RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

பாசவலையிலே....

பாடித் பறந்திட்ட
சோலைக்கிளி இங்கே
பாசமென்னும் வலையிலே
வாசமாக மாட்டிற்றே....

ஊரு பேரு தெரியாமல்
உண்மை பொய் அறியாமல்
உள்ளத்தில் உருவான நாமத்தை
உறவாக உதயமாக்க
உறுதி கொண்டே முயற்சித்தான்....

எண்ணத்தில் உருவான
பல வண்ணங்களும்
சின்னமாய் கண்டாள்
அவனிடத்தே....

உதட்டு வழி
உண்மையை தினம் ஒலிக்க
உண்மை அன்பு அதற்காய்
உள்ளத்தை உவந்தளித்தாள்.....

உவப்பான செய்தியொன்று - அவள்
காதில் ஊர்த்ததினால்
ஊர் உறக்கும் நேரத்திலும்
உறக்கமின்றி தவிக்கின்றாள்
அறியாமல் தவறேதும்
புரிந்திருந்தாலும் அவன்
அணுகாமல் தடுப்பதற்காய்
இடர் எதும் அவனருகே...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

போளூர் தயாநிதி said...

உதட்டு வழி
உண்மையை தினம் ஒலிக்க
உண்மை அன்பு அதற்காய்
உள்ளத்தை உவந்தளித்தாள்.....
parattukal....

Post a Comment