தே பெண்ணை
பொறி வைத்து பிடித்து
பொதியாக்கி - கூறு
விலை கோரியதினால்
உருவான நிலையிதுவா

அற்ப சொத்துக்காய்
ஆயுளை சொர்க்கமாக்கி
நித்தம் நித்தம்
செத்து செத்து பிழைக்கும்
சோகமதை சொல்ல முடியாது
சுவர்களுக்கிடையிலே
சுகத்தை கொடுத்து
சூனியமானது அவர் தம் வாழ்வு...




நங்கை உன் கையிலே...

பெண் குலத்தின் தலைவியே
பொறுமையின் இலக்கணமே
அன்ன நடை பயிலும் மாதே
அன்பின் பிறப்பிடமே
அழகின் இருப்பிடம் நீ

தனி வழியாம் உன் வழியாம்
கயல் மீனோ உன் கண்ணில்
கொவ்வை பழம் என்றோ
புன்னகை உதட்டிற்காய்
புல்லினம் கூடினவே

கன்னத்தில் குழி அழகு
கரும் கூந்தல் அதில் அழகு
முத்தான மூக்குத்தி
உன் மூக்கிற்கே தனியழகு

முழுமதி போல் முகம் இருக்க - அதில்
மூன்றாம் பிறை வடிவில்
நீள் புருவம்

புனிதம் உள்ள குணவதியே
பூவுலகின் நாயகியே
கண்ணகி நீ வாழனும்
கணவனுக்கு பெருமைகளை சேர்க்கனும்

மாமியார் போற்றனும்
மற்றவர் வாழ்த்தனும்
இல்லறம் சிறக்கவே - நாட்டில்
நல்லறம் பெருகனும்

நாளைய சந்ததி
நன்நிலை பெற்றே
நலமுடன் வாழ்வது
நங்கை உன் கையிலே



உன் மனசு போல...

நான் சந்திக்கும் ஒவ்வொரு 
கடினமான கணபொழுதுகளையும்
எவ்வாறு சமாளிப்பேன்
உன் துணையின்றி...

தடுமாறும் தருணங்களில்
தலை தடவி
ஆறுதல் தரும்
தாயாய் இருந்த நீ
தவிக்க விட்டு செல்வதன்
காரணம் தான் புரியாமல்
புலம்புகின்றேன் பித்தனாய்

உணர்வினை பகிர்ந்து - உண்மை
அன்பினை பொழிந்த - நீ
உதறிட்ட பின்பும் - என்
உடலின் ஓர் அணுவும்
உன் நினைவின்றி அசையாதாம்

என் உடலாயிது - அதில்
உயிர் தான் இருக்கிறதா
உணரக் கூட முடியவில்லை 
ஏனெனில்!
உயிரை ஒப்படைந்து விட்டதால்
எப்பவோ உன்னிடத்தில்..

மரணத்தின் போதும் கூட
உன் மடியே தஞ்சமேன
என் மனதை
மாற்றிட தான்
மார்க்கம் உண்டோ
மாறிப் போன
உன் மனசு போல...



















பெண்மணிக்காக....







 கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே

புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன

அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்

அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்

பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று

தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார்..



















அப்பா....




  நாம் தழைக்கவென
தன் தலைமுறையை தனதாக்கி
தன் மார்பில் எனை தாங்கி
வளர்திட்ட அன்பு உருவே
என் தந்தை

எடுத்தடி எடுத்து வைக்கையிலும்
ஏடுடெடுத்து படிக்கையிலும்
என்னருகே தானிருந்து
தன் வலியாய் தாங்கிட்டார்
என் வலிகள் அத்தனையும்

முதல் எழுத்துடனே உறவின்         
முகவரி அளித்து - அன்பின்
முழு உருவாய் அன்னையுமாய்
ஆசானுமாய் அரவணைத்தே
அகிலமதில் அடி எடுத்து வைக்க
அரண்மனை அமைந்த அன்புருவே

அடி எடுத்து வைத்த நாள் முதல்
படிகள் பல தாண்டி நான்
பயணிப்பதை பார்ப்பதற்கு - முன்னே
பறி கொடுத்தால் உம்மை
பரி தவிக்கின்றேன் இங்கு

ஈருவாய் இவ்வூலகில்
இன்னல்கள் பல தாண்டி
இணையற்ற அன்பளித்தே
இரவு பகல் எனை சுமந்த
உம் உதிரத்தில் உதிந்தபுத்திர(ரி)ன்-நான்
இவ்வூலகத்தில் என்றும்
உத்தம(மியா)னாய் புகழ்பரப்பி
வாழ்ந்திடுவேன்....



















புரியாமல் புலம்புகிறேன்....











 வழிமாறி போன கண்ணில்
கருவிழியாக வந்து - என் வாழ்வை
உருமாற்றி வைத்த - அந்த
உள்ளத்தை தேடுகிறேன்

தெருவோரம் கிடந்த என்
அருகோரம் அன்று நீ
அருகாமல் விட்டிருந்தால்
அறியேனே இன்று இந்த
அவல நிலை தனை
உனை பிரிந்து

புயல் காற்றில் அகப்பட்ட
புழுதி போன்ற என் வாழ்வை
பூந் தென்றலாய் வந்து
புது வசந்தம் வீச வைத்த நீ
போன திசை புரியாமல் புலம்புகிறேன்

தடம்புரட்ட என் வாழ்வில்
தடைக்கற்றகள் பல தாண்டி
தரணியிலே தடம் பதிக்க வைத்தவனே(ளே)
தத்தளிக்க விட்டதினால் - தினம்
தவிக்கின்றேன் உன் நினைவால்

கரைபுரண்டு ஓடியே
கடல் நீரும் வற்றலாம்
காலை சூரியன் ஓர் நாள்
திசை மாறி உதிந்தாலும் - என்
உருவத்தில் நுழைந்து
உயிரான உன் நினைவு
நீங்கிடுமா எனை பிரிந்து.....















புதுவாழ்வு....







காதல் என்னும் பாடத்தை




கருத்துடனே கற்ற அவள்



தேர்வெழுதும் நேரத்தில்



தோற்றி தவறியதால்



வேறுதுறை தேர்ந்தெடுத்து



வெற்றி பெற்ற நேரமதில்



எண்ணியே பார்க்கிறாள்



மின்னி மறைந்த எண்ணங்களை..




கண்ணில் தோன்றும் காட்சிகளோடு
பல கற்பனைகள் கடந்தே
காலத்தை காதலோடு
கழித்த அவள் வாழ்வில்
இனிய தென்றலாய் வந்து
இனிய சுவாசமாய்
இணைந்த அவன் உறவால்
புத்துயிர் பெற்றே அவள்
புழுதி படிந்த சுவர்தனில்
புத்தோவியம் தீட்டினாள்...





வழிகாட்டி...

தோழனாக வந்து
தோள் கொடுத்து உதவியவன்
தோல்வியேதும் வந்திடாது - அவள்
வாழ்வு துலக்கிடவே
தூதனானான் அவள் வாழ்வில்..

வாழ்கை எனும் ரதம்
தடம்மாறி போகையில்
வடமாக மாறியே
வழிகாட்டி ஆனான்

திடமான வாழ்வுக்காய்
உரமுட்டிய வார்த்தையால்
வளமுடனே செழிந்து
ஓங்கியது அவள் வாழ்வு....




விதியின் வழியில்...


வாழ்வின் எல்லையை அறியாத
தொல்லைகள் புரியாத
துள்ளித் திரிந்திட்ட
பிள்ளைப் பருவத்தில்
உள்ளத்தை கொடுத்தவள்
கொள்ளை இன்பத்தில்
காதல் வளர்த்தாள்

கள்ளத்தனமின்றி
உள்ளச் சோகத்தோடு
செல்லக் கதைதனையும்
சேர்ந்தே பயின்றதினால்
சொர்க்கத்தின் படிகளில்
செல்கின்ற சந்தோசம் - அவள்
உள்ளத்தில் பளிச்சிட்டது

வீதி வழியில்
ஏற்பட்ட விபத்தாய்
விதி அவள் வாழ்வில்
திருமணம் எனும் வழியில்
வாழ்க்கைப் பயணத்தில் துணையாக
கரம் சேர காக்கையில்
கல்பட்டு நொறுக்கிட்ட
கண்ணாடி போன்றே
நொறுக்கிற்று அவள் நெஞ்சு

விழிதனில் நீர் கொட்ட
விரல் நுனியாலே அதே தட்டி
பாதி வழியிலே திசை மாறும்
விதியின் வழியிலே
அவள் வாழ்வு செழிந்திட
விலகியே சென்றிட்டான்

உயிர் அது துடிக்கவே
உணர்வினை ஊனமாக்கி
உறவுகள் மகிழ்ந்திட
உரிமையை தனதாக்கி
ஏற்றிட்டாள் மண மாலையை....!




மஹாகவி......


எட்டைய புரத்திலே
ஏழ்மையின் மடியிலே
ஆதிபகவானுக்கு
அலுக்காமல் தொண்டு செய்யும்
அந்தனர் குலத்திலே அவதரித்தாராம்..


மலர்ந்த முகத்துடன் கூடிய
முறுக்கு மீசையிலே
தெரிவது தோற்றமட்டுமல்ல
தெளிந்த உணர்வுகளும்


ஆண்டவன் கொடையாம்
இயற்கையை வியந்தான்
ஆதிசக்தி அன்யை
அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையை
கூடியே பாடி விளையாட
பறவைகள் பண்பினை
பாடலாய் பாடினான்


அறியாமல் கொண்டே
அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையினை
வெளியே கொண்டு வர
அறிவினை ஊட்டியே
புரட்சியை நடத்தினார்.


ஏழ்மையை மறந்து
ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட
சாத்திரம் அளித்தே - புது
சரத்திரம் படைந்தார்


கலைகளில் திகழ்ந்வன்
கண்ணமைமிதினிலே
காதலில் விழுந்தே - அவள்
கைத் தலம் பற்றினான்


அஞ்சியே வாழ்ந்ததற்கு
அஞ்சாமை ஊட்டியவன்
ஆர்வம் மிகுதியால்
ஆபத்தை ஏற்றான்


புரட்சிக் கவியிலே விஞ்சியவன்
மதம் மிஞ்சியே நின்ற
யானை அருகினில்
அஞ்சாது சென்றமையால்
பஞ்சாய் தூக்கியே
பரலோகம் சேர்ந்திற்று
மலர்ந்து மணம் பரப்பி
மக்கள் மனதில்
இடம் பிடித்தமையால்
மஹா கவியானர் 
பாரதியார்..


முத்தம்....

முத்தம் இதன் அர்த்தம்
அவர் தத்தம்
உறவுகளுக்கேற்ப
நித்தம் நேசிக்கப்படுகிறது

அன்பு நெஞ்சங்களாய்
அளவிட முடியாத
அன்பின் ஆழமதை
அள்ளியே வழங்கிடுவர்
அன்பு முத்தத்தினால்

கொஞ்சி பேசிடும் குழந்தையிடம்
கெஞ்சியே வாங்கிடுவர்
முந்தி தவமிருந்து
மூன்னூறு நாள் சுமந்து
புவிதனில் பிறந்ததும்
உச்சி முகர்ந்தவள்
அளித்திடும் அன்பு முத்தமதில்
அனைத்தையும் மறக்கின்றாள்

பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் கோலமிட
கஞ்ச தனமின்றி அன்பு
கரைபுரட்டோடுது தந்தையின்
அன்பு முத்தத்தில்..

கூடப் பிறந்தோரும்
கூடி ஓடி விளையாடுவோரும்
கூட வரும் உறவுகளும்
கொடுத்து பரிமாறிடுமே

பக்கத்தில் இருந்து மட்டுமல்ல
காற்றில் பரந்தும்
கடிதத்தில் புதைந்தும்
தொலைபேசி தொடர்பிலும்
பாரிமாறுகிறார் பாசமாய்...

அன்பின் அமுத சுரபியாய்
அனைத்து உயிர்க்கும் பொதுவாய்
அகில உலகமே பரிமாறும்



தோழியே...


