நட்பு...
17:09 |
ஊரு பேரு தெரியமால்
உருவேதும் அறியாமல்
உதட்டுவழி வார்த்தைகளில்
ஊற்றெடுத்த உறவு -இன்று
உயர்ந்து நிற்குது -இங்கு
உன்னத நட்பைச் சொல்லி....
உள்ளத்தில் கள்ளமில்லை
நெஞ்சமதில் வஞ்சமில்லை
நேர்மையினில் ஏழ்மையில்லை - இங்கு
நீதியினில் ஊனமின்றி
ஓளிவிட்டு ஓளிர்கிறது
உலகமதில் எங்கள் நட்பு...
இனிய நட்பிதற்க்காய்
இணையவழி அழைப்பெடுத்து
இனிதே தொடர்ந்து வந்து
ஈராறுமாத இறுதியின் பின்
இன்னொர் ஆண்டில் கால்பதித்திட்ட
இவ் நட்பு என்றும் தொடர்ந்திட
இறைவன் துணை நாடுகின்றோம்...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
இனிய நட்பிதற்க்காய்
இணையவழி அழைப்பெடுத்து//
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
rathy supper,
நட்பு தொடரா எனது வாழ்ந்துகள்.
ஓராண்டு நிறைவுக்கும்
அழகான கவிதைக்கும் என்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களும் நட்பு தொடரா வளம் சேர்ககட்டும்
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள்
Post a Comment