RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அவனையே....

அறியாத ஆயுள் இதில்
அனுபவிக்க எண்ணியே
ஆரம்பர வாழ்வுதனை
அணை போட்டு விடாதே
அருவி போல் பொங்கிவரும்
அவன் அன்பு அதற்கு...

உள்ளமதில் உனை
உணராமலே உதித்திட்ட
உண்மை அன்பு அதனை
உறவுகளுக்காயும் - உன்
சுயநலத்திற்காயும்
உதிர்ந்து விடாதே

ஊருக்காய் உதயமாக்கி
உன் வாழ்வுதனில்
உலர்ந்த காற்றை சுவாசிக்கும்
உமைப் பொண்ணா நீயும்?

நெஞ்சமதில் நேர்மை கொண்டு
நீதி வழி பயணிக்கும் நீ
விதி விரிக்கும்
சதிவலையிலே சிக்காது - உன்
மதிதனை மீட்டி பார்த்தே
பதியாய் அவனையே பற்றி விடு..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

சிசு said...

எதுகையும் மோனையுமாய் கவிதை களைகட்டியிருக்கிறது.

Post a Comment