RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

தீபாவளி வாழ்த்துக்கள்....

தீப ஓளியிலே இல்லம் ஓளிபெற
தீமைகள் நீங்கி உள்ளம் ஓளிபெற
தீராத தொல்லைகள் எல்லாம் நீங்கி -  நல்
தீர்வு பெற்று எம் வையம் வாழனும் எந்நாளும்...

வீண் விவாதங்களால் எழும்
விரிசல்கள் தவிர்ப்போம் எம்மிடையே
இனிமையாய் பேசியே இதயங்களோடு
இன்பமாய் வாழ்வோம் எந்நாளும்...

இந்நாள் மலரும் திருநாள் போல்
எந்நாளும் திகழ்ந்திடவே -  நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வைத்தியசாலையில்.....

அந்நியா நாட்டிலே
அடைக்களம் புகுந்த இவள்
அறிந்து கொண்ட ஓர் - புது
அனுபவம் இது........

வசதிகள் பலவுடனே
வகை வகையாய் வைத்தியம்
தனித்திருந்தாதனால்  - நானும்
தவிந்து விட்டேன் தனிமையிலே...

வலியாலே உடல் துடிக்க
மொழி புரியாது முழிமுழிக்க
ஆதாரவாய் என்னை நானே
அரவனைத்தேன் அன்புடனே - என்
அருகில் யாருமில்லா வேளைகளில்...

நோய் எதிர்ப்பு உனக்கில்லையென
தாய்வீட்டில் தனிக் கவலையெழ
காய் கறிகள் மட்டும் உண்ட  இவள்
வாய்  மருந்து என இன்று
எதை எதையோ உண்கிறதே....

உதிரம் எடுக்கையிலும்
ஊசி கையில் போடுகையிலும் இரவில்
உறக்கமின்றி தவிக்கையிலும்
உதிரும் கண்ணீருடனே ஊர் நினைவுகளும்
உருண்டோடியே கரைந்தன
கடந்த சில நாட்களாய் வைத்தியசாலையில்.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆத்மா சாந்திக்காய்........

கண்முடி முழிக்கும்
கனப்பொழுதில் காலனவன் - தன்
பாசக்கயிற்றை வீசியதால்
பறிபோனது அவள் தாலிக்கயிறு மட்டுமா
பரிதவிக்குதே வழிதெரியாது அக்குடும்பமே...

மஞ்சள் குங்குமத்தினை இழந்து - அவள்
பிஞ்சுமனம் இரண்டை கையில் சுமந்து
பஞ்சத்தில் வாடுகிறாள் -  நீ
கொஞ்சத் தூரம் செல்ல முன்னே- பார்க்க
நெஞ்சம் குமுறுதையா இன்நிலையை...

மின்னல் என வாழ்வைக் கொடுத்து
இன்னல்கள் பல விளைவித்து
சின்ன வண்ணக் கோலம் போட்டு
எண்ணம் போல எடுத்தடி வைக்கையிலே
இறைவா இடையில் பறித்தது ஏனோ....

குமுறும் அவள் இதயத்துக்கும்
குழந்தைகளும் வார்த்தைகளால்
ஆறுதல் சொல்ல முடியவில்லையானாலும்
அன்னர் ஆன்மா சாந்தியடைய
ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

      ஓம்சாந்தி சாந்தி சாந்தி....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆசிரியர்தின வாழ்த்துக்கள்.....

சின்னஞ் சிறார்கள் எம்மை
வண்ண வைரங்களா வாழ்வில்
மின்ன வைப்பதற்காய்
என்நாளும் உண்மையாய் உழைக்கும்
உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை
இன்நாளில் வாழ்த்திடுவோம்...

உள்ளத்தில் கள்ளமின்றி
நெஞ்சத்தில் வஞ்சமின்றி
பஞ்சமின்றி கல்விதனை
அள்ளி அள்ளி வழங்கியே
நல்லறிவை நமக்குட்டி
நாளைய சமூகத்துக்காய் இன்றே
உழைப்பவர்கள் ஆசிரியர்கள்...

கடமை கண்ணியம்
காட்டுப்பாட்டுடனே
கண்ணான கல்விதனை - இனிய
கணியாக எமக்களிக்கும் ஆசிரியர்களை
இன்றல்ல  என்றென்றும்
வாழ்த்தி வணங்கிடுவோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மண்ணிப்பு..

மனிதனைப் படைத்து அவனுள்
மனதினைப் படைத்து கூடவே
மறதியையும் படைத்தன் - ஏன்
தவறுகளை மண்ணிப்பதற்கே...

தவரென்று தெரியமால்
தடுக்கி விழுந்தவர் பலரும் - வழி
தவறி நடந்தவர் பலரும் - மனம்
திருந்தி வாழ மண்ணித்து வழி விடும்

உழைப்பினில் உறுதியும்
உள்ளத்தில் உண்மையும்
உறங்காத மனிதர்க்கு ஒருநாளும்
உதவுவதில்லை மண்ணிப்பு...

தீமையுடனே தீண்டமை அழிக்க
தண்டனை வழங்கி தலைகுனிய வைக்காது
அன்பாலே அரவணைத்து
அவர் தவறு உணரவைப்பின் - அவர்க்கு
உண்மையாய் வழா உடன்பிறப்பாய்
அருகிருக்கும்  மண்ணிப்பு...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்பை மிஞ்சி.....


உள்ளத்தின் அழத்தில்
உயிரோடு ஒன்றியே தினம் தினம்
உற்றேடுக்கும் உண்மையண்பதனலே
உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது...

விட்டுக் கொடுப்புகளால் அல்ல
வித்தியாசம் இல்லா அன்பால்
இன்ப ஊஞ்சலிலே தினம்
இதயங்கள் உலாவருது இங்கே...

ஆயுள் வரை தொடர்ந்திடும் - உன்
அன்புதனை மிஞ்சி எனக்கு
அகிலத்திலுள்ள பொருட்களிலே
அடைவதற்கு என்று எதுவுமில்லை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இல்லறத்தில்.......

இரு உள்ளதில் பூத்த அன்பு
இறைவனின் திருவருளால்
இல்லறத்தில் இணைந்து
இன்றுடன் ஓராண்டு......

உலகொல்லாம் உறவு பெருக
உள்ளத்தில் அன்பு பெருக
உற்சாக மகிழ்ச்சியிலே - அவர்கள்
ஊதாடினிலே பூண்ணகை பொழிகிறது நாளும்....

கூடலோடே இடை இடையே
ஊடலுமே வந்து சென்றாளும்
கூட்டுக் குடும்பத்திலே - என்றும்
கூடவே இருக்கனும் இன்பம்...

இதயங்களில் அன்பு பெருக
இல்லத்தில் இன்பம் பொழிய
இன்று போல் என்றுமே இருக்க
இறைவனை வேண்டுகிறோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விடுமுறை

ஓடி ஆடிப் பாடிக்கும் பாலரும்
ஒயாது  உழைக்கும் காரங்களும்
ஓய்வாக அம்ர்ந்து உலகத்தை ரசித்து
ஓன்றாக உண்பதற்கே விடுமுறை....

நேரத்துக் ஏற்ப நேசத்தை பகிர்ந்து
தேசங்கள் பல சென்று - தம்
சேகத்தை மறந்து - நிறைந்த
பாசத்தை படரவிடும் உறவுகள் பல...

விதியின் எல்லையினை அறியாது
விழிமுடித் தூங்காது
விடிய விடிய உழைத்து - வாழ்க்கை
விளங்க முன்னே வடிய உயிர்கள் பல...

உலகத்திலுள்ள உயிகள் எல்லாம் -தம்
உள்ளக் கவலைகள் மறந்து
உல்லாசமாக உறவுகளுடன்
உலாவரும் காலமே விடுமுறை.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க்கை வழி......

தொலை தூரம் சென்றதானல்
தொலைந்து போவதில்லை உறவுகள்
தொடர்பினை தொடர முடிய பற்பல
தொல்லைகளில் அவர்கள் நிலை

தெரியதா மனிதர்கள்
புரியதா மொழி அத்தனையும்
அறிந்து கொள்ளும் ஆவலில்
பறந்து திரியும் மனிதர்கள்

தேசங்கள் பல தாண்டி
தேகத்தை வருத்தி அவர்கள்
காலத்தோடு ஓட்டி வாழா படும்
கஸ்டங்கள் தான் எத்தனை

வாழ்க்கையின் ஒவ்வரு படிக்கும்
வரி வரி என விதிக்கும் அரசு மத்தியில்
விதியினை வெல்ல மனிதர்_ இங்கே
மதியோடு போடுகிறார் போட்டி

உண்மைதனை உணர்ந்து கொண்டால்
உறவுகளுக்கிடையிலில்லை விரிசல்
உலகில் எங்கிருந்தாலும் உண்மைஅன்பு
உள்ளத்தில் நிலைத்திருக்கும் என்றும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்பே உன் வயதென்ன!


 நட்புக்கு வயதுண்டா
 வயது முதிர்ந்து
 வாலிபம் விடைபெற
முதுமை வறவேற்க
மூப்பு தொடர்கிறது
உடலுக்கு துணைசேர்க்க
உறவானது  ஊன்றுகோல்
கண்பார்வை மங்கி
காது மந்தமாகி
உணவு செரிக்க முடியாத நிலையிலும்
உன் நினைவுகள் செரிக்கிறத
என் தோழனே....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்பு.....

அன்புதனை அதிகமாக
யாரிடமும் வைக்காதே
ஏன் என்று கேட்கிறீரா
எடுத்தே இயப்புகிறேன்...

உண்மை அன்பாலே இணைந்து
உயிரோடு கலந்திட்ட உறவு
பிரியும் நேரத்தில் அழுவது
உன் கண்களாக இருக்காது
இதயமாகதான் இருக்கும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நட்புகள்.....


முகம் பார்த்து
முகவரி தெரிந்து
முழுவதும் அறிந்து
முதிர்ந்தன  சில நட்புகள்..

அறிமுகமே இல்லாது
அவலுடன் அருகமர்ந்து
அன்பால் அரவணைத்து
ஆயுள் வரை பயணிக்கும் சில நட்புகள்..

பணத்தை பார்த்தவுடன்
பந்தத்தை உருவாக்கி
பழக்கத்தை உறவாக்கி
பழம்போல கனியும் சில  நட்புகள்..

காலங்கள் பல கடந்தும்
கடல் தண்டி வாழ்ந்தாலும்
கஷ்டத்தில்  கைகொடுத்து
கவலைகளை மறக்கவைக்கும் உண்மையான சில நட்புகள்...

நெஞ்சத்தை கல்ளாகி
வஞ்சத்தை சொல்லாகி
எண்ணத்தை புன்னாக்கி
பாசத்தை துண்டாக்கும் சில நட்புகள்...

வேசத்தை விதைத்து
நேசத்தை  இராண்டாக்காது- உண்மை
பாசத்தை படரவிடுங்கள்
நட்பெனும்  புனித தாடகத்தில் ...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அடைக்களம்.

ஆகாயத்தின் அந்தப் புரத்தில்
ஆன்மா திருப்தியை தேடுவதை விட்டு
அலைபாயும் எம் எண்ணங்களை நாமே
ஆழ்படுத்தி அன்பால் அரவணைத்தால்
ஆனந்தமே நாம் வாழ்வில் என்நாளும்...

வேதனை வளர விட்டால் நாளை
வேடிக்கை ஆகாலம் உன் வாழ்க்கை
சாதகமாய் மாற்று எதையும்
சாதனை படைத்து விடலாம்.....

இன்பமும் துன்பமும் இருப்பது - எம்கையில்
இயாலாமை என்பதை இன்றே - நீ
இல்லாமால் நீக்கிவிட்டால்
இடரின்றி வாழலாம்  வையத்தில்

ஆணவத்தை அடியோடுவிரட்டா அவதிப்படதே
அள அளவாய் சுருக்கி  -அன்புக்கு
ஆணைபோடாது அகமகிழ்ந்து உறவாடு
அகிலமே உன்னிடம் அடைக்களம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உண்மை உணரா உள்ளங்களா?

உதட்டால் சிரித்த
உள்ளத்தில் ஒன்று வைத்த
உண்மையில்லா வார்த்தைகள
உதிர்க்கின்ற மனிதர்களோ...

மனிதரில் இத்தனை நிறங்களா? _அவர்கள்
மனதினில் இத்தனை தோற்றங்களா?
வாழ்னிவில் இத்தனை மாற்றங்களா?
அவர்கள் வார்த்தையில் இத்தனைதடுமாற்றங்களா?

அன்பென்றும் பண்பென்றும் சொல்லிக்கொண்டு
அடுத்தடுத்து வேஷம் போடும் சுயநலவாதிகளோ
எது உண்மை?எது பொய்? இதைவிட எது நன்மை
என்றே தினம்தினம் பார்க்கும் மனிதர்களோ...

வஞ்சனை ஒன்றே அவர் நோக்கங்களா?
பிறரை வாழ்வில் வீழ்த்திட முடியா ஏக்கங்களா?
பின் நின்று புறம் பாடும் நெஞ்சங்களா?
பின்னி பிணைந்து செய்யும் வஞ்சங்களா?

உண்மை உணரா உள்ளங்களா?
உயிர் இனிக்க பேசும் உறவுகளா?
உள் ஒன்று வைத்து பேசும் கூட்டங்களா?
உங்களுக்கும் புறம் உண்டு அறிவீர்களா?

வேஷம் போடும் வெகுளிகளா?
பாசமாய் பேசும் பகைமைகளா?
மானசீகமாய் வாழப் பார்க்கின்றேரை_ ஏனோ

மனிதனாகவே வாழப் பணிக்கின்றார்?

துன்பங்களையும் துரோகங்களையும்
தூசாய் தூரத்தூக்கி போட்டுவிட்டு ஒருவருக்கு ஒருவர்
உறுதுணையாய் இணைந்துவாழ வழியமைப்போம்
உண்மை உணர்ந்த உள்ளங்களாய்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றிகள்.....



நல்லதொரு வாழ்க்கைதனை
நமக்கமைத்துத் தருவதற்காய்
கண்ணிரண்டும் அயராது-  தாம்
மண்ணின் உழைப்பாலே
கல்விதனைப் பரிசளித்து
கடல் கடந்து அனுப்பி வைத்து
கைப்பிடித்தும் வைத்துவிட்டார்- இணைந்தே
காலமெல்லாம் வாழ்வதற்காய்....

உதிரத்தில் பங்கெடுத்து
உடன்பிறப்பாய் உதித்தவரும்
உறுதியுடன் அவர்கள்தமை கைப்பிடித்தே
உற்றதுணைனா உறவுகளுடனும்
உண்மையன்பைப் பகிர்ந்தளித்து
உறவான அண்ணான் அண்னி-  அனைவரதும்
உடல் உள உழைப்பாலே
உள்ளங்கள் இரண்டும்-இங்கே
 உறவுப் பாலத்தில்
ஊர் போற்ற இணைந்தனவே...

இந்நன்நாளை சிறப்பிக்க
நாடுகள் பலதிருந்தும் நல் வருகைதந்து
நம்மை வாழ்த்திச் சென்றவர்க்கும்
நல்வாழ்த்துக்களை மனம்திறந்தும்- வாழ்த்து
மடல் வரைந்தும் வாழ்த்தி வழங்கியோர்க்கும்
நன்றிகளை நவில்கின்றோம்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதயத்தால் வாழ்த்தும் உறவுகள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருமண வாழ்த்து


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எண்ணிப்பார்க்கின்றாள்


எண்ணிப் பார்க்கின்றேன் -ஓ
இன்னும் இரண்டுநாள் இருக்கிறது
எத்தனை ஏற்ப்பாடுகள்
இதற்ககுள் செய்ய வேண்டும்...

உண்மையைச் சொல்வதனால்
ஊர்போல் ஒன்றுமில்லை
உறவுகளும் வந்து தங்குவதில்லை
உடல் உள உழைப்புமில்லை...

பணத்தைக் கொடுத்துவிட்டு
பந்தலில் ஊட்கார்ந்தால்
படம்பிடித்து முடித்தவுடன்
பந்தியும் முடிந்துவிடும்

அலங்காரம் ஆடம்பரம்
அதற்கு அடுத்த போலே
பாண்பாடு பழக்க வழக்கம்
இந்நாட்டு வழக்கம் இதுதான்

என்நாட்டில் வாசித்தாலும்
தரம் எனும் பதவிக்காய்
தாலிதனை ஏற்க்கும் போது
தன்நாட்டுப் பாண்பாட்டில் தளராமால்
தலைகுனிந்தே ஏற்கின்றாள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் மனம்...



இன்பமே எனைச் சூழ்ந்துள்ள போதிலும்
இமைவழி வழியும் கண்ணீருக்கு
இன்னும் ஒய்வில்லையே
இதுதான் என் நிலையா?

கொடுமைகள்  எதுவுமில்லை
கொடுக்கல் வாங்கள் பிசகுமில்லை
தனிமையென நானுமில்லை _ ஆனாலும்
தவிக்குதே மனசு....

விதியதன் விளையாட்டு
மனித மட்டத்தில் மட்டுமல்ல
நாட்டின் சட்டத்திலும் சூழ்ந்து
சதி செய்யுது இங்கே....

நிமிடங்களை எண்ணி எண்ணி
நீண்டநாள் காத்திருந்த உறவுகள் பயணம்
நினைவுகள் களைவதற்குள் களைந்ததால்
கண்ணீரோடு கரைகின்றது என் மனம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புதல்வன்....



உறவுப் பாலத்தின் ஓர் தொடராய்
ஊர்பல தாண்டி வந்து
உதித்திட்ட உதய சூரியனே-  உனை
உச்சி முகர்கின்றோம்.

உறவுக்கு உரம் சேர்க்க
உன் வரவுக்காய் காத்திருந்த
உள்ளங்கள் அத்தனை பேர்
ஊதட்டிலும் பூத்தது புன்னகை.

தந்தை தாய்க்கு தலைமகனாய்
தலைமுறை தலைத்திட
தரணியிலே தடம்பதித்த
தவப்புதல்வனே  நீ......

பலகலையும்  கற்று
பாரெல்லாம் போற்றும்
பண்புகள் நிறைந்த - நல்
புதல்வனாய் திகழ வாழ்த்துகின்றோம்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உம்கையில்....




சொல்லத் தயக்கமா அல்ல- அவள்
செயலால் கலக்கமா
உள்ளத்தில் தாக்கமா எது -அவள்
ஊதட்டை தடுக்குது....

எண்ணத்தை மறைக்கலாம் - முகத்துக்கு
வண்ணமும் பூசலாம்  வாழ்க்கைச்
சின்னத்தின் உதயத்தை
என்னத்தில் மறைப்பது..

பிழை ஒன்றும் இல்லை -  இங்கே
கிளையதன் வளர்ச்சியை
விலை கொடுத்து வாங்குவதல்ல
நிலைதடுமாறாது உரம்வாய்ந்த
வேராய் இருப்பின் நீவீர்
விழுது ஏதும் தேவையில்லை...

வாழ்க்கையின் பாதையில்
நம்பிக்கையுடன் நம்பிக்கால்வைத்து
இடுக்கையை உதைப்பது
உம் கையிலுள்ளது என்றும்...

தன்நம்பிக்கையுடன்
அயாராது உழைத்து -  மனம்
தளராது வாழின்  -  உமக்கே
வாழ்க்கையின் வசந்தம்
தரனியில் என்நாளும்.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முயற்ச்சிக்கின்றேன்



தெரியதா  மொழி
அறியதா மனிதர்-ஆனாலும்
மரியாதை அதிகம் ஆதலால்
புரியதா பலதையும்
புரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...

பட்டங்கள் பலபெற்று
பதவிகள் பல வகித்தாலும்
சட்டங்கள் எமங்கு
சார்பாக இருந்தாலும்-வாழ்க்கை
கட்டங்கள் பலதாண்டி
கடமையை சரியாக செய்ய
தெரியதா மொழியைத்
தெரிந்து கொள்ள முயற்ச்சிக்கிறேன்...

சுற்றுகின்ற பூமியிலே
சுமை நிறைந்ததல்ல வாழ்க்கை
சற்று நின்று சிந்தித்து செயற்பாட்டால்-அதன்
பசுமைதனை நாமும்
கற்றுக் கொள்ளலாம் என்பதனால்
நானும் முயற்ச்சிக்கின்றேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் இராச்சியத்தில்...


விழிகளில் விழுந்து
மூச்சினில் கலந்து
மனதினில் தவழ்ந்து
இதயத்தில் இடம் பிடித்து
காதலால் ஆட்சி செய்யும்
உன் இராச்சியத்தில் -என்றும்
நான் இளவரசியே...

காதல் எனும் தேர்வெழுதி
கடமைதனை ஏற்ப்பதற்காய்
தடம் பதித்திட்ட தேசம் வாழ்
காதலரே கேளீர்...

கண் காணும் சில காட்சிகளோ
பிறர் சூழ்ச்சிகளோ -இன்றி
நல்  மனச்சாட்சியோடு ஓன்றி
இல் ஆட்சியை நடத்தின் -உம்
காதல் இராச்சியத்தில்
தரணியும் இணையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்னையும் தந்தையும்......


அகிலத்தை அறிவித்த
அன்பின் முகவரிகள்
ஆண்டவனின் அருள்வடிவம்
அனைவருக்கும் அரும் பொக்கிசம்
அன்னையும் தந்தையுமே...

அன்னை  மடியினிலே
அகிலத்தில் அவதாரித்தேன்
அன்புத் தந்தை தோளினிலே
அதை வலம் வந்தேன்...

பகலிரவாய்ப் பாடுபட்டு
பாசத்தால் எமைச் சுமந்து
பார் போற்ற நாம் வாழ
பட்ட துன்பம் அத்தனைக்கும்-அது
பரிசாய்  மனம்  மகிழும்
அன்புத் தெய்வங்களே
அன்னையும் தந்தையும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல்


அன்பின் அருவுருவம்
ஆண்டவனின் அன்பளிப்பு
இதயங்களின் இடமாற்றம்
ஈருயிர்களின் ஒன்றினைவு காதல்...

உள்ளத்தைக் கவர்ந்தவர்க்காய்
ஊர்கூடி தடுத்திட்ட போதிலும்
எதிர்ப்புக்கள் பல தாண்டி
ஏற்றிட்ட இதயங்கள் அன்பால்
ஐக்கியமானது காதல்...

ஒளிமாயமான வாழ்விற்காய்
ஓயாது உழைத்து-ஓர்
ஒளடதப் பொருளாய்
அகிலத்தில் அணைத்துயிர்க்கும்
அக மகிழ்ச்சியைக் கொடுத்திடும் காதல்.

காதலுக்காய் காத்திருப்பவரும்
காதலில் கால் பதித்தவரும்
காதல் தேசம் இதில் காலமெல்லாம்
கலந்து மகிழ காதலுடன் நானும்
காதலரை வாழ்த்துகிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புதுத்தடம்....


பிறக்கும் போது அறியவில்லை
பூமி எனக்கு புதியதன்று
வளரும் போதும் தெரியவில்லை
வரம்பு இல்லை உறவுக்கென்று

பள்ளிக் கல்விதனை
பசுமையுடன் கற்ற இவள்
பெருமையுன் பதவிதனை
கையில் ஏற்று கடைமைக்காய்
காத்திருக்க முன்னே...

இளமைக்கால தென்றலுடன்
இனிமையும் சேர்ந்திடவே
வெற்றியுடன் வெளிக்கிட்டாள்
வெளிநாட்டுப் பயணத்திற்காய்

புரிந்த்து பாதி புரியதது மீதி
தெரிந்த்து சில தெரியத்து பல
சங்கடங்கள் பல பட்டே
சமாளிக்க கற்றுக் கொண்டாள்

வறுமை ஏதும் இல்லாது
நிலைமைக்கு ஏற்ப்பவே எழிலுடன்
எளிமையாய் அமைந்த
இவ்வாழ்வை இரசிக்கையில்
இறைமையின் பரிசாய்...

புதுவாழ்வும் புத்தாண்டும் வரவேற்க
புத்தம் புதியதாய் சுற்றமும் கூடிட
புதுநாட்டில் புகுந்தவீட்டில்
புன்னகையுடனே பூமியில்
புதுத்தடம் பதிக்கின்றாள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதயங்கள் கைகளிலே.......



பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையிலான பித்தலாட்டத்தில்
வாழ்க்கையின் வழுக்களை
அறியாமலே அலைமோதும்
ஆனந்த எண்ணங்கள்
அகிலமதில் அலங்கரிக்கப்படுமா?

அறிவியல் உலகம்
ஆகாயத்தைக் கடந்தபோதும்
ஆண்டவன் வரைந்த விதிதனை
அறிய   முடியவில்லை
அறிஞர் பலர் கூடியும்.

அவரவர் வாழ்வில்
பயணங்கள் பலவாகி-பல
பந்தங்கள் சொந்தங்கள் உருவாகி
பாசத்தில் திழைத்திட்ட போதிலும்
உள்ளங்கள் உணர மறுக்குது
உண்மை இன்பத்தின் இனிமையை..

வீதியிலிள்ள மாடி கோடிகள் மேல்
மனதைப் படரவிட்டு-பாவியாய்
பாதியில் வாழ்வைத் தொலைத்தவர்
சேதிகள் அறிந்த பின்னும்
நீதிவழியில் நிளும் பயணங்கள் சிலவே.

பழகிய உறவுகள் பாசத்தை
பாதியில் பிரிந்திட்ட-அந்த
பாரத்தைக் குறைத்திட
பசுமை நினைவுகளை
பாலமாய் ஆக்கி அழகாய்
பயணத்தை தொடரும் பலர்.

இறைவன் வரைந்திட்ட
வாழ்க்கைப் பயணத்தில்
இவ்வுலக வாழ்வினை
இன்பமாய் நகர்த்துதல்
இனிய இதயங்கள் கைகளிலே..... .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நினைவுகள்.....

இவ்வுலக வாழ்வில்
இல்வாழ்வு புகமுன்
இன்னொரு மனையில்-இவள்
இணைந்து வாழ்ந்திட்ட
இருவருட வாழ்வின்
இனிய நினைவுகள்-இங்கே...

அந்நியா நாடென்றில்
அடியெடுத்து வைத்த இவள்
அந்நியமாய் எண்ணது
அவள் மனையாய்
அகம் மகிழ்ந்து வாழ்ந்தாள்
அம் மனையில்.....

அன்பால் அரவணைத்து
அறுசுவையாய் உணவளித்து
அறுதலாய்க் கதைபேசி
அம்மணையில் அவள் அன்னையனால்
அவ் இல்லத் தலைவி.

மெல்ல நடைநடந்து
நல்ல பொருள்தேடி-நாம்
நடந்திட்ட தெருவெல்லாம்-நட்புடனே
நல்லது கெட்டது என
பகிர்ந்திட்ட கதைகள் பல....

தனிமையென அறிய முன்னே
தங்கையாய் என்னருகில்-அவள்
மழலை மொழி கேட்கையிலே
கவலைகளைக் கழைத்திடுவேன்.

அணத்திலுமே அரைவாசி
பகிர்ந்தளிக்கும் அவள் பாசத்தை
பக்கத்திருந்தே பகிரமுடிய-ஓர்
பரிதவிப்பு இருவர் மனதிலுமே...

உலகத்தின் சுழற்ச்சியில்
புருவங்கள் மட்டுமா?-மறுகிறது
உருவங்கள் உருமாறி
உறவுகள் பல உருவான போதிலும்
திரவமாய் ஓடுது பல
திடமாய் நிலைக்குது சில....

காலங்கள் மாறி பலவண்ணக்
கோலங்கள்  நிலையான போதிலும்
நெஞ்சில் நீங்காது நிலைக்குது
இனிய நினைவுகள் என்றும்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS