RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

அகரம்...


அன்னை மடியினிலே
அவதரித்த நாள் முதலாய்
அறிகின்றேன் பாரினிலே
அர்த்தங்கள் பல கொண்ட
அலைமோதும் அசைவுகளை

அனைத்து உயிர்க்கும்
அம்மா என்பது முதல் வார்த்தை - அதில்
அழகு தவழுது தனியாக
அன்பு பெருகுது
அணை போட முடியாமல்

அர்த்தமே காண முடியாத
அதிசய பொருட்கள் பலவாம்
அறிவும் அதில் ஒன்றாம்
அநியாயங்கள் பல நடக்குது - அதை
அடங்கவும் முடியவில்லை
அழிவை நாடிச் செல்ல
அவர்கள் தேடிச் சென்று
அயராது உழைக்கும் வழியது

அசைகின்ற பொருள் தொடங்கி
அசையா பொருள் வரையும்
அகிலத்தில் அனைத்திலுமே
அகரம் நடத்துதே
அரசாட்சி இங்கே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

என்னதான் இருந்தாலும் அம்மா போல் இருக்குமா அன்பு, இல்லையா........
சூப்பர் கவிதை....

சிவரதி said...

நாஞ்சில் மனோ
வருகையை வரவேற்றே
வாழ்த்துகள் வரைந்ததற்கு
வழங்குகிறேன் நன்றியினை

Post a Comment