எங்கெங்கோ பிறந்து
எல்லையற்று மிதங்கும்
எண்ணங்களை எம் கைக்குள்
அடக்க நினைப்பது 
நிலையா? நியாயமா?

பிறக்கின்றே போதே
விதித்தி்ட்ட விதியை
விலகிட்டே நீயும்
வென்றிடலாமா வாழ்வை
நினைக்கின்ற போதே
கனக்கின்ற மனதை
களைத்திடத்தான் ஏதும்
மார்க்கமுண்டா தோழி?

வாழ்வின் உயர்ச்சிக்காய்
முயற்சிக்கின்றோம் தினம் - ஆனாலும்
மூழ்கியே எழுகின்றோம்
விதியெனும் சமூத்திரத்தில்..

விதிவழியாய் வரும்
வலியானது இங்கே
விழி வழியாய் விடும்
கண்ணீரோடு சங்கமம்





காதல் தோல்வி....




சொல்லிக் கொடுத்திட்ட

பள்ளிக் கணக்குடனே
மன பாசத்தையும்
அள்ளிக் கொடுத்ததால்
அதில் மூழ்கிட்டாள் அவளும்

சோகம் மறந்து
துள்ளிக் திரிகையிலே
உள்ளம் கொள்ளை போனதினால்
கள்ளத்தனமாகவே அவர்கள்
காதல் வளர்த்தனர்.

ஒட்டி இருந்த சொந்தமெல்லாம்
திட்டியே தீர்த்தமையால் தினம்
வெட்டியே விலகி பகையினை
கிட்டிய நாட்டுக்கு சென்று - தாலி
கட்டியே வாழ்வதற்கு - இருவரும்
திட்டம் வகுத்தார்கள்

பெட்டியை கையிலேந்தி - கால்
முட்டியின் வலி மறந்து
எட்டியே பார்த்து நின்றான் தெருவை

கட்டிக் காத்து வளர்த்திட்ட
பெற்றவர் சிந்தையது
முட்டியே மோதியதால் மூளையை
வெட்டியே விட்டுவிட்டாள்
வெளிக்கிட்ட பயணத்துடன்
விரும்பிய உள்ளத்தையும்..

உயிரிலே கலந்திட்ட அவன்
உருவமதால் உடைந்த மனம்
ஊரார் எய்திட்ட - வார்த்தை
அம்புகளின் அவமானத்தினாலும்
மாத்திரையை துணைக்கணைத்து
மரண தேவதையின்
மடியினிலே தலை சாய்ந்தாள்.



அவளுக்காய்...


விதியேன எண்ணியே
விலகிட்ட போதிலும்
வழியதில் வந்தும்
நிழல் போல் வலியது
தொடருதே என்னை

உறவுகள் உருவாகும் போது
உணராத அர்த்தங்கள்
உருமாறும் போது
உதிரத்தை உறிஞ்சுதே
ஊமையாய் இருந்தே..

வஞ்சம்மில்லாத அவள்
நெஞ்சமதில் - நான்
நேசிக்கப்பட்டதினால்
வஞ்சியவள் வாழ்வில்
வளம் மிகுந்து ஒளிர்வதற்காய்
அன்பு எனும் அணையாய்
அகல்விளக்குக்கு ஒப்பாய்
மாய விம்பத்தினால்
திரியும்மிட்டு அதில்
யாரும் அறியாமலே
அகம் வடிக்கும்
கண்ணீராய் என்னையாக்கி
அதில் ஒளியை தேடுவதை
எனைத் தவிர யார் அறிவர்.





அறியாமை..
என் வாழ்வின் பயணத்தில்
எங்கிருந்தோ வந்தவளே - எனை
தனதாக்கி சென்றதனை
நானே அறியவில்லை
வழிமாறி வந்ததினால்
பழியேதும் வந்திடுமோ?


அழியாத என் பாத சுடுகளில்
வழி தேடி வந்து என்னை - சொந்தம்
குழி தோண்டி புதைந்திடுமோ?

வெளியேற முயலுகிறேன்
துளிகூட முடியவில்லை - அவள்
இதய குழியில் விழுந்த என்னால்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS