கண்மூடி முழிக்கையிலே
காலை பொழுதுபல
கடந்தே செல்லுது - தினம்
கணனியின் வேகத்தில்
கடிகாரத்தின் கால்களும்
கடின நடை போடுதிங்கே - ஆனால்
கல்லூரியில் கலந்து
கற்குந்தியில் உட்கார்ந்து
கதைபேசி மகிழ்ந்து
காரணமே இல்லாமல் - பல
கள்ளத்தனம் செய்த
காலத்தில் இனைந்த நட்பு.
காலத்தின் வேகத்திலே
கலந்து ஓடி விடாது
கயவர்களின் துற்றலுக்கு அஞ்சி
கரையொதுங்காது
கண்டம் கடந்து சென்றும்
கணியின் துணை நாடி - பாச
கணைகளை தொடுக்குதிங்கே
காலத்தின் பாதையிலே
காலன் அவன் கயிற்றினால்
கட்டுண்டு கல்லறைக்கு சென்றவரே
காற்றினிலே நீவிர் சொல்லும் சேதி
காதோரம் ஒலிக்கிறது.
கரைபோட முடியவில்லை - எண்ணு
கணக்கு எதும் இதற்கில்லை
காலதி காலமெல்லாம் கடந்து
காவியம் படைகிறது
கல்லூரி நட்பினிலே.....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